states

அரசுப் பள்ளிகளில் நாளை நிர்வாகக் குழு கூட்டம்: பெற்றோர் பங்கேற்க ஏற்பாடு

சென்னை, அக். 26- அரசுப் பள்ளிகளில் மேலாண்மை  குழு கடந்த ஏப்ரல் மாதம் அமைக் கப்பட்டது. முதலில் தொடக்கப் பள்ளிகளும், அதனை தொடர்ந்து  உயர்நிலை மற்றும் மேல் நிலைப் பள்ளிகளுக்கும் நிறுவப்பட்டது. பள்ளி மேலாண்மை குழுவில் தலைமை ஆசிரியர், அந்த பகுதி  கவுன்சிலர், இல்லம் தேடி கல்வி தன்னார்வலர், பெற்றோர் என  மொத்தம் 20 பேர் இடம் பெற்றுள் ளனர். ஒவ்வொரு மாதமும் முதல் கடைசி வெள்ளிக்கிழமை அன்று பள்ளி மேலாண்மைக் குழு கூட்டம் கூடி வளர்ச்சி பணிகள் குறித்த முடிவுகளை எடுத்து வருகின்றனர். பள்ளியை மேம்படுத்துவதற்கான பணிகள், கட்டமைப்பு வசதிகள், கழிவறை, குடிநீர் வசதி, விளை யாட்டு மைதானம், ஆசிரியர் பற்றாக் குறைக்கு மாற்று ஏற்பாடு, மாண வர்கள் இடைநிற்றலை குறைத்து  பள்ளிக்கு முறையாக வரவழைத் தல் உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சிக் குரிய திட்டங்கள் குறித்து இந்தக் கூட்டத்தில் ஆலோசிக்கப்படுகிறது. இந்த மாதத்திற்கான மேலாண் மைக் குழு கூட்டம் அக். 28ஆம் தேதி  மாலை 3 மணி முதல் 4.30 மணி  வரை நடைபெறுகிறது. வட்டார மற்றும் மாவட்ட அளவில் கல்வி  அதிகாரிகள் இதனை கண்காணிக் கிறார்கள். இதற்கான சுற்றறிக்கை பள்ளிக் கல்வித்துறை மூலம் அனுப்பப்பட்டுள்ளது. அதில் பல  பள்ளிகளில் துறைக்கான செய லியை இதுவரையிலும் நடை முறைப்படுத்தவில்லை.   தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை செயலியில் இந்த மாதத்திற்கான பள்ளி மேலாண்மைக் குழு திட்டத்தை தலைமை ஆசிரியர்கள் கொண்டுவர வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அரசு  பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை  அதிகப்படுத்த கற்றல் மற்றும் பயிற்றுவிப்பதை மேம்படுத்த வேண்டும் என அதில் குறிப்பிடப் பட்டுள்ளது.