states

‘தமிழக மரபுகளை பின்பற்றுவேன்’

சென்னை, ஜூன் 1- ‘தமிழகத்தின் கலாச்சாரம், மரபுகளை பின்பற்றுவேன்’ என்று சென்னை உயர் நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபுர்வாலா கூறியுள்ளார். சென்னை உயர் நீதிமன்ற புதிய தலைமை நீதிபதி எஸ்.வி. கங்காபுர்வாலாவுக்கு உயர் நீதிமன்றத்தின் சார்பில் வியாழக்கிழமை (ஜூன் 1) வரவேற்புளிக்கப் பட்டது. உயர் நீதிமன்ற வளாக கூட்ட அரங்கில் நடந்த இந்நிகழ்ச்சியில் ஏற்புரையாற்றிய தலைமை நீதிபதி கங்காபுர்வாலா, “பல சான்றோர்களையும், கலை - கலாச்சார செறிவும் கொண்ட தமிழ்நாட்டில் பணியாற்றுவது கவுரவமானது” என்றார். ‘முடிவுகள் எடுக்கும் போது, அனைத்து தரப்பினரின் நம்பிக்கையும் பெறப்படும். யாருக்கேனும் குறைகள் இருந்தால் அது நிவர்த்தி செய்யப்படும். தமிழ்நாட்டின் மரபு,  கலாச்சாரங்களை பின்பற்றி உங்களை போல வாழ்வேன்’ என்றும் அவர் கூறினார். முன்னதாக, தமிழ்நாடு அரசின் தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம் புதிய தலைமை நீதிபதியை வரவேற்று பேசு கையில், “தஞ்சாவூரை மராட்டிய மன்னர் கள் ஆட்சி செய்துள்ளதைச் சுட்டிக்காட்டிய அவர், “சமூக நீதி மாநிலமான தமிழ் நாட்டுக்கும், மகாராஷ்டிராவுக்கு பன் னெடுங்காலமாக நெருங்கிய தொடர்புள்ளது” என்றார். தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் தலைவர் அமல்ராஜ் பேசுகையில், “சென்னை உயர் நீதிமன்றத்துக்கு அனுமதிக்கப்பட்ட நீதிபதிகள் பதவிகளை, சமூக நீதியை பின்பற்றி நிரப்ப வேண்டும்  எனவும், மாவட்ட நீதித்துறை காலிப் பணியிடங்களையும் நிரப்ப வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார். இதையடுத்து பல்வேறு வழக்கறிஞர்கள் சங்கங்களின் நிர்வாகிகளும் புதிய தலைமை நீதிபதியை வரவேற்றுப் பேசினர்.

;