states

தீக்கதிர் விரைவு செய்திகள்

பழமையான கோவில்களை பாதுகாப்போம்: அமைச்சர்

சென்னை, ஏப்.3- தமிழ்நாட்டில் 1000 ஆண்டுகள் பழமையான கோவில்களை பாதுகாக்க வேண்டும் என்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு அறிவுறுத்தினார். 2024 ஆம் ஆண்டிற்கான இந்து சமய அறநிலையத்துறையின் புதிய  அறிவிப்புகள் குறித்தும், 2021-2022  மற்றும் 2022-2023 ஆம் நிதியாண்டு களில் அறிவிக்கப்பட்ட அறிவிப்பு களில் நிலுவையிலுள்ள பணிகளின் முன்னேற்றம் குறித்தும் அமைச்சர் சேகர்பாபு தலைமையில் ஆணையர் அலுவலகத்தில் கலந்தாய்வுக் கூட்டம்  திங்களன்று (ஏப்.3) நடைபெற்றது.  இக்கூட்டத்தில் அமைச்சர் சேகர்பாபு,“ 2021-22 ஆம் ஆண்டில் 112 அறிவிப்புகளின் மூலம் 3,769  பணிகளும், 2022-23 ஆம் ஆண்டில் 165 அறிவிப்புகள் மூலம் 5,061 பணி களும் மேற்கொள்ள அறிவிப்புகள்  வெளியிடப்பட்டன. இந்த அறிவிப்பு களில் நிறைவேற்றப்பட்டவை தவிர்த்து, தற்போது நடைபெற்று வரும் இதர பணிகளை விரைந்து  முடித்திட தேவையான நடவடிக்கை களை மேற்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தினார். மேலும், 2023- 2024 ஆம்  ஆண்டிற்கான புதிய அறிவிப்புகளில் நமது பண்பாடு, கலாச்சாரத்தை வெளிப்படுத்தும் காலப்பெட்டகங் களாக திகழும் 1000 ஆண்டுகளுக்கு முற்பட்ட தொன்மையான கோவில் களை பாதுகாத்திடும் வகையில் அவற்றை புனரமைக்கும் பணிக ளுக்கும், கோவில்களுக்கு வருகை தரும் பக்தர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை மேம்படுத்தி வழங்கிடும் பணிகளுக்கும் முக்கியத் துவம் அளிக்க வேண்டுமெனவும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

 குற்றவாளிகள் மீதான தண்டனையை விரைவில் உறுதிப்படுத்துக! கி.வீரமணி வலியுறுத்தல்

சென்னை, ஏப்.3- திருவான்மியூர் கலாஷேத்ரா பள்ளியில்  பாலியல் வன்கொடுமைக் குற்றவாளிகள் மீதான தண்டனையை விரைவில் உறுதிப்படுத்துக என்று திராவிடர் கழகத்  தலைவர் கி.வீரமணி வலியுறுத்தியிருக் கிறார். இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கை வருமாறு: 1962 இல் அடையாறிலிருந்து திருவான் மியூருக்கு மாற்றப்பட்டது கலாஷேத்ரா நிறுவனம். இது ஒரு ஒன்றிய அரசு நிறுவன மாகும். இந்தியா முழுவதும் இந்த நிறுவனத் துக்கு மிகப்பெரிய அளவில் விளம்பரம் உண்டு. ஒன்றிய அரசின் கலாச்சார ஆணை யத்தின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த  நிறுவனத்தில் ஆசிரியர்கள், பணி யாளர்கள், மாணவர்கள் பெரும்பாலும் அக்ரகாரமாகவே காட்சி அளிக்கும். இந்த நிறுவனத்தில் பயிலும் மாணவி கள் பாலியல் துன்பத்திற்கு ஆளாக்கப்படு வதாக பல கட்டங்களிலும் புகார்கள் வந்த துண்டு. ஆனால், யார் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டதில்லை. இப்பொழுது பாலியல் துன்புறுத்தல் பெரும் அளவில் நடந்த காரணத்தால், பிரச்சனை முற்றி, வெளிச்சத்திற்கு வந்து விட்டது. மாணவிகள் நிறுவனத்தை எதிர்த்து  இரவு பகலாக உள்ளிருப்புப் போராட்டம் நடத்தும் அளவுக்கு உச்சத்தை அடைந்து விட்டது. விடுதி இழுத்து மூடப்பட்டது. பேராசிரியர் ஹரிபத்மன், சஞ்சித்லால், சாய் கிருஷ்ணன், ஶ்ரீநாத்மீது மாணவிகள் புகார் கொடுத்திருந்தும், ஒரு பேராசிரியர் மீது 3 பிரிவுகளில் வழக்குகள் பதிவு செய்யப் பட்டுள்ளன.  சென்னையில் பதுங்கியிருந்த ஹரிபத்மன் கைது செய்யப்பட்டுள்ளார். கேரள மாநிலத்தை சேர்ந்த கலாஷேத்ராவின் முன்னாள் மாணவி, பேராசிரியர் ஹரி பத்மன் மீது எழுத்துப்பூர்வ மாக அளித்த புகாரின் அடிப்படையில் அடையாறு மகளிர் காவலர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்த விவகாரம் ‘விஸ்வரூபம்’ எடுத்திருக்கும் நிலையில் வழக்கு விசாரணைக்குத் தேவையான சான்றுகளைத் திரட்டும் பணியில் மாநில காவல்துறை தீவிரமாக ஈடுபட்டுள்ளது. மாணவி அளித்திருக்கும் புகாரின்  பேரில் 2019 ஆம் ஆண்டு பாலியல் வன் கொடுமை நடந்ததாக குறிப்பிட்டுள்ளார்.  இது தொடர்பாக பேசிய காவல்துறை அதிகாரி கள் ‘பாலியல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக  தேவையான சான்றுகளைத் திரட்டி வருகி றோம். அதன் பின்னரே கலாஷேத்ரா பாலி யல் விவகாரத்தில் அடுத்தக்கட்ட நடவ டிக்கை இருக்கும்’ என்று தெரிவித்தனர்.  கேரள மாணவி அளித்த புகாரில் தன்னுடன் படித்த 5 மாணவிகள் பற்றியும், அவர்களிடம் விசாரித்தால் பேராசிரியர் பற்றி பல்வேறு தகவல்கள் மேலும் தெரிய வரும் என்றும் தெரிவித்திருப்பதாக கூறப்படு கிறது. இதற்கிடையே  மகளிர் ஆணையம், கலாஷேத்ரா இயக்குநர் ரேவதியிடம் விசாரணை நடத்தியது. விசாரணை வெறும்  மேலோட்டமாகவே இருக்கிறது. இதில் தாமதத்திற்கு இடமின்றி சட்டம் தன் கடமையைச் செய்யவேண்டும்.  சென்னை பத்ம சேஷாத்திரி பள்ளி, கோவை சின்மயா போன்ற பள்ளிகளிலும் பாலியல் வன்கொடுமை நடந்துள்ளது. நடவடிக்கை எந்த அளவில் எடுக்கப்பட்டது என்பது தெரியவில்லை. குற்றச் செயல்களில் கூட வர்ணாசிரமக் கண்ணோட் டம் கூடாது. மாணவிகள் அச்சமின்றிக் கல்விக் கூடங்களுக்கு வரும் நிலை உறுதி  செய்யப்படவேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்திருக்கிறார்.

ஆபத்தான நோயாளிகளின் சிகிச்சைச் செலவை அரசே ஏற்கும்:  கேரளத்தின் மெட்செப் திட்டத்தில் ஏற்பாடு

திருவனந்தபுரம், ஏப். 3- கேரள அரசின் மெட்செப் (MEDISEP) திட்டத்தின் கீழ் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை உள்ளிட்ட மிகக் கடுமையான நோய்களுக்கான சிகிச்சைச் செலவை அரசே ஏற்கும். காப்பீட்டு நிறுவனத்தால் நிறுவப்பட்ட கார்பஸ் நிதி தீர்ந்துவிட்டால், மருத்துவச் செலவுகளை அரசு ஏற்றுக் கொள்கிறது. இதற்காக முதல் தவணையாக ரூ.9 கோடியை நிதித்துறை அனுமதித்துள்ளது. ஒவ்வொரு மாதமும் குறைந்தது மூன்று கோடி ரூபாய் பரிமாற்றம் செய்யப்படும். கல்லீரல், சிறுநீரகம், இதயம், முழங்கால், இடுப்பு மாற்று அறுவை சிகிச்சை மற்றும் மூளை தண்டு மாற்று அறுவை சிகிச்சை தேவைப்படுபவர்களுக்கு சிகிச்சை அளிப்பதை உறுதி செய்வதே சிறப்பு நிதி. அரசு மருத்துவமனைகளில் இதற்கான அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்றும் அரசு பரிந்துரைத்துள்ளது. ஏற்கனவே மெடிசெப் திட்டத்தை ஏற்றுக்கொண்ட காப்பீட்டு நிறுவனத்தின் கீழ் ரூ.35 கோடியில் சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இத்தொகையை மூன்றாண்டுகளுக்கு செலவிட பரிந்துரைக்கப்பட்டது. நிதியில் உள்ள பணம் தீர்ந்தாலும் சிகிச்சை நிறுத்தப்படாது என அரசு உறுதி அளித்திருந்தது. ஆனால், ஓராண்டுக்குள், முழங்கால் மற்றும் இடுப்பு மாற்று சிகிச்சைக்கு மட்டுமே, தொகை முழுமையாக செலவிடப்பட்டு, அரசு மருத்துவமனைகளில் சிறந்த வசதிகளை பயன்படுத்த முன்மொழியப்பட்டது. இதுவரை 1372 பேருக்கு முழங்கால் மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. இதற்கான தொகை 27.2 கோடி ரூபாய். 99 பேருக்கு ரூ.1.80 கோடி யில் இடுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.  34 நோயாளிகளுக்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை 2.80 கோடியில் செய்யப்பட்டது. ரூ.58.30 லட்சம் செலவில் 13 பேருக்கு இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. பத்து பேருக்கு எலும்பு மஜ்ஜை மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இதற்கு 58.32  லட்சம் செலவானது. மூளை தண்டு பொருத்துவதற் காக ஒருவருக்கு 1.51 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.

ஊழியர்களை பலிகடாக்களாக்கும் வங்கிகள்

பணிநீக்கம் துவக்கம்

பணிநீக்கம் துவக்கம் கிரெடிட் ஸ்விஸ் வங்கியை விலைக்கு  வாங்கியிருக்கும் யு.பி.எஸ். வங்கி, ஒன்றுபட்ட வங்கியின் மூன்றில் ஒரு பங்கு ஊழியர்களைப் பணிநீக்கம் செய்யத் திட்டமிட்டிருக்கிறது. கிரெடிட் ஸ்விஸ் வங்கியானது, சுவிட்சர்லாந்தின் பெரிய வங்கிகளில் ஒன்றாகும். தவறான கொள்கைகளால் வங்கி நெருக்கடிக்கு உள்ளாகியிருக் கிறது. இந்த நெருக்கடி திடீரென்று உரு வாகவில்லை. வங்கித்துறை நிபுணர்கள் தொடர்ந்து எச்சரிக்கை செய்தே வந்தனர். பெரும் நெருக்கடியில் சிக்கியவுடன் நாட்டின் மற்றொரு பெரிய வங்கியான யு.பி.எஸ். மூலமாக அதைக் காப்பாற்ற ஸ்விட்சர்லாந்து அரசு முடிவெடுத்தது. 330 கோடி அமெரிக்க டாலருக்கு ஒட்டுமொத்த கிரெடிட் ஸ்விஸ் வங்கியை வாங்கினார்கள். யு.பி.எஸ் வங்கியில் 73 ஆயிரம் ஊழியர்களும், கிரெடிட் ஸ்விஸ் வங்கியில் 50 ஆயிரம் பேரும் பணிபுரிந்து வருகிறார்கள். கிரெடிட் ஸ்விஸ் போன்ற வங்கிகள் தோல்வியே அடையாது என்று வங்கித்துறையின் வலதுசாரி நிபுணர்கள் சொல்லி வந்தார்கள். தற்போது யு.பி.எஸ்.  வங்கியுடன் இணைந்துள்ளதால், ஒன்றுபட்ட வங்கியைக் காப்பாற்றும் முயற்சியில் இறங்கியுள்ளனர். அனைத்து நிறுவனங்களையும் போலவே, ஊழியர்களைப் பலிகடாக் களாக்கும் வேலையில் யு.பி.எஸ். நிர்வாகமும் ஈடுபட்டிருக்கிறது. 20 விழுக்காடு முதல் 30 விழுக்காடு வரையில் ஆட்குறைப்பு இருக்கப் போகிறது. ஒவ்வொரு கட்டமாக நடைபெறப் போகும் இந்த ஆட்குறைப்புப் பணி, மூன்றில் ஒரு பங்கு ஊழியர்களை வெளியேற்றும் வரையில் நடைபெறும் என்று செய்திகள் தெரிவிக்கின்றன.