states

img

ஆசிரியர் நியமன ஊழல் வழக்கில் மம்தாவின் மருமகன் ஆஜர்

மேற்குவங்க அரசுப் பள்ளிகளுக்கு ஆசிரி யர்களை நியமித்ததில், அம்மாநில முதல்  வர் மம்தா பானர்ஜியின் சகோதரர் மகனும்,  திரிணாமுல் காங்கிரஸ் கட்சி யின் பொதுச் செயலாளரும், எம்பி யுமான அபிஷேக் பானர்ஜி ஊழல்  செய்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக அம லாக்கத்துறை வழக்குப் பதிவு செய்துள்ள நிலையில், சமீபத்தில் அமலாக்கத்துறை அபிஷேக் பானர்ஜிக்கு சம்மன் அனுப்பியது. இந்நிலையில், அபிஷேக் பானர்ஜி கொல்கத்தாவில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் புதனன்று  காலை 11:30 மணி அளவில் நேரில் ஆஜரானார். ஆசி ரியர் முறைகேடு தொடர்பாக பல்வேறு கேள்வி களை அமலாக்கத்துறை அதிகாரிகள் எழுப்பியதாக தகவல் வெளியாகி உள்ளது.