16 மாவட்டங்களில் ஊரடங்கு; துப்பாக்கிச் சூடு, ராணுவம் குவிப்பு!
இம்பால், மே 4- பாஜகவின் வாக்கு வங்கி அரசிய லால், மணிப்பூரில் பழங்குடி சமூகத்தி னருக்கும், பழங்குடி அல்லாத சமூகத்தி னருக்கும் இடையே மாநிலம் முழு வதும் பெரும் வன்முறை வெடித்துள்ளது. ‘மெய்டெய்’ மற்றும் ‘குக்கி’ பிரி வைச் சேர்ந்த மக்கள் பிரிவினர், தங்க ளுக்கு ‘உள்ளாக மாறி, மாறி கத்தி, அரி வாளுடன் மோதிக் கொண்டதுடன், வீடு கள், கடைகள், வாகனங்களுக்கும் தீ வைப்பில் இறங்கினர். வன்முறையைக் கட்டுக்குள் கொண்டுவர பல்வேறு இடங்களில் போலீஸ் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டு இருப்பதுடன், அசாம் ரைபிள்ஸ் மற்றும் ராணுவம் வரவழைக்கப்பட்டு பாது காப்பில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளது. 16 மாவட்டங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. மாநிலம் முழுவதும் 5 நாட்களுக்கு இணையச் சேவைகள் முடக்கப் பட்டுள்ளன. மணிப்பூர் மாநிலத்தில் பைரன் சிங் தலைமையில், பாஜக ஆட்சி நடை பெற்று வருகிறது. இங்கு வசித்து வரும் ‘மெய்டெய்’ (Meitei) என்ற பழங்குடி அல்லாத சமூகத்தினர் தங்களுக்கு ‘பட்டியல் பழங்குடியினர்’ (Scheduled Tribe) அந்தஸ்து வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வந்தனர். பேரணி, ஆர்ப்பாட்டம் போன்றவற்றையும் நடத்தி வந்தனர். இவர்கள் இம்பால் பள்ளத்தாக்கு உள்ளிட்ட பகுதிகளில் அதிக அளவில் இருப்பதால், வாக்கு வங்கிக்காக ஆளும் பாஜகவும் இவர்களுக்கு பழங் குடி அந்தஸ்து தருவதாக தூபம் போட்டது. ஆட்சிக்கு வந்தால் பழங்குடி அந்தஸ்து தருகிறோம் என உசுப்பேற்றி யது. அதன்படியே தற்போது பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்துவிட்டதால், கோரிக்கையை நிறைவேற்றித் தரு மாறு மெய்டெய் மக்கள் கோரிக்கை விடுக்கத் துவங்கினர். ‘மெய்டெய்’ மக்களுக்கு பழங்குடி அந்தஸ்து வழங்கும் விவகாரத்தில், உரிய முடிவு எடுக்குமாறு மணிப்பூர் உயர் நீதிமன்றமும் கடந்த ஏப்ரல் 19 அன்று மணிப்பூர் பாஜக அரசுக்கு உத்த ரவிட்டது. பாஜக அரசும் அதனை ஏற்றுக் கொண்டு, விரைவில் அறிவிப்பு வெளி யிடப்போவது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தி வந்தது.
இது பட்டியலில் ஏற்கெனவே இருக்கும் குக்கி உள்ளிட்ட பழங்குடி பிரிவினர் இடையே புகைச்சலை ஏற்படு த்தியது. அவர்கள், ‘மெய்டெய்’ மக்கள் பழங்குடி பட்டியலில் சேர்ப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்ததுடன், இக்கோரிக் கையை முன்வைத்து, ‘அனைத்து பழங்குடி மாணவர் சங்கம் மணிப்பூர் (ATSUM)’ அமைப்பு சார்பில், புதன்கிழ மையன்று மணிப்பூரின் மலைப்பகுதி களில் உள்ள சேனாபதி, உக்ருல், காங்போக்பி, தமெங்லாங், சுராசந்த்பூர், சண்டேல் மற்றும் தெங்னௌபல் ஆகிய 7 மாவட்டங்களில் ‘பழங்குடி யினர் ஒற்றுமை பேரணி’ நடத்தினர். ‘மெய்டெய்’ மக்களை பழங்குடிகளாக அறிவித்தால், எங்கள் நிலத்திற்கு பாது காப்பு இல்லை என்று முழக்கங்களை எழுப்பினர். மற்றொரு புறத்தில், இந்தப் பேர ணிக்குப் போட்டியாக, பழங்குடி அல்லா தோர் எதிர் பேரணி நடத்தினர். அப் போது, சுராசந்த்பூர் மாவட்டத்தில் இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. கத்தி, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் இருதரப்பினரும் மோதிக் கொண்டனர். இந்த மோத லின்போது, வீடுகள், கட்டடங்களுக்கும் தீ வைத்தனர். குறிப்பாக, மலையோர மாவட்டங்களில் வீடுகள், கடைகள், சாலைகளில் நிறுத்தப்பட்டிருந்த ஆயிரக்கணக்கான வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டன.
இந்த வன்முறை தொடர்பான வீடியோக்களை, சிலர் சமூக ஊட கங்களில் பரப்பி விட்டதால், இம்பால், சுராசந்த்பூர் மற்றும் காங்போக்பி மாவட்டங்கள் என புதிய பகுதி களுக்கும் வன்முறை பரவியது. தமி ழர்கள் அதிகளவில் வசிக்கும் மணிப்பூர் - மியான்மர் எல்லையோர கிராமமான மோரோ கிராமத்திலும் வன்முறை வெடித்தது. இங்கு 25-க்கும் மேற்பட்ட வீடுகளுக்கு தீ வைக்கப்பட்டன. மோத லில் பெண்கள், குழந்தைகள் உட்பட நூற்றுக்கணக்கானோர் படுகாயம் அடைந்துள்ளனர். மோதலை தடுக்க வரும் போலீசார் மீதும் இரு தரப்பினருமே தாக்குதல் நடத்துவதால், போலீசாரால் ஊருக் குள் நுழைய முடியாத நிலை ஏற்பட்டது. இதனால், மோதலை தடுக்க போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில், குக்கி இனத்தவர் 2 பேர் கொல்லப் பட்டதாகவும், பொதுமக்கள் சிலர் காய மடைந்ததாகவும் உறுதிப்படுத்தப் படாத தகவல்கள் வெளியாகியுள்ளன. இதையடுத்து, இந்த வன்முறை யைக் கட்டுப்படுத்தவும், சட்டம் மற்றும் ஒழுங்கை மீட்டெடுக்கவும் இந்திய ராணுவம் மற்றும் அசாம் ரைபிள் படைப் பிரிவுகள் மணிப்பூருக்கு வரவழைக் கப்பட்டன. அவர்கள், கலவரங்களுக்கு இடையே சிக்கி, பல்வேறு சமூகப் பிரிவுகளைச் சேர்ந்த மக்கள் சுமார் 7 ஆயிரத்து 500 பேர் மாட்டிக்கொண்டு தவித்த நிலையில், அவர்களை பாது காப்பாக வெளியேற்றும் பணியை புதன் கிழமையன்று இரவு முதல் மேற்கொண் டனர். மேலும், வன்முறை பரவாமல் தடுக்கும் நோக்கில், மணிப்பூர் மாநிலம் முழுவதும் 5 நாட்களுக்கு இணையதள சேவைகள் துண்டிக்கப்பட்டு உள்ளன. மேலும், வன்முறையை கட்டுப்படுத்த 8 மலை மாவட்டங்களில் முழுமையாக வும், 16 மாவட்டங்களில் பெரும்பாலான பகுதிகளிலும் 144 ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. கூடுதல் பாதுகாப்பிற்காக ராணு வம், துணை ராணுவம் மற்றும் அதிரடி படையினர், மணிப்பூரின் பல பகுதிகளி லும் குவிக்கப்பட்டு உள்ளனர். வன் முறை நடந்த பகுதிகளில் ராணுவம் மற்றும் அசாம் ரைபிள் படையினர் வியா ழனன்று கொடி அணிவகுப்பு நடத்தினர். முன்னதாக, ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, மணிப்பூர் முதல்வர் பைரன் சிங்கை புதனன்று தொலைபேசி வழியே தொடர்பு கொண்டு பேசினார். அப்போது, மணிப்பூர் மாநில சட்டம் - ஒழுங்கு நிலைமைகளை கேட்டறிந்தார்.