states

முதல்வருக்கு மாதர் சங்கம் நேரில் நன்றி தெரிவிப்பு

சென்னை,மார்ச் 24-  செப்டம்பர் 15 ஆம் தேதி முதல் மகளி ருக்கு உரிமைத் தொகையாக மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று அறி வித்தமைக்காகவும், ஆன்லைன் ரம்மியை தடை செய்வதற்காக மீண்டும் சட்டமுன்வடி வினை சட்டப்பேரவையில் நிறைவேற்றி யமைக்காகவும் முதலமைச்சர் மு.க.ஸ்டா லினை ஜனநாயக மாதர் சங்கத் தலைவர் கள் மார்ச் 24 அன்று தலைமைச் செயல கத்தில் நேரில் சந்தித்து நன்றி தெரிவித்துக் கொண்டனர்.  இதில் அனைத்திந்திய ஜனநாயக மாதர்  சங்கத்தின் தேசியச் செயலாளர் பி.சுகந்தி,  மத்தியக்குழு உறுப்பினரும் முன்னாள் சட்ட மன்ற உறுப்பினருமான கே.பாலபாரதி, மாநி லத் தலைவர்  எஸ். வாலண்டினா, மாநிலப் பொதுச் செயலாளர் அ. ராதிகா, மாநிலப் பொருளாளர் ஞா. பிரமிளா ஆகியோர் சந்தித்து, நன்றியை தெரிவித்தனர். இது குறித்து மாதர் சங்கம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு வருமாறு: 2021 இல் திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் தமிழகத்தில்  பெண்கள் உரிமைகளைப் பாதுகாக்க எடுத்து வரும் நடவடிக்கைகளையும், செய்து வரும் அறிவிப்புகளையும் அனைத்திந்திய ஜனநா யக மாதர் சங்கத்தின் சார்பில் வரவேற் கிறோம்.  குறிப்பாக மகளிர் கொள்கை உருவா க்கல்,  மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதிச் சட்டத்தில் பணிபுரியும்  பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்களில் 50 நாள் கூடுதல் வேலை, தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு திட்டத்தின் கீழ் வழங்கப் படும் குடியிருப்புகளுக்கு பட்டா பெண்களின் பெயரில்  வழங்கப்படுவது,

அரசு பணிகளில் பெண்களுக்கு   40 சதவீதம் இட ஒதுக்கீடு, அரசு நகரப்பேருந்துகளில் பெண்களுக்கு கட்டண மில்லா பஸ் பயணம், திருநர் நலவாரிய புன ரமைப்பு போன்றவற்றைக் குறிப்பிடலாம்.  அந்த வகையில் பெண்களுடைய வீடு சார் உழைப்பு கண்ணுக்குத் தெரியாத உழைப் பாக இருந்து வருகிற சமூக அமைப்பில், வீடு சார் உழைப்பை அங்கீகரித்து, தேர்தல் வாக் குறுதியின் படி,  நிதிநிலை அறிக்கையின் போது அறிவித்திருக்கிற மகளிருக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உரிமைத்தொகை  என்பது  தமிழக பெண்கள் மத்தியில் மிகுந்த எதிர் பார்ப்பையும், மகிழ்ச்சியையும் ஏற்படுத்தி யுள்ளது. தற்போதுள்ள கடும் பொருளாதார நெருக்கடியில், இத்தொகை தேவைப்படும் குடும்பங்கள் ஏராளம். கணவர் இருந்தாலும் அவரது ஊதியம் சொற்பமாக இருக்கிற அல்லது  வீடு வந்து சேராத  குடும்பங்கள் பல்லாயிரம் உண்டு. எனவே நிபந்தனைகள்  இன்றி அனைத்து பெண்களும் பயன் பெறக்கூடிய விதத்தில் இத்திட்டத்தை அமைத்திட வேண்டும்.   ஆன்லைன் சூதாட்டத்திற்கு எதிராக சட்டமன்றத்தில் மீண்டும்  ஏகமனதாக சட்டம் நிறைவேற்றியுள்ள தமிழக அரசை அனைத் திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் சார்பாக பாராட்டுகிறோம். மேலும் சாதிய, பாலின பாகு பாடுகளை களைய கருத்தியல் ரீதியான தொடர் பரப்புரைக்கு நிதி ஒதுக்கி உகந்த ஏற்பாடுகளை செய்ய வேண்டும்.