173 வருடங்கள் (1850- 1900) இல்லாத அளவில் கடந்த 8 ஆண்டுகள் (2015-2022) அதிக வெப்பமான காலகட்ட மாக மாறியுள்ளதாக ஐ.நா. வின் உலக வானிலை அமைப்பு (2022) தனது அறிக்கையில் கூறி யுள்ளது.
கர்நாடகாவில் பாஜக எம்எல்ஏக்கள், மூத்த தலைவர்கள் பலர் காங்கி ரஸ், ஜேடிஎஸ் கட்சி களுக்கு தாவி வரும் நிலையில், பாஜக முன் னாள் எம்எல்ஏ-வும், முக்கிய லிங்காயத் தலை வருமான விஸ்வநாத் பாட்டீல் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். மேலும் மற்றொரு பாஜக தலைவரான அரவிந்த் சவுகானும் காங்கிரஸில் இணைந்தார்.
கலால் கொள்கை வழக்கு தொடர்பான குற்றப்பத்தி ரிகையில் தனது பெயரை அமலாக்க இயக்குனர கம் தவறாகப் பயன் படுத்தியுள்ளதாக ஆம் ஆத்மி எம்பி சஞ்சய் சிங் அமலாக்க இயக்குனர கத்திற்கு அவதூறு நோட் டீஸ் அனுப்பியுள்ளார். அமலாக்க இயக்குனரக அதிகாரிகள் 48 மணி நேரத்திற்குள் மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லையென்றால் சட்ட நடவடிக்கைக்கு தயாராக இருக்க வேண்டும் என ஆம் ஆத்மி எம்பி சஞ்சய் சிங் நோட்டீஸில் குறிப் பிட்டுள்ளார்.
சேலம் மாவட்டம் கன்னங் குறிச்சியில் புது ஏரியில் குளித்தபோது சேற்றில் சிக்கி 12-ஆம் வகுப்பு மாணவர்கள் பிரசாந்த், பாலாஜி உயிரிழந்தனர்.
மிதமான குளிர் கொண்ட பகுதியான தில்லியில் கடந்த சில மாதங்களாக 40 டிகிரி செல்ஸியஸ் அள விற்கு வெயில் கொளுத்தி வரும் நிலையில், அடுத்த 5 நாட்களில் வெப்பம் குறைய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
மக்களவை உறுப்பினர் பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்ததை அடுத்து தில்லியில் உள்ள தனது அரசு பங்களாவை முறைப் படி காலி செய்து, பங்களாவின் சாவியை முறைப்படி அதிகாரிகளி டம் ஒப்படைத்தார் காங்கி ரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி.
இந்தியாவில் கொரோனா உயிரிழப்பு குறைவதற்கு இட்லி, தேநீர், மஞ்சள் ஆகியவை முக்கிய காரணமாக இருந்ததாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசி எம்ஆர்) அறிக்கையில் கூறியுள்ளது.
மனிதர்களை விண் ணுக்கு அனுப்பும் ககன்யா ன் திட்டத்துக்கான பணி கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 2024-ஆம் ஆண்டு பிப்ரவரியில் ககன்யான் திட்டத்தின் முழுமையான சோதனை மேற்கொள்ளப்படும் என இஸ்ரோ தலைவர் சோம் நாத் தகவல் தெரிவித் துள்ளார்.
எடப்பாடி பழனிசாமி யை அதிமுக பொதுச்செய லாளராக தேர்தல் ஆணை யம் அங்கீகரித்ததை எதிர்த்து தில்லி உயர்நீதி மன்றத்தில் ராம்குமார் ஆதித்தன் மற்றும் சுரேன் பழனிசாமி ஆகியோர் வழக்கு தொடர்ந்துள்ள னர்.
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே பெரும்பேடு கிராமத்தில் மின்னல் தாக்கி சர வணன் (43) என்ற விவ சாயி உயிரிழந்தார்.
உலகச் செய்திகள்
மீண்டும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்று அர்ஜெண்டினாவின் தற்போதைய ஜனாதிபதி ஆல்பெர்ட்டோ பெர்னாண்டஸ் அறிவித்துள்ளார். நடப்பாண்டு இறுதியில் புதிய ஜனாதிபதியைத் தேர்வு செய்வதற்கான தேர்தல் நடக்கவிருக்கிறது. மக்களால் தேர்வு செய்யப்படுபவரிடம் பொறுப்பை ஒப்படைப்பேன் என்று மக்களுக்கு காணொளி செய்தி வாயிலாக இந்த செய்தியை வெளியிட்டுள்ளார்.
வெள்ளிக்கிழமை(ஏப்ரல் 21) முதல் மூன்று நாட்களுக்கு போர் நிறுத்தத்திற்கு சூடான் ராணுவம் ஒப்புக் கொண்டது. கடந்த இரண்டு வாரமாக சூடானில் ராணுவத்திற் கும், துணை ராணுவத்திற்கும் இடையில் சண்டை நடைபெற்று வரு கிறது. ரம்ஜான் கொண்டாட்டங்களுக்காக இந்தப் போர் நிறுத்தத் திற்கு ஒப்புக் கொள்வதாக ராணுவம் அறிவித்துள்ளது. துணை ராணுவப் படையினரும் இதை ஏற்றுக் கொண்டு நடைமுறைப் படுத்துவார்கள் என்று நம்புவதாகவும் ராணுவம் கூறியிருக்கிறது.
பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா மற்றும் தென் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகள் அடங்கிய பிரிக்ஸ் அமைப்பு மேற்கொண்டு வரும் அந்நியச் செலாவணி குறித்த செயல்பாடுகளைப் பின்பற்றப் போவதாக இந்தோனேசியா அறிவித்துள்ளது. பிரிக்ஸ் மற்றும் உலகின் பல நாடுகள் டாலருக்குப் பதிலாக அவரவர் நாணயங்க ளைப் பின்பற்ற முடிவு எடுத்து வருகின்றன. இந்நிலையில் ஆசியா வின் முக்கிய பொருளாதாரங்களில் ஒன்றாக இந்தோனேசியாவும் இதைப் பின்பற்றப் போகிறது.