states

img

கணக்கோடு கை கோர்க்கலாம் - மொ.பாண்டியராஜன்

அலெக்சாண்டிரியா நூலகத்தில் உள்ள நூல்களை பராமரிக்கவும் பாதுகாக்கவும் வந்த கணிதவியல் விஞ்ஞானிதான் யூக்ளிட். இவர் முதல் தாலமி மன்னனின் கணித ஆசிரியராக இருந்துள்ளார். இவரை பற்றிய பெரிய தகவல்கள் நமக்கு கிடைக்க வில்லை என்பது ஆச்சரியம்தான். ஒரு நூலகத்தில் லட்சக்கணக்கான நூல்களோடு பயணித்தவரின் வரலாறு பதிவு செய்யப்படாமல் இருப்பது ஆச்சரியதக்க படத்தாகவே உள்ளது.

ஆனால் அவர் ஒன்றும் சும்மா இல்லை  என்பதை மட்டும் நாம் பார்க்க முடிகிறது.  அவரை பற்றிய செவி வழி செய்தி இரண்டு  இருக்கு.

1.    வடிவ கணிதம் கற்றிட தனித்த சிறந்த  வழி என்று ஒன்று இல்லை என்று  தாலமியிடம் கூறியதாக  உள்ள ஒரு செய்தி.

2.     இத்தேற்றம் படிப்பதனால் எனக் கென்ன பயன் என்று அடிக்கடி  ஒரு மாணவன் கேட்டானாம். தன்னு டைய மூளையை விசாலப்படுத்திக் கொள்ள பணப் பயனை எதிர் பார்க்கும் மடமையை கண்டு, அந்த மாணவனுக்கு காசை கொடுத்து வெளியே அனுப்பிவிட்டாராம் என் பது மற்றொன்று.

யூக்ளிட் நூலகத்தில் இருந்த அனைத்து புத்தகங்களையும் படிக்க ஆரம்பித்தார். அவர் ஒரு பெரிய கணித  கண்டுபிடிப்பாளர் இல்லை. ஆனால்  கணிதத்தை விரும்பி படித்தார். அதனால்  அவர் பல்வேறு விஷயங்களை ஒப்பிட்டுப்  பார்க்க முடிந்தது. வடிவியலில் பல்வேறு காலகட்டத்தில் கணித அறிஞர்களின் கண்டுபிடிப்புகள் தனித்தனியாக சிதறிக் கிடந்ததை அறிந்தார். ஒவ்வொருத்தரும் அவங்க அவங்க நோக்கத்திற்கு எழுதி வச்சிருந்தாங்க. இத பார்த்த யூக்ளிட் இதை ஏன் ஒருங்கிணைக்கக் கூடாது என்று  நினைத்தார். இப்படிதான் அவர் வடிவ கணிதத்தை செய்முறையின் அடிப்படை யில் முறைப்படி தொகுத்தார். அதுதான் அவருடைய வாழ்நாள் சாதனையாகும் என்று அப்போது அவருக்கு தெரியாது. அப்படி அவர் தொகுத்த புத்தகத்திற்கு பெயர் தான் எலிமெண்ட்ஸ் (Elements). இந்த புத்தகத்தில் அடிப்படை உண் மைகள், அடிப்படை செய்வழிமுறைக் கோட்பாடுகள் என்ற பெயர்களில் பதிவு செய்தார். 1.     அடிப்படை உண்மைகள் ஐந்தும் வடிவ கணித வடிவங்களைப் பற்றிய தாகும்.

-     எந்த ஒரு புள்ளியிலிருந்தும் எந்தவொரு புள்ளிக்கும் நேர்கோடொன்றை வரையலாம். -     நேர் கோட்டுத்துண்டை தொடர்ச்சியாக நேர் கோடாக நீட்டிக் கொண்டே போகலாம் -     எந்த ஒரு புள்ளியை மையமாகவும், எந்த ஒரு தொலைவை ஆரமாகவும் கொண்டு வட்டமொன்றை வரைய முடியும். - அனைத்து செங்கோணங்களும் ஒன்றுக்கொன்று சமமாகவே இருக்கும் - ஒரு நேர்கோட்டுத் துண்டுகளை குறுக்காக ஒரு நேர்கோடு வெட்டட்டும். இதனால் ஏற்படும் ஊட் கோணங்களின் கூடுதல் இரண்டு செங்கோணங்களுக்கும் குறைவாய் எப்பக்கத்தில் இருக்கின்றதோ, அப்பக்கத்தில் மேலே சொன்ன இரு நேர்கோட்டுத் துண்டுகளையும் நீட்டிக் கொண்டே சென்றால் அவை நிச்சயமாக சந்திக்கும். 2.     அடிப்படை வழிமுறைக் கோட்பாடு கள் - ஏதோவொன்றிற்கு சமானமாய் இருப்பவைகள் அனைத்தும் அவை களுக்குள் ஒன்றுக் கொன்று சமான மானவைகளாகவே இருக்கும். -    சமானமானதுடன் சமானமானதைச் சேர்த்தால் கிடைக்கும் முழுமையும் சமானமானதாகவே இருக்கும். -    சமானமானதிலிருந்து சமானமானதை எடுத்தால் கிடைக்கும் மீதமும் சமான மானதாகவே இருக்கும். -    ஒன்றின் மேல் ஒன்று பொருந்து பவைகள் அனைத்தும் அவைகளுக்  குள் ஒன்றுக்கொன்று சமானமானவை களாகவே இருக்கும்.  -     முழுமை என்பது எப்பொழுதும் அதன்  ஒரு பகுதியை விடப் பெரியதே. இந்த பத்து வெளிப்படை உண்மை மற்றும் ஆதாரங்களை கொண்டு யூக்ளிட்  ஆயிரத்திற்கும் மேற்பட்ட தேற்றங்களை உருவாக்கினார்.  இவற்றை 13 அத்தியாயங்களாக பிரித்து தொகுத்துள்ளார்.  இப்ப ஏன் இந்த புத்தகம் குறித்து இவ்வளவு அக்கறை என்றுதானே கேட்கு றீங்க. இந்த புத்தகம் தான் கிட்டத்தட்ட  2000 ஆண்டுகளுக்கான கணித நூலா கவே இருந்திருக்கிறது என்பதிலிருந்து நீங்கள் அதன் முக்கியத்துவத்தை அறிந்து கொள்ளலாம்.  நாம் கோடு ஒன்றை வரைந்து காட்டி னால் நீங்கள் சொல்லுவது என்னவாக இருக்கும்? கோடு என்பதோடு நின்று விடும். நின்றுவிட்டது. ஆனால் யூக்ளிட்  அப்படி நிற்க வில்லை. ஒரு புள்ளியில் தொடங்கும் கோடு மற்றொரு புள்ளியில் முடியும் என்பதை உறுதிசெய்வதிலிருந்து அவர் வேறுபடுகிறார். அவருடைய கணக்கோடு கை கோர்க்கலாம். வாருங் கள் தொடர்ந்து பயணிக்கலாம்.