states

வைரஸ் காய்ச்சல் எதிரொலி : மார்ச் 10 1,000 இடங்களில் சிறப்பு மருத்துவ முகாம்

சென்னை, மார்ச் 5- வைரஸ் காய்ச்சலால் ஏராளமா னோர் பாதிக்கப்பட்டு வரும் நிலையில் வரும் 10ஆம் தேதி, தமிழ்நாடு முழு வதும் ஆயிரம் இடங்களில் காய்ச்சல் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற உள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரி வித்துள்ளார். உலக சிறுநீரக தினம் மார்ச் 9ஆம் தேதி அனுசரிக்கப்பட இருக்கும் நிலை யில் இதுகுறித்து மக்களிடம் விழிப் புணர்வை ஏற்படுத்தும் வகையில் தனி யார் மருத்துவமனை சார்பில் சிறுநீரக உடல்நல விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம் சென்னை பெசன்ட் நகரில் நடை பெற்றது. 5 கிலோ மீட்டர் வரை நடை பெற்ற இந்த விழிப்புணர்வு ஓட்டத்தில் சிறுவர்கள், இளைஞர்கள், பெண்கள் என ஏராளமானோர் கலந்து கொண்ட னர். பின்னர் அமைச்சர் மா.சுப்ரமணி யன் செய்தியாளர்களிடம் பேசுகையில், ‘சிறுநீரக பாதிப்புகளை ஆரம்பத்தி லேயே கண்டறிந்து அதற்குரிய சிகிச்சை களை எடுத்துக் கொள்வது நல்லது. வைரஸ் காய்ச்சலால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டு வரும் நிலையில் வரும் 10ஆம் தேதி தமிழ்நாடு முழு வதும் 1000 இடங்களில் காய்ச்சல் சிறப்பு  மருத்துவ முகாம் நடைபெற உள்ளது. இதில் சென்னையில் மட்டும் 200 முகாம் கள் நடைபெறும் என்றார். தமிழ்நாட்டில் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்காக மறைந்த முதல்வர் கருணாநிதி சிறப்பு பிரிவை ஏற்படுத்தினார். அன்று முதல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் நாட்டி லேயே முன்னோடி மாநிலமாக தமிழ் நாடு விளங்குகிறது. உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் ஒன்றிய அரசு ஒருங்கிணைப்பை கொண்டு வந்தாலும் அதிலும் தமிழ்நாடு சிறப்பாக செயல் படும் என்றும் அவர் கூறினார். மேலும், ‘’பீகார் மாநில தொழிலா ளர்கள் விவகாரத்தில், பாஜகவினர் போலி வீடியோக்களை பரப்புகிறார் கள். ஆனால் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தமிழ்நாடு அரசின் செயல்பாடுகளுக்கு பாராட்டு தெரி வித்துள்ளார். இதன் மூலம் பாஜக வின் இரட்டை நிலைப்பாட்டை புரிந்து கொள்ள முடிகிறது என்றும் அவர் கூறினார்.