states

img

தமிழ்க்கலை மரபினை வளர்க்க தமிழ்ப்பல்கலைக்கழகம், சிங்கப்பூர் தமிழ் மரபுடைக் கழகமும் புரிந்துணர்வு ஒப்பந்தம்

தஞ்சாவூர், ஏப்.10- தமிழக அரசின் நிதி நல்கையில் தமிழ்ப்பல் கலைக்கழகத்தில் உருவாக்கப்பட்டுள்ள தமிழ்ப்பண்பாட்டு மையத்துடன் சிங்கப்பூர் தமிழ்  வரலாற்று மரபுடைக் கழகம் தர வகுப்புகள் நடத்து வதற்குரிய புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது.  சிங்கப்பூரின் தமிழ் வரலாற்று மரபுடை மைக் கழகம் கடந்த சில ஆண்டுகளாகத் தமிழர் வரலாற்றையும் மரபுகளையும் தென்கிழக்காசியா விற்கு, குறிப்பாகச் சிங்கப்பூர், மலேசிய நாடு களுக்குக் கொண்டு செல்லும் வண்ணம் நிகழ்ச்சி களையும் பயிற்சிப் பட்டறைகளையும் நடத்தி வருகின்றது.  அவற்றுள், இராசேந்திர சோழன் அரியணை ஏறிய ஆயிரமாவது ஆண்டு விழா, இராசேந்திர சோழன் திருவுருவப் பட அறிமுக விழா ஆகியவை குறிப்பிடத் தக்கவையாகும். இப்புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் பொழுது தமிழ்ப்பல்கலைக்கழக துணைவேந்தர் பேரா சிரியர் வி.திருவள்ளுவன் கூறுகையில், ‘‘சிங்கப்பூர், மலேசியா போன்ற தென்கிழக்கா சிய நாடுகளில் தமிழ் இசை மற்றும் தமிழர் கலை களையும் கற்பிக்கும் தேவைகளை அறிந்து,

அவற்றை நிறைவேற்றும் வண்ணமாக  தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழக தமிழ்ப் பண்பாட்டு மையத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தைச் செய்துள்ளது.  இவ்வொப்பந்ததின் மூலம் தமிழ்ப்பண் பாட்டு மையத்தின் வாயிலாக நடத்தப்பெறும் குர லிசை, கருவியிசை, நாட்டுப்புறக்கலைகள், சிலம் பாட்டம் ஆகிய பாடப்பிரிவுகள் தமிழ் வரலாற்று மரபுடைக்கழகத்தின் வாயிலாக நடத்தப்பெற்று தமிழ்ப்பல்கலைக்கழகம் வழி தேர்வுகள் நடத்த வும் சான்றிதழ் வழங்கவும்  வழங்க வகை செய்யப் படும்’’ எனத் தெரிவித்தார். தமிழ்ப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் வி.திருவள்ளுவன், சிங்கப்பூர் தமிழ் வரலாற்று மரபுடைமைக் கழகத்தின் தலைவர் ப. புருஷோத்தமனும் ஆகியோர் இவ்வொப்பந் தத்தைப் பரிமாறிக் கொண்டனர்.  இந்நிகழ்வில் தமிழ்ப் பண்பாட்டு மைய இயக்குநர் முனைவர் சி.தியாகராஜன், தமிழ்ப் பண்பாட்டு மைய இணை இயக்குநர் முனைவர் செ.கற்பகம், ஏழிசை இசை ஆய்வகத்தின் இயக்கு நர் முனைவர் இராச கலைவாணி ஆகியோர் உடனிருந்தனர்.