states

img

ஐந்து நாட்களுக்கு கனமழை: வானிலை ஆய்வு மையம்

சென்னை, நவ.11- தமிழ்நாட்டில் அடுத்த 5 நாட்க ளுக்கு இடி மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை கடந்த அக்டோபர் 29 ஆம் தேதி தொடங்கியது. இதை யடுத்து தமிழ்நாட்டின் பல்வேறு  மாவட்டங்களில் பரவலாக கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் வங்கக்கடல் பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்ற ழுத்த தாழ்வு நிலையாக இன்று வலுப்பெற்றுள்ளது. இதுகுறித்து, சென்னை தென் மண்டல வானிலை ஆய்வு மையத் தலைவர் கே.பாலச்சந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் கூறியதாவது: தென்மேற்கு வங்கக் கடலில் நிலவி வந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்று உள்ளது. இத னால் மயிலாடுதுறை, கொள்ளி டத்தில் 13 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. கடலூர் மற்றும்  டெல்டா மாவட்டங்களில், ஓரிரு  இடங்களில் அதி கனமழைக்கு வாய்ப்புள்ளது.  மேற்கு தொடர்ச்சி  மலையை ஒட்டியுள்ள மாவட்டங் களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதியில் அடுத்து வரும் 3 நாட்க ளுக்கு மழை தொடரும். 40 முதல்  45 கிலோ மீட்டர் வேகத்தில் காற்றின் வேகம் இருக்கும். சென்னை நுங்கம்பாக்கத்தில் 7 சென்டி மீட்டர் மழை பதிவாகி யுள்ளது.

சென்னையில்   மழை அளவு அதிகம்

வடகிழக்கு பருவமழை தொடங்கியது முதல் இதுவரை  247 மில்லி மீட்டர் பழை பதிவாகி யுள்ளது. இது இயல்பைவிட 3 விழுக்காடு குறைவு. சென்னை யில் பதிவான அளவு 509 மில்லி  மீட்டர். இது இயல்பை விட 20  விழுக்காடு அதிகம்.  காஞ்சிபுரம்,  ராணிப்பேட்டை, திருவள்ளூர் மாவட்டங்களுக்கு கொடுக்கப் பட்டு இருந்த சிவப்பு எச்சரிக்கை (ரெட் அலர்ட்) திரும்ப பெறப்படுகிறது. இவ்வாறு அவர் தெரிவித் தார். தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் நவம்பர் 15 வரை ஒருசில இடங்க ளில் இடி மின்னலுடன் கூடிய  லேசானது முதல் மிதமான  மழைக்கும், பல இடங்களில் கன மழைக்கும் வாய்ப்பிருக்கிறது.

புயல் உருவாக             வாய்ப்பு இல்லை

வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி ஒன்று  உருவானது. இது தென்மேற்கு வங்கக்கடலில் இலங்கை கடலோர பகுதிகளை ஒட்டி நிலவி வருகிறது.இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்று தமிழகம், புதுவை கடற்கரையை நோக்கி நகரும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருந்தது.  அதன்படி குறைந்த காற்ற ழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைந்தது. இதனால் தமிழகத்தில் வருகிற 14 ஆம் தேதி வரை சென்னை உட்பட பெரும்பாலான மாவட்டங்களில் அதி கனமழைக்கு வாய்ப்பு உள் ளது. ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக மாற வாய்ப்பு இல்லை. அது மேலும் வலு குறைந்து கரையை கடக்கும். ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வடமேற்கு திசையில் தமிழ கம், புதுச்சேரி நோக்கி நகர்ந்து  வருகிறது.மேலும், தமிழகத்தில் உள்ள டெல்டா மாவட்டங்களில் அதிகன மழை பெய்யும். மேலும், குமரிக்கடல், தென்மேற்கு மற்றும் மத்திய மேற்கு வங்கக் கடலுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம்.