states

தீக்கதிர் விரைவு செய்திகள்

2024 தேர்தலிலும் மகா விகாஸ் அகாதி கூட்டணி!

“சிவசேனை கட்சியில் பிளவு ஏற்பட்டுள்ள நிலையிலும், களத்தில் இறங்கி பணியாற்றக் கூடிய  உண்மையான தொண்டர்கள் உத்தவ் தாக்கரேவின் பின்னால்தான் நிற்கின்றனர். தேர்தல்  வரும்போது இந்த உண்மை வெளிப்படும். 2024-ஆம் ஆண்டு நடைபெறும் மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தல், மக்களவைத் தேர்தல் ஆகியவற்றில் தேசியவாத காங்கிரஸ், சிவ சேனை, காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் கூட்டணி தொடரும். குடியரசுக் கட்சி உள்ளிட்ட சிறிய கட்சி களும் கூட்டணியில் இணைய வாய்ப்புள்ளது” என்று தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத் பவார் பேட்டியில் கூறியுள்ளார்.

‘இளைஞர்களுக்கு வேலை எப்போது?’

“அயோத்தியில் பிரம்மாண்டமாக கட்டப்படும் ராமர் கோயில் பணிகள் இந்த ஆண்டு இறுதிக்  குள் நிறைவடைந்து, 2024 ஜனவரி 1-ஆம் தேதி மக்களின் தரிசனத்துக்காக திறக்கப்பட்டு  விடும் என்று ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா சில நாட்களுக்கு முன்பு கூறியிருந்தார். இந்நிலை யில், ராமர் கோயில் திறப்புக்கு காலக்கெடு நிர்ணயித்தது மகிழ்ச்சி அளிக்கிறது... அதேபோல அரசுப் பணியிடங்களை நிரப்புவதற்கும், பொருளாதாரத்தை சீரமைப்பதற்கும் காலக்கெடுவை நிர்ண யிக்குமாறு பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரை கேட்டுக் கொள்கிறேன்” என்று காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பிரியங்க் கார்கே டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

‘பிரிட்டிஷாரைப் போல பாஜக மக்களை பிரித்தாள்கிறது’

“பாஜகவுக்கு மக்கள் ஆதரவு உள்ளது என்பதை நான் முற்றிலும் ஒப்புக்கொள்கிறேன். ஆனால் அவர்கள் பிரச்சாரம் செய்யும் விதத்தில், அவர்களுடன் யாரும் போட்டியிட முடியாது. அவர்களின் அரசியல் என்பது மக்களைப் பிரிப்பது. சில சமயங்களில் இந்து-முஸ்லிம்  என்றும், சில சமயங்களில் சாதிய ரீதியாகவும் அந்தப் பிரிப்பு தூண்டி விடப்படுகிறது. சமூகத்தை பிளவுப்படுத்துவது, வாக்குகளை பெறுவது, அதன்மூலம் அரசாங்கத்தை அமைப்பது என்று பிரிட்டிஷ்காரர்களை போல் பிரித்தாளும் ஆட்சிமுறையையே பாஜக நம்புகிறது” என்று சமாஜ்வாதி  கட்சித் தலைவர் அகிலேஷ் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

ராமரை வெறுமனே ‘கோயிலுக்குள்’ வைத்துப் பூட்ட முடியாது!

வெறுப்பு நிலத்தில் ராமர் கோயில் கட்டப்படுகிறது. பிரம்மாண்டமான அரண்மனையில் பக வான் ராமரை அடைத்து வைக்க முடியாது. நாங்கள் ஹே ராம் மீது நம்பிக்கை கொண்ட வர்கள், ஜெய் ஸ்ரீராம் மீது அல்ல. ஸ்ரீராமர் அயோத்தியிலோ அல்லது இலங்கையிலோ இல்லை.  ஆனால் ஸ்ரீராமர் ஷபரியின் குடிசையில் இருக்கிறார். ராமாயணத்திலிருந்து ராமர் ஓடிவிடு வாரா? இந்தியா இப்போது ராமருக்கு சொந்தமில்லையா? இப்போது ராமர் கோயிலுக்கு மட்டும்  சொந்தமா? இந்தியாவில் ராமர் மக்களின் இதயத்தில் வாழ்கிறார் என்று நம்பப்படுகிறது. நீங்கள்  ராமரை மக்களின் இதயத்திலிருந்து பறித்து அற்புதமான அரண்மையில் சிறை வைக்க முடியாது,  நீங்கள் ராமரை சிக்க வைக்க முடியாது என்று ராஷ்ட்ரிய ஜனதாதளம் தலைவர் ஜெகதானந்த் சிங் பாஜகவை விமர்சித்துள்ளார்.

டி.ஒய்.சந்திரசூட்டிற்கு உலகளாவிய தலைமைப்பண்பு விருது

அமெரிக்காவின் ஹார்வர்ட் சட்டக் கல்வி நிறுவனத்தின் சட்டத் தொழில் மையம் சார்பில் வழங்கப்படும் சர்வதேச தலைமைப்பண்பு விருதுக்கு, இந்திய உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்தியாவிலும் உலக அளவிலும் சட்டப் பணியில் சந்திரசூட் ஆற்றிவரும் வாழ்நாள் சேவையை அங்கீகரிக்கும் வகையில் இந்த விருது, புதன்கிழமையன்று (ஜன.11) இணையவழியாக வழங்கப்பட உள்ளது. இதே ஹார்வர்ட் சட்டக் கல்வி நிறுவனத்தில்தான், டி.ஒய். சந்திரசூட் 1983-இல் முதுநிலை சட்டப் படிப்பையும் (எல்எல்எம்) 1986-இல் நீதித்துறை அறிவியல் பிரிவில் ஆராய்ச்சி (எஸ்ஜேடி) படிப்பையும் முடித்து பட்டம் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

தில்லி இளம்பெண் குடும்பத்திற்கு ஷாருக்கான் நிதியுதவி

புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது இருசக்கர வாகனத்தில் சென்ற இளம்பெண் அஞ்சலி சிங், கார் மோதி சுமார் 12 கிலோ மீட்டர் தூரம் இழுத்துச் செல்லப்பட்டு துடிதுடிக்க உயிரிழந்த சம்பவம்  நாட்டையே உலுக்கியது. இந்நிலையில், இந்த சம்பவம் குறித்து அறிந்த பாலிவுட் நடிகர் ஷாருக்கான், உயிரிழந்த அஞ்சலி சிங் குடும்பத்துக்கு, தனது ‘மீர் பவுண்டேஷன்’ மூலம் நிதியுதவி  செய்துள்ளார். ஆனால், தொகை குறித்த விவரங்களை அவர் வெளியிடவில்லை. இதையடுத்து,  ஷாருக்கானின் இந்த தன்னடக்கத்தைப் பாராட்டி, அவரது ரசிகர்கள் ‘உங்களால் பெருமையடை கிறோம்’ (‘Proud of Shah Rukh Khan’) என்ற முழக்கத்தை டுவிட்டரில் டிரெண்டாக்கி உள்ளனர்.

‘கல்வி அறிவின்மையே மக்கள் பெருக்கத்திற்குக் காரணம்’

“பெண்கள் கல்வியறிவு பெற்றால் தான், மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் கட்டுப் படுத்தப்படும். இது இன்னும் குறையவில்லை, அதே விகிதத்தில் உள்ளது. பெண்கள் சிறப்பான முறையில் கல்வியறிவு பெற்றிருந்தால் அல்லது அவர்களுக்கு விழிப்புணர்வு இருந்திருந்தால், கர்ப்பம் தரிப்பதில் இருந்து தங்களை எவ்வாறு பாதுகாத்துக்கொள்வது என்பதை அவர்கள் அறிந்திருப்பார்கள். ஆண்கள் தங்கள் செயலின் விளைவைப் பற்றி சிந்திக்கத் தயாராக இல்லை. மேலும், பெண்கள் சரியாகப் படிக்காததால் அவர்களால் அதிகாரத்தை செலுத்த முடிய வில்லை. மக்கள்தொகை வளர்ச்சியைத் தடுக்க முடியவில்லை” என்று பீகார் முதல்வர் நிதிஷ்குமார் கூறியுள்ளார்.

ஏழைகள் முன்னேற்றத்தை பாஜக விரும்பவில்லை: தேஜஸ்வி

“பீகாரில் துவங்கியுள்ள சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு, அறிவியல்பூர்வமான தகவல்களை தரும். அதற்கேற்ப பட்ஜெட் மற்றும் சமூக நலத்திட்டங்களை உருவாக்க முடியும்.  ஆனால், பாஜக ஏழைகளுக்கு எதிராக உள்ளது. அது இந்த கணக்கெடுப்பு நடத்துவதை விரும்ப வில்லை” என்று ராஷ்ட்ரிய ஜனதாதளம் கட்சித் தலைவரும், பீகார் துணை முதல்வருமான தேஜஸ்வி கூறியுள்ளார்.

சத்ரபதி சிவாஜி மீது பாஜகவுக்கு உண்மையான மதிப்பு கிடையாது

“சத்ரபதி சிவாஜி மகாராஜை மகாரஷ்டிர ஆளுநர் பகத்சிங் அவமதித்த விவகாரம், அனை வராலும் கவனிக்கப்பட்டது. அடிப்படையில், பாஜக-வினர் சிவாஜியை ஒரு போதும் நேசித்த தில்லை. சில ஆண்டுகளுக்கு முன்பு பிரதமர் நரேந்திர மோடியை சத்ரபதி சிவாஜி மகாராஜா வுடன் ஒப்பிட்டு பலகைகள் வைக்கப்பட்டன. சிவாஜி மீதான அன்பு உண்மையாக இருந்திருந்தால், சிவாஜி மகாராஜை அவமானப்படுத்தியதற்கு பதில் சொல்லுமாறு முதல்வரும் (ஏக்நாத் ஷிண்டே),  துணை முதல்வரும் (தேவேந்திர பட்னாவிஸ்) ராஜ்பவன் (கவர்னர் மாளிகை) கதவை தட்டியிருப்பார்  கள். ஒட்டுமொத்த அரசும் தில்லி சென்று உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து இந்த  ஆளுநரை உடனடியாக மாற்ற வேண்டும் என்று சொல்லியிருக்கும். ஆனால் அது நடக்க வில்லை” என்று உத்தவ் பாலாசாகேப் தாக்கரே கட்சியின் மூத்தத் தலைவரும், மாநிலங்களவை எம்.பி.யுமான சஞ்சய் ராவத் கூறியுள்ளார்.

சமத்துவபுரங்கள் சீரமைப்பு

சென்னை, ஜன.9- தமிழகத்தில்  149  பெரியார் சமத்துவபுரங்க ளில் 190 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேற்கொண்ட  புதுப்பிக்கும் பணிகள் முடிவடையும் தருவா யில் உள்ளதாக ஆளுநர்  உரையில் தெரிவிக்கப் பட்டுள்ளது. நகர்ப்புறப் பகுதிகளில் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்திட, 20,990 கி.மீ. நீளமுள்ள நகர்ப்புற சாலைகள் 9,588 கோடி ரூபாய் செலவில் மேம்ப டுத்தப்படுமென சென்ற கூட்டத்தொடரில்  முதல மைச்சர் அறிவித்தார். இப்பணிகள் விரைவில் முடிக்கப்படும்.

குறுவை சாகுபடியில் சாதனை

சென்னை, ஜன.9- காவிரி டெல்டா பகுதியில் 5.28 லட்சம் ஏக்கர் பரப்பில் குறுவை நெல் சாகுபடி செய்து வரலாற்றுச் சாதனை  படைக்கப்பட்டதாக ஆளுநர் ரவி தெரிவித்தார். சட்டப்பேரவையில் அவர் ஆற்றிய உரையில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது. நீர்நிலைகளையும் கால்வாய்களையும் முன்கூட்டியே திட்டமிட்டுத் தூர்வாருவதில் முனைப்பான முயற்சிகளை மாநில அரசு மேற்கொண்டதாலும், நல்ல பருவமழை பெய்ததாலும், குறுவை சாகுபடிக்கு மேட்டூர் அணை, உரிய காலத்திற்கு 19 நாட்கள் முன்னதாகவே திறக்கப்பட்டது. மேலும், உழவர்க ளுக்கு 61.12 கோடி ரூபாய் மதிப்பிலான குறுவைத் தொகுப்பை அரசு வழங்கியுள்ளது. இவை காரணமாக, காவிரி டெல்டா பகுதியில் 5.28 லட்சம் ஏக்கர் பரப்பில்  குறுவை நெல் சாகுபடி செய்து வரலாற்றுச் சாதனை  படைக்கப்பட்டதோடு, மாநிலத்தில் சம்பா சாகுபடி இதுவரை 36.20 லட்சம் ஏக்கர் பரப்பில் மேற்கொள்ளப் பட்டுள்ளது.

ரூ.28,232 கோடி அந்நிய முதலீடு

சென்னை, ஜன.9- 2021 ஜூலை  முதல் இன்றுவரை 28,232 கோடி ரூபாய் அந்நிய முதலீட்டை தமிழ்நாடு ஈர்த்துள்ளது என்று ஆளுநர் உரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 207 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெ ழுத்திடப்பட்டுள்ளன. இதனால், 2,23,210 கோடி ரூபாய் முதலீடும் 3,44,150 நபர்களுக்கான வேலைவாய்ப்புகளும் உறுதிசெய்யப்படும் என்று அதில்  கூறப்பட்டுள்ளது. தமிழ்நாடு, பல்துறைகளில் தலைசிறந்து விளங்கவும், நமது மக்களின் வாழ்க்கைத் தரத்தை வளர்ந்த நாடுகளுக்கு நிகராக உயர்த்தவும், 2030 ஆம் ஆண்டிற்குள், ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதார வளர்ச்சி இலக்கை அடைய  வேண்டும் என  முதலமைச்சர் இலக்கு நிர்ணயித்துள்ளார்.

விரைவில் மின் வாகன கொள்கை

தமிழ்நாடு உயிர் அறிவியல் மேம்பாட்டுக் கொள்கை, தமிழ்நாடு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக் கொள்கை, தமிழ்நாடு காலணி, தோல்பொருட்கள் கொள்கை, தமிழ்நாடு விண்வெளி பாதுகாப்புத் தொழில் கொள்கை போன்ற  பல துறைசார் கொள்கைகள் 2022 ஆம் ஆண்டில் இந்த  அரசால் வெளியிடப்பட்டுள்ளன. மேலும், எரிபொருட்களில் எத்தனால் சேர்த்தல், பசுமை ஹைட்ரஜன், மின் வாகனங்க ளுக்கான கொள்கைகள் ஆகியவை  மிக விரைவில் வெளியிடப்படும்.

மாமல்லபுரம் அருகே துணை நகரம்

சென்னை, ஜன.9- கிழக்கு கடற்கரைச் சாலையை ஒட்டி, மாமல்லபுரம் அருகே புதிய துணை நகரம் ஒன்று அமைக்கப்படும் என்று  ஆளுநர் உரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  கிழக்கு கடற்கரை சாலையும் நான்குவழிச் சாலையா கத் தரம் உயர்த்தப்படுவதால், சென்னை பெருநகரப் பகுதியின் அடுத்தகட்ட வளர்ச்சிக்கு அச்சாணியாக இத்திட்டம் விளங்கும் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது. சென்னையும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளும் மிக வேகமாக வளர்ச்சியடைந்து வருகின்றன. இப்பெரும் நகரத்  தொகுப்பின் அடிப்படைத் தேவைகளை நிறைவு செய்து, பொருளாதார வளர்ச்சிக்கு வித்திடும் வகையில், சென்னைப்  பெருநகரின் எல்லை ஐந்து மடங்காக  5,904 சதுர கி.மீ. அளவிற்கு விரிவாக்கப்பட்டுள்ளது.

கீழடி அருங்காட்சியக பணி விரைவில் நிறைவடையும்

சென்னை, ஜன.9- கீழடி அகழாய்வில் கிடைத்த தொல் பொருட்களைக் காட்சிப்படுத்துவதற்காக அமைக்கப்படும் உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகத்தின் கட்டுமானப்  பணிகள் நிறைவடையும் தருவாயில் உள்ள தாக ஆளுநர் உரையில் தெரிவிக்கப் பட்டுள்ளது. இதுபோன்றே, ஆதிச்சநல்லூர், கொற்கை, சிவகளை ஆகிய பகுதிக ளில் அகழ்ந்தெடுக்கப்பட்ட தொல் பொருட்களைக் காட்சிப்படுத்துவதற்கான ‘பொருநை அருங்காட்சியகம்’ அமைக்கும் பணிகளும் நடைபெற்று வருகின்றன. இந்த அரசு ஆட்சிப் பொறுப்பேற்றதி லிருந்து கோவில் நிலங்களையும், உடைமை களையும் பாதுகாப்பதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகின்றது. இதுவரையில் 3,657 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலங்களும், சொத்துகளும் மீட்டெடுக்கப்பட்டுள்ளன. இந்த ஆண்டு, 158 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 34 கோவில்களின் புதிய  கட்டுமானப் பணிகளை அரசு தொடங்கி யுள்ளது. மேலும், திருச்செந்தூர் திருக்கோ வில் பகுதியில் 300 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பெருந்திட்ட வளாகப் பணிகள்  தொடங்கப்பட்டுள்ளதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.

சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட உயர் முன்னுரிமை: ஆளுநர்

சென்னை, ஜன.9- மாநிலத்தில் சட்டம், ஒழுங்கை நிலைநாட்டிட திமுக அரசு உயர் முன்னு ரிமை அளிப்பதாக ஆளுநர் ஆர்.என்.ரவி தனது உரையில் தெரிவித்தார். சட்டப்பேரவையில் அவர் பேசுகையில், வன் முறையில்லா ஒரு அமைதிப் பூங்காவாக தமிழ்நாடு தொடர்ந்து திகழ்வதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும்  அரசு மேற்கொண்டு வருகி றது. நம் இளைய தலை முறையின் எதிர்காலத்தின் மீது அக்கறை கொண்டு, போதைப் பொருட்களின் விநியோகத்தையும் பயன் பாட்டையும் இரும்புக் கரம் கொண்டு ஒடுக்க முதலமைச்சர் உறுதியாக உள்ளார். போதைப் பொருட்களின் கடத்தல் தடுப்புச் சட்டங்களைத் தீவிரமாக அமல்படுத்துதல், மக்களிடையே விழிப்பு ணர்வு ஏற்படுத்துதல் போன்ற நடவடிக்கைகளை இந்த அரசு தொடர்ந்து மேற் கொண்டு வருகிறது. ரேசன் கடைகள் சீரமைப்பு மக்களுக்கு சீராகவும்  சிறப்பாகவும் சேவைகளை வழங்கும் எழில் கூடங்க ளாக பொது விநியோ கக் கடைகளை  மாற்றிய மைத்திட, இந்த அரசு, ‘நம்ம  பகுதி நம்ம நியாய விலைக்  கடை’ என்ற புதிய முயற் சியைத் தொடங்கியுள்ளது. இத்திட்டத்தின் கீழ், இதுவரை  4,455 பொது விநியோகக் கடைகள் மேம்படுத்தப்பட்டுள்ளன.

“வாழ்வாதாரம் தேவை”
இஸ்ரேலில் மக்கள் கொதிப்பு

டெல் அவிவ், ஜன.9- பல கட்சிகளின் ஆதரவைப் பெற்று ஆட்சி அமைத்துள்ள வலதுசாரியினர், மக்களின் பிரச்சனைகளைக் கண்டு கொள்ளாமல் ஜனநா யகத்திற்கு எதிராகச் செயல்பட முனைந்ததால் மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். தலைநகர் டெல் அவிவில் நடந்த பேரணி யில் ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்றனர். “வீட்டு வசதி, வாழ்வாதாரம், நம்பிக்கை” என்று  எழுதப்பட்ட பதாகைகளுடன் வலம் வந்தார்கள்.  வாழ்வாதாரம் கேள்விக்குறியாக மாறி வருகை யில், அதற்கான தீர்வை முன்வைக்காமல், மேற்குக் கரையில் மேலும் ஆக்கிரமிப்புகளை மேற்கொள்வதில் பெஞ்சமின் நேதன்யாஹூ தலைமையிலான இஸ்ரேலிய அரசு முனைப்புக் காட்டி வருகிறது. அதோடு, நாட்டின் நீதித்துறையை பல வீனப்படுத்துவதற்கான முன்மொழிவுகளை சட்டத்துறை அமைச்சர் யாரிவ் லெவின் முன்வைத்துள்ளார். நாட்டின் நீதித்துறை மீது  தொடுக்கப்பட்ட போராக இதைப் பார்க்க வேண்டி யுள்ளது என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன. நாட்டின் உச்சநீதிமன்றத்தின் அதிகாரங்களைப் பறிக்கும் இந்த முன்மொழி வுகள் நிராகரிக்கப்பட வேண்டியவை என்றும் அக்கட்சிகள் கருத்து தெரிவித்திருக்கின்றன. நாட்டின் பல பகுதிகளிலும் போராட்டங்கள் வெடித்திருக்கின்றன. இந்தப் போராட்டங்களு க்கு இடதுசாரிக்கட்சிகளும், அக்கட்சிகளின் சார்பில் நாடாளுமன்றத்திற்குத் தேர்வு செய்யப் பட்டுள்ள உறுப்பினர்களும் தலைமை தாங்கி யிருக்கிறார்கள். இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீன த்திற்கு இடையில் அமைதியை உருவாக்குவதே இலக்காக இருக்க வேண்டும் என்றும், மோதல் போக்கு நாட்டின் அமைதியைக் குலைத்து விடும் என்றும் கருத்து தெரிவித்திருக்கிறார்கள். கடந்த 74 ஆண்டுகளில் முதன்முறையாக அதி தீவிர வலதுசாரிகள் வசம் அதிகாரம் சிக்கியுள்ளது என்று இஸ்ரேலின் அரசியல் வல்லுநர்களில் ஒருவரான அகிவா எல்டர் தெரி வித்துள்ளார்.

 

உலகச் செய்திகள்

ஆப்பிரிக்காவின் சில நாடுகளில் இருந்து ஐரோப்பிய நாடு களுக்குச் செல்ல முயலுகையில் பலர் சென்று கொண்டிருந்த படகுகள் கவிழ்ந்தன. கடலில் தத்தளித்துக் கொண்டிருந்தவர்கள் மற்றும் மூழ்கிக் கொண்டிருந்த சில படகுகள் ஆகியவற்றை துனீசியா வின் கடற்படையினர் காப்பாற்றியுள்ளனர். இதில் பயணம் செய்தவர்கள் சட்டவிரோதமாக ஐரோப்பிய நாடுகளுக்குச் செல்ல  முயன்றவர்களாவர். துனீசியா வழியாகத்தான் பெரும்பாலானவர்கள் இத்தகைய ஆபத்தான பயணத்தை மேற்கொள்கிறார்கள்.

ரஷ்யா மற்றும் உக்ரைன் மோதல் விவகாரத்தில் நிரந்தரப் போர் நிறுத்தத்திற்கான முயற்சிகளை துர்க்கியே செய்து வருகிறது. இருதரப்பிலும் உள்ள கைதிகளை பரிமாறிக் கொள்ள துர்க்கியே மேற்கொண்ட முயற்சிகள் பலனளித்தன. தற்போது தன்னிச்சையாக ரஷ்யா போர் நிறுத்தத்தை அறிவித்துள்ள நிலையில், நிரந்தரப் போர்  நிறுத்தத்திற்கும் வாய்ப்புள்ளதாக துர்க்கியே கூறியுள்ளது. துர்க்கியேயின் முயற்சிகள் நடக்கின்றன என்பதை உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கியும் தெரிவித்திருக்கிறார்.

ஒருவழியாக, அமெரிக்க நாடாளுமன்றத்தின் பிரதிநிதிகள் சபையின் சபாநாயகராக குடியரசுக் கட்சியின் கெவின் மக்கார்த்தி யைத் தேர்வு செய்து விட்டார்கள். குடியரசுக்கட்சிக்குப் பெரும்பான்மை இருந்தாலும், கட்சியின் சில உறுப்பினர்கள் போட்ட  நிபந்தனைகளால் தேவையான வாக்குகள் அவருக்குக் கிடைக்க வில்லை. 14 வாக்கெடுப்புகள் தோல்வியில் முடிந்து, 15 வது வாக்கெடுப்பில்தான் அவர் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்.