states

img

எல்ஐசி ஊழியர்கள் நாடு தழுவிய ஆர்ப்பாட்டம்!

சென்னை, ஜன. 22 - எல்ஐசி-யில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பக்கோரி புதனன்று (ஜன. 22) அன்று நாடு  முழுவதும் உள்ள எல்ஐசி அலு வலகங்களில் ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அகில இந்திய காப்பீட்டுக் கழக  ஊழியர் சங்கம் (ஏஐஐஇஏ), “வள மான இந்தியாவிற்கு வலிமையான எல்ஐசி” என்ற முழக்கத்தை முன்வைத்து, 1956-ஆம் ஆண்டு ஜனவரி 19 அன்று எல்ஐசி தேச உடமையாக்கப்பட்ட நாளையொட்டி- இந்த கோரிக்கை ஆர்ப்பாட்டத்தை புதனன்று (ஜன.22) நடத்தியது. இதன் ஒருபகுதியாக சென்னை பகுதி-1ன் சார்பில் அண்ணாசாலை யில் உள்ள எல்ஐசி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மூன்றாம் பிரிவு, நான்காம் பிரிவு ஊழியர்களை பணி நியமனம் செய்ய வேண்டும். ஏஐஐஇஏ-விற்கு சங்க அங்கீகாரம் வழங்க வேண்டும், புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து, அனைவருக்கும் 1995 பென்ஷன் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன. காப்பீட்டுக் கழக ஊழியர் சங்கத்தின் சென்னைப் பகுதி- 1ன் தலைவர் கிரிதர், பொதுச்செயலாளர் எஸ். ரமேஷ்குமார், பொருளாளர் ரமேஷ் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.