states

ஆகம, பூஜை முறைகளில் தேர்ச்சி பெற்ற எவரையும் அர்ச்சகராக நியமிக்கலாம்!

சென்னை, ஜூன் 26 - குறிப்பிட்ட கோயில்களின் ஆகமம்,  பூஜை முறைகளில் தேர்ச்சி பெற்ற, எவரையும் அர்ச்சகராக நியமிக்கலாம் என்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கோயில்களின் ஆகமத்தை கண்ட றிய, ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் அமைக்கப்பட்டுள்ள குழு அறிக்கை அளிக்கும் வரை காத்திருக்க வேண்டி யது இல்லை என்று நீதிபதி என். ஆனந்த் வெங்கடேஷ் அதிரடியாக உத்தர விட்டுள்ளார். சேலம் சுகவனேஷ்வரர் கோயிலில் காலியாக உள்ள அர்ச்சகர்கள் மற்றும் ஸ்தானிகர்கள் பணியிடங்களை நிரப்ப கோயில் நிர்வாகம் கடந்த 2018-ஆம்  ஆண்டு அறிவிப்பாணை வெளியிட் டது. அதில், அர்ச்சகர் ஆவதற்கு ஆகம  விதிகள் படித்து இருந்தால் போதும் என தெரிவித்திருந்தது. அறநிலையத்துறையின் இந்த அறி விப்புக்கு எதிராக சுப்பிரமணிய குருக் கள் என்பவர் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை நீதிபதி என். ஆனந்த் வெங்கடேஷ் விசாரித்து வந்தார்.  விசா ரணைகளின் போது, சுப்பிரமணிய குருக்கள் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஆர். சிங்காரவேலன், “ஆகம விதிகளைப் பின்பற்றும் கோயில்களில் அர்ச்சகர் நியமன மும் கண்டிப்பாக ஆகம விதிகளின் படியே நடைபெற வேண்டும் என உச்ச நீதிமன்றம் ஏற்கெனவே தெளிவுபடுத்தி யுள்ளது. அதன்படி சேலம் சுகவனேஷ் வரர் கோயிலி்ல் ஆகம விதிகளின்படி பாரம்பரியம், கோயில் மரபு மற்றும்  வழக்கத்துக்கு உட்பட்டே அபிஷே கம், ஆராதனைகளை மேற்கொள்ள  அர்ச்சகர்களை நியமிக்க முடியும்.  ஆனால், இந்த விதிகளைக் கடைபிடிக் காமல் அறநிலையத்துறை அதிகாரிகள் தன்னிச்சையாக அறிவிப்பாணையை வெளியிட்டுள்ளனர்” என வாதிட்டார்.

அறநிலையத்துறை சார்பில் ஆஜ ரான சிறப்பு அரசு வழக்கறிஞர் என்.ஆர். ஆர்.அருண் நடராஜன், “ஆகம விதி களைப் பின்பற்றும் கோயில்களைக் கண்டறிய ஏற்கெனவே உயர் நீதிமன்றம் ஓய்வுபெற்ற நீதிபதி எம். சொக்கலிங்கம் தலைமையில் குழு அமைத்துள்ளது. அந்தக்குழு தனது பரிந்துரைகளை சமர்ப்பிக்கும் வரை ஆகம விதிகளைக்  கடைபிடிக்கும் கோயில்களின் தலைமை அர்ச்சகர்கள் அளிக்கும் தகு திச்சான்றின் அடிப்படையில் கோயில் களில் காலியாக உள்ள அர்ச்சகர்கள் மற்றும் ஸ்தானிகர்களை நியமிக்க  சட்டத்தில் வழிவகை உள்ளதால், அதற்கு அனுமதி்க்க வேண்டும்” என வாதங்களை எடுத்து வைத்தார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி என். ஆனந்த் வெங்கடேஷ்,  “ஆகம விதிகளைப் பின்பற்றும் கோயில்கள் எவை என்பதை அதற்காக அமைக்கப்பட்டுள்ள ஓய்வு பெற்ற நீதி பதி தலைமையிலான குழு அடையா ளம் காணும் வரை, கோயில்களில் தலைமை அர்ச்சகரின் தகுதி்ச் சான்றை  அடிப்படையாக வைத்து அர்ச்சகர் களை நியமிக்க முடியுமா? என்பதை ஆராய வேண்டியுள்ளது. எனவே, இந்த  வழக்கில் பாரம்பரிய உரிமை தொடர் பாக மனுதாரர் தரப்பில் கூடுதல் மனு தாக்கல் செய்ய வேண்டும். அதற்கு அரசு தரப்பில் பதில்மனு தாக்கல் செய்ய வேண்டும்” எனக்கூறி விசார ணையை ஒத்தி வைத்திருந்தார்.

அதன்படி, மனுதாரர் மற்றும் அரசு என இரண்டு தரப்பிலும் பதில் மனு தாக்  கல் செய்யப்பட்ட நிலையில் இந்த வழக்  கில் திங்களன்று தீர்ப்பு வழங்கப்பட்டது.  அதில், “கோயில்களின் ஆகமத்தை  கண்டறிய அமைக்கப்பட்ட குழு அறிக்கை அளிக்கும் வரை காத்திருக்க  வேண்டியது இல்லை” என்று குறிப்  பிட்ட நீதிபதி என். ஆனந்த் வெங்கடேஷ்,  “சம்பந்தப்பட்ட கோயில்களின் குறிப்  பிட்ட ஆகமம் மற்றும் பூஜை முறை களில் தேர்ச்சி பெற்றிருந்தால், யாரை  வேண்டுமானாலும் அர்ச்சகராக நிய மிக்கலாம்” என உத்தரவிட்டார்.

தீர்ப்பின் முக்கியத்துவம் என்ன?

முன்னதாக அனைத்துச் சாதியின ரும் அர்ச்சகர் ஆவதற்கான சட்டத்தின் கீழ், திருச்சி ஸ்ரீரங்கம் குமார வயலூர்  முருகன் கோயிலில் பிரபு, ஜெய பாலன் ஆகிய இருவர் அர்ச்சகர்களாக நியமிக்கப்பட்டு இருந்தனர். ஆனால், பிராமணர் அல்லாத இவர்  களை அர்ச்சகர்களாக நியமித்தது ஆகம விதிகளுக்கு எதிரானது என்றும்,  இந்த நியமனத்தை ரத்து செய்ய வேண்டும் என்றும் அதே கோயிலில்  பணிபுரியும் பிராமண அர்ச்சகரின் உற வினர்களான கார்த்திக், பரமேஸ்வரன் ஆகியோர் (இவர்கள் இருவரும் ஆக மப் பயிற்சி பெறாதவர்கள் என்பதுடன்,  அர்ச்சகர் பணிக்கான நேர்காணலில் தோல்வியுற்றவர்கள்) சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடர்ந்தனர். “ஆதி சைவர்கள் என்ற  பிறப்பின் அடிப்படையில் தங்களுக்கு தான் அக்கோயிலில் பூசை செய்ய உரிமை உண்டு” என்று மனுவில் குறிப்பிட்டிருந்தனர்.

ரைக் கிளை நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது கார்த்திக், பர மேஸ்வரன் ஆகியோரின் கோரிக்கை யை ஏற்று, அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் திட்டத்தின் கீழ் நிய மிக்கப்பட்ட 2 அர்ச்சகர்களின் நியமனம்  ஆகம விதிகளுக்கு எதிரானது எனக் கூறி, பணி நியமனத்தை ரத்து செய்தார். மேலும், கோயில்களில் நீண்ட நாட்க ளாக அர்ச்சகராக உள்ளவர்களையே அர்ச்சகராக நியமிப்பது குறித்து 8 வாரங்களுக்குள் பரிசீலித்து உரிய முடி வெடுக்க வேண்டும் என்றும் 2023 பிப்ரவரி 24 அன்று உத்தரவிட்டார். முன்னதாக, இந்த வழக்கு விசார ணையின்போது, “ஸ்மார்த்த பிரா மணர் பிரிவைச் சார்ந்த நானே கோவில்  கருவறைக்குள் செல்ல முடியாது. அவ்வாறிருக்கும்போது மற்றவர்கள் எப்படி நுழைய முடியும்?” என்று நீதிபதி  ஜி.ஆர். சுவாமிநாதன் கூறியது அதிர்ச்சி யை ஏற்படுத்தியது. இதற்கு எதிராக கண்டனங்களும் எழுந்தன. இந்நிலையிலேயே, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி என். ஆனந்த் வெங்கடேஷ் அளித்துள்ள தீர்ப்பு முக்கியத்துவம் பெற்றுள்ளது.