states

img

ஆர்எம்எஸ் அலுவலகங்களை மூட வேண்டாம்

திருவனந்தபுரம் ஸ்பீட் போஸ்ட் ப்ராசசிங் ஹப்களுடன் இணைத்து ஆர்எம் எஸ் அலுவலகங்களை (ரயில்வே அஞ்சல் சேவை போக்குவரத்து அஞ்சல் அலுவலகம் - Rai lway Mail Service) மூடும் நடவ டிக்கையை மறுபரிசீலனை செய்ய  வேண்டும் என ஒன்றிய தகவல் தொடர்பு அமைச்சர் ஜோதிரா தித்ய சிந்தியாவுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலங்க ளவை உறுப்பினர் ஜான் பிரிட்டாஸ் கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து கடிதத்தில்,”ரயில் நிலையங்களைச் சுற்றியுள்ள ஆர்எம்எஸ் அலுவலகங்களை மாற்றுவது அஞ்சல் அமைப்பில் சரியான நேரத்தில் சேவைகளை வழங்குவதில் இடையூறு விளைவிக்கும். ஸ்பீட் போஸ்ட் ப்ராசசிங் ஹப் இணைப்பின் மூலம் நாடு முழுவதும் உள்ள 93 நகரங்க ளில் ஆர்எம்எஸ் அலுவலகங்க ளும், இணைப்பு மையங்களும் இருக்காது. இந்த இணைப்பு திட்டத்தால் கேரள மாநிலத்தில் உள்ள ஆலப்புழா, காயங்குளம், சங்கனாச்சேரி, தொடுபுழா, ஆலு வா, இரிங்காலக்குடா, ஷோரனூர், ஒட்டப்பாலம், திரூர், வடகரா, தலச்சேரி மற்றும் காசர்கோடு போன்ற முக்கிய ஆர்எம்எஸ் அலுவலகங்கள் மூடப்படும். ஸ்பீட் போஸ்ட் மையங்களில் ஆர்எம்எஸ் பணிச்சுமையை ஏற்றுக்கொள்வதற்கான உள் கட்டமைப்பு இல்லை. அதனால் பெருமளவிலான இடமாற்றங்கள் மற்றும் பணிநீக்கங்களுக்கு வழிவகுக்கும் என ஊழியர்கள் கவலையடையும் நிலையில் உள்ளனர். அதனால் ஸ்பீட் போஸ்ட்  ப்ராசசிங் ஹப்களுடன் இணைத்து ஆர்எம்எஸ் அலுவலகங்களை மூடும் நடவடிக்கையை கைவிட  வேண்டும்” என ஜான் பிரிட்டாஸ் எம்.பி., கடிதத்தில் சுட்டிக்காட்டி யுள்ளார்.