states

img

கம்பீரத்தை மறந்து சாதுவாய் மரணித்த மக்னா யானை

1990 ஆம் ஆண்டு நீலகிரி மாவட்டம், கூடலூர் மற்றும் அதனை யொட்டி உள்ள கேரளம் எல்லைப் பகுதியில் நீலகிரி மாவட்டத்தில் மூர்க்க குணத்துடன் சுற்றித்திரிந்த மக்னா யானை 23 பேரைகொன்றது. மக்கள் ஊருக்கு வெளியே நட மாடவே அச்சப்பட்டனர். எப்போது அந்த யானை வரும்? யாரை தாக்கும் என்ற அச்சம் பொதுமக்க ளிடையே பரவலாக காணப்பட்டது‌.  இதன் காரணமாக வேறு வழியே யின்றி, 1998 ஆம் ஆண்டு மக்னா யானையை சுட்டுக் கொல்ல கேரள தலைமை வன பாதுகாவலர் உத்தர விட்டார். யானையை சுட்டு வீழ்த்தும்  முயற்சியில் கேரள வனத்துறை ஈடுபட்டது.  இந்நிலையில், கேரள வனப்ப குதியில்  இருந்த மக்னா யானை, தமிழக பகுதியான கூடலூர் புளி யம்பாறை வனப்பகுதிக்குள் நுழை ந்தது. அச்சத்துடன் அங்குமிங்கும் அலைந்து இருவரை தாக்கி, பலியாகினர்.  இதுகுறித்து தகவலறிந்த தமிழக வனத்துறையினர், அந்த  யானையை மயக்க ஊசி செலுத்தி பிடிக்க முடிவெடுத்தனர்.   கால்ந டை மருத்துவர் வி.கிருஷ்ணமூர்த்தி தலைமையில், மருத்துவ  குழுவினர் அடர்ந்த வனப்பகுதியான வாச்சிக் கொலி என்ற இடத்தில் யானையை சுற்றி வளைத்து மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர்.

உயிருக்கு ஆபத்தான நிலையில், பிடிபட்ட அந்த யானை க்கு கால்நடை மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். இந்த சிகிச்சையின் போது, யானையின் உடலில் இருந்து சுமார் 20 துப்பாக்கி குண்டுகள் அகற்றப்பட்டதாக வனத்துறையினர் தெரிவித்தனர். குண்டு காயங்களால் யானை உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் கடும் துன்பத்தை சந்தித்து. கடும் சிர மங்களுக்கு இடையே மருத்து வர்களின் தொடர் சிகிச்சையால் மக்னா யானை உயிர் பிழைத்தது. யானையின் உயிரை காப்பாற்றி யதில் பெரும்பங்கு வகித்த கால்நடை மருத்துவர் வி.கிருஷ்ண மூர்த்தியை கௌரவிக்கும் விதமாக, யானைக்கு மூர்த்தி என பெயரிட்டனர்.  தெப்பக்காடு வளர்ப்பு யானை கள் முகாமில் விடப்பட்ட மக்னா (என்ற) மூர்த்தி, தனது கம்பீர குணத்தை மாற்றிக் கொண்டு மிகவும் சாதுவான கும்கியாக வலம்  வந்தது. முகாமில் தன்னை கவ னித்துக் கொள்ளும் பாகன்கள் மற்றும் பழங்குடியின மக்கள் மீது  அன்பை வெளிப்படுத்தியது. கடந்த 25 ஆண்டுகளாக தெப்பக்காடு வளர்ப்பு யானைகள் முகாமில்  பரா மரிக்கப்பட்டு வந்த கும்கி யானை மூர்த்திக்கு கடந்த 2022ஆம் ஆண்டு  ஓய்வு அளிக்கப்பட்டது. தொடர்ந்து முகாமில் பராமரிக்கப்பட்டு வந்தது. 

இந்நிலையில் திடீரென கடந்த ஓராண்டாக உடல் நிலை பாதிக்கப்பட்டது. கால்நடை மருத்து வர்கள் யானை மூர்த்திக்கு உயர் தர சிகிச்சை அளித்து வந்தனர். யானை உடல்நலம் தேற சிறப்பு உண வுகளும் வழங்கப்பட்டது. கடந்த சனி யன்று காலை யானை மூர்த்தி திடீ ரென கீழே படுத்துக் கொண்டது. யானை தானாக எழுந்திருக்க எவ்வ ளவு முயன்றும் அதனால் முடிய வில்லை. வன கால்நடை மருத்து வர்கள் யானையை எழுப்புவதற்  கான முயற்சிகளை மேற்கொண்ட னர். முகாமில் உள்ள சக கும்கி யானைகள் உதவியுடனும் அதனை எழுப்புவதற்கு முயற்சிகள் மேற் கொள்ளப்பட்டது. ஆனால் யானை மூர்த்தியால் கடைசி வரை எழுந்தி ருக்க முடியவில்லை.  இறுதியாக, இரவு 9 மணிக்கு  யானை மூர்த்தியின் உயிர் பிரிந்தது யானையின் உயிரிழப்பு அதனை பராமரித்து வந்த பாகனின் குடு ம்பத்தினர், பழங்குடியின மக்கள் மற்றும் வன ஊழியர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. பேரூயிரின் இழப்பு கிராம மக்களை சோகத்தில் ஆழ்த்தியது. குறிப்பாக யானையுடன் விளை யாடி அதனை பராமரித்த குழந்தை கள் அதற்கு அஞ்சலி செலுத்தும் போது கண்ணீர் விட்டு தேம்பித் தேம்பி அழுதனர். யானை பாகனின் குடும்பத்தைச் சேர்ந்த பெண்கள் யானையின் இழப்பை தாங்க முடியா மல் கதறி அழுதனர். உயிரிழந்த  யானை மூர்த்திக்கு வனத்துறை யின் மூலம் வளர்ப்பு யானைகள் அணிவகுத்து நின்று இறுதி மரியாதை செலுத்தினர். பின்னர் யானை மூர்த்தியின் உடல் பிரேத பரி சோதனை செய்யப்பட்டு அதே பகுதியில் அடக்கம் செய்யப்பட்டது.

மக்னா யானையை மயக்க ஊசி செலுத்தி பிடிக்கும் குழுவில் இடம்  பெற்றிருந்த கால்நடை மருத்துவர் அசோகன், யானை மூர்த்தி உட னான நினைவுகளை நம்மிடம் பகிர்ந்து கொள்கையில், தமிழக வனப் பகுதிக்குள் நுழைந்த கும்கி  யானையை மயக்க ஊசி செலுத்தி பிடிக்க உத்தரவு கிடைத்தது. துப்பாக்கி குண்டுகள் துளைத்த காயங்களுடன் தமிழக வனப்பகு திக்குள் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த மக்னா யானையை கடும் போராட்டத்திற்கு பின் மயக்க  ஊசி செலுத்தி பிடித்தோம். தொடர்ந்து வனப்பகுதியில் மழை பெய்ததால் யானையை வெளியே கொண்டு வருவதில் மிகுந்த சிரமம் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் யானை படுத்து கொண்டதால் கும்கி யானைகள் உதவியுடன் அதனை வனப்பகுதி வழியாக சுமார் 15 கிலோமீட்டர் தூரம் கடந்து சமதள பரப்புக்கு அழைத்து வந்தோம். பின்னர் அதற்கு சிகிச்சை அளிக்க முயன்ற போது அதன் உடல் முழு வதும் ஏராளமான துப்பாக்கி குண்டு  காயங்களும் இருந்தது. தெப்பக் காடு யானைகள் முகாமில் மக்னா யானைக்கு தொடர் சிகிச்சை அளித் தோம். அதன் காயங்கள் ஆற சுமார் ஒரு ஆண்டுக்கு மேல் ஆனது‌. பல பேரை கொன்ற அந்த  மக்னா யானையை ஆட்கொல்லி யாகத்தான்  அங்கிருந்தவர்கள் பார்த்தனர். ஆனால் கூண்டில் வைத்து சிகிச்சை அளிக்கும் போது அது ஒரு குழந்தையை போல் மாறி யது. காலை 8 மணி முதல் 11 மணி வரை மட்டுமே சிகிச்சை அளிக்க ஒத்துழைப்பு தரும். அதனை பயன் படுத்தி அந்த யானைக்கு சிகிச்சை அளித்தோம். உடல் நலம் தேறிய மக்னா யானை மூர்த்தி ஓய்வுக்கு பின்னர் நன்றாக இருப்பதாக அறிந்து மகிழ்ச்சி அடைந்தேன். அண்மையில் கூட அதனை பார்க்க  சென்றபோது என்னை அடையாளம் கண்டு கொண்டு பாசத்தை வெளிப் படுத்தியது. வனத்திற்குள் கம்பீரமாக சுற்றிக்கொண்டிருந்ததை யும் கண்டுள்ளேன். ஒரு குழந்தை யை போல மாறி மனிதர்களின் அன்பை பெற்றதையும் பார்த்து ள்ளேன். தற்போது அந்த யானை உயி ருடன் இல்லை, உண்மையில் சோக த்தை ஏற்படுத்துகிறது என்றார்.'

-கார்த்திக் மதிவாணன்