சென்னை, மே 29- சர்வதேச பசி தினத்தை முன்னிட்டு உணவை வீணடிக்காமல் பாதுகாத்து மற்ற வர்களுக்கு வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி சென்னை பெசன்ட் நகரில் விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டப்பந்தயம் நடைபெற்றது.அமைச்சர் மா. சுப்பிரமணி யன் தொடங்கி வைத்தார். சர்வதேச பசி தினம் உலகம் முழுவதும் மே 28 அன்று கடைப்பிடிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு சென்னை பெசன்ட் நகர் கடற்கரை யில் மாரத்தான் போட்டியை அமைச்சர் மா.சுப்பிரமணியன், பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் கொடியசைத்து துவக்கி வைத்த னர். புட் பேங்க் சென்னை நிறுவனர் சினேகா மோகன்தாஸ் தலைமை வகித்தார். இந்த நிகழ்வில் 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். மாற்றுத் திறனா ளிகள் வீல் சேரில் அமர்ந்தபடியே உதவி யாளர்களின் ஒத்துழைப்புடன் பங்கேற்றனர். இந்த போட்டியில் பங்கேற்றவர்கள் அனை வருக்கும் சான்றிதழ்கள் மற்றும் பதக்கங் கள் வழங்கப்பட்டன. மேலும் அவர்களை ஊக்குவிக்கும் விதமாக நடன நிகழ்ச்சியும் நடைபெற்றது.