states

மீனவர் கிராமங்கள்-வாழ்விடங்களை பாதுகாக்க கீழமுந்தலில் கடல் அரிப்பு தடுப்பு பாதுகாப்பு மாநாடு

இராமேஸ்வரம், நவ.27- மீனவர் வாழ்விடங்களையும் மீன வர் கிராமங்களையும் காப்பாற்றக் கோரி மாபெரும் கடல் அரிப்பு தடுப்பு  பாதுகாப்பு மாநாட்டை கீழமுந்தலில் நடத்தப்படுகிறது. தமிழ்நாடு மீன்பிடி தொழிற்சங்க கூட்டமைப்பின (சிஐடியு) மாநில நிர்வாகிகள் கூட்டம் நவம்பர் 26  அன்று மாநிலத் தலைவர் வழக்க றிஞர் ஜி.செலஸ்டின் தலைமையில் இராமேஸ்வரத்தில் நடைபெற்றது. மாநில செயல் தலைவர் எம்.கருணா மூர்த்தி மற்றும் மாநில நிர்வாகிகள்  கலந்து கொண்டனர்.இதில் கீழ்க்  கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன. இராமநாதபுரம் மாவட்டத்தில் பல  கடலோர கிராமங்கள் கடல் அரிப்பால்  பாதிக்கப்பட்டுள்ளன. கடலாடி தாலுகா கீழமுந்தல் கிராமம் கடல்  அரிப்பால் பாதிக்கப்பட்டு மீனவர்களு டைய படகு நிறுத்த, வலைகளை ஒழுங்குப்படுத்த, கரைவலை மீன் பிடிப்பு செய்யக் கூட இடமில்லாத அளவிற்கு மீனவர்கள் இதுவரை பயன்படுத்தி வந்த நிலங்கள் பெரு மளவில் கடலுக்குள் மூழ்கியுள்ளது

எனவே தமிழக அரசு கடல் அரிப்பை தடுக்க, படகுகளை பாது காப்பாக நிறுத்த போர்க்கால அடிப்ப டையில் தூண்டில் வளைவு அமைத்து தருவதோடு கடற்கரையோர அரசு மற்  றும் தனியார் நிலங்களில் சவுக்குமர கன்றுகளும், பனைவிதைகளும்  வளர்ப்பது கட்டாயமாக்கப்பட வேண்  டும். அதற்கு தேவையான நிலத்தை  கடற்கரை ஓரத்தில் இருக்கக்கூடிய தனியார் பட்டா நிலங்களில் குறிப்  பிட்ட பகுதி நிலத்தை அரசு கைய கப்படுத்தி, அதில் மீனவர் பயன்பாட் டிற்கும் இடம் ஒதுக்கித் தந்து மேலே குறிப்பிட்டுள்ள வேலைகளை வனத்  துறை அல்லது ஊராட்சி அமைப்பு (நூறு நாள் வேலை திட்டம்) மூலமாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.  மேலும் தனியார் பட்டா நிலங்க ளில் வணிக நோக்கில் கட்டுமானங் கள் ஏற்படுவதை தடுப்பதுடன் கடல் நீர் உட்புகாமல் தடுத்து வரும் மணல் தீடைகளையும் பனைமரங்களையும்  காட்டு மரங்களையும் அரசின் அனு மதி பெறாமலே ரிசார்ட் மற்றும்  கேளிக்கை விடுதிகள் அமைப்பதற் காக அகற்றிய மேற்படி நிலங்களின் உரிமையாளர்கள் மீது சட்டபூர்வ மான நடவடிக்கை எடுக்க வேண்டும்.  இது விசயத்தில் நடைபெற்ற விதி மீறல்களை தடுக்கத் தவறிய வனத் துறை நிர்வாகம் மீது துறைரீதியான நடவடிக்கையும் மேற்கொள்ள வேண்டும். 

சி.ஆர்.இசட் (CRZ) கடற்கரை மண்டல மேலாண்மை திட்டம் 2019-ஐ  நாடு தழுவிய அளவிலான மீனவர்கள்  எதிர்ப்பை தொடர்ந்து திருத்தி அமைப்  பதாக கூறிய ஒன்றிய அரசு தற் போது அதனை முன்பிருந்ததைவிட மிக மோசமான வகையிலான திட்ட மாக தயாரித்து அதில் கூடுதலாக  சிஇசட்எம்பி (CZMP) என்று சொல் லக்கூடிய வரைவு படம் ஒன்றையும் சேர்த்து வெளியிட்டுள்ளது. இதில் ஏராளமான மீனவர் கிராமங்களும் மீன வர் பயன்பாட்டு நிலங்களும் திட்ட மிட்டே விடுபட்டுள்ளதை ஆட்சேபித் தும் மீனவர் வாழ்விடங்களையும் மீன வர் கிராமங்களையும் காப்பாற்ற வேண்டும் என வலியுறுத்தியும் மாபெ ரும் கடல் அரிப்பு தடுப்பு பாதுகாப்பு மாநாட்டை கீழமுந்தலில் டிசம்பர் முதல் அல்லது இரண்டாவது வாரத்  தில் நடத்துவது என்று முடிவு செய் யப்பட்டது.  இந்த மாநாட்டில் சிஐடியு அகில இந்திய தலைவர் டாக்டர் ஹேமலதா, அகில இந்திய செயலாளர் ஆர். கருமலையான் மாநில நிர்வாகிகள் பங்கேற்கின்றனர்.