சென்னை,அக். 30 இந்தியாவில், விளையாட்டின் தலைநகரமாக தமிழகத்தை உரு வாக்குவதே அரசின் நோக்கம் என இளைஞர் நலன் மற்றும் விளை யாட்டுத்துறை அமைச்சர் சிவ.வீ மெய்ய நாதன் தெரிவித்துள்ளார். சேலம் கந்தாஸ்ரமம் பகுதியில் அமைந்துள்ள எஸ். ஆர். பி கிரிக்கெட் விளையாட்டு மைதானத்தில் தமிழ்நாடு கிரிக்கெட் லீக் அமைப்பை தொடங்கி வைத்து பேசிய அவர் “கிராமப்புறத்தில் உள்ள திறமையான வீரர்களுக்கு இந்த போட்டி மிகவும் பயனுள்ளதாக அமையும். முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் விளை யாட்டுத் துறைக்குத் தொடர்ந்து முக்கி யத்துவம் கொடுத்து வருகிறார். அதன் ஒரு பகுதியாகத்தான் செஸ் ஒலிம்பி யாட் போட்டியை உலக நாடுகளே ஆச்சரியப்படும் வகையில் நடத்திக் காட்டியுள்ளார். இதேபோன்று பல்வேறு சர்வதேச போட்டிகள் நடத்த வும் திட்டமிடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில், இந்த ஆண்டு 25 லட்சம் விளையாட்டு வீரர்களை உரு வாக்கியுள்ளோம். அடுத்த ஆண்டு மேலும் 25 லட்சம் வீரர்களை உருவாக்கு வது மட்டுமல்லாமல் விரைவில் ஒரு கோடி விளையாட்டு வீரர்களை உருவாக்கி சர்வதேச போட்டிகளிலும் தேசிய அளவிலான போட்டிகளிலும் நமது வீரர்கள் பதக்கம் பெறுவ தற்கான நடவடிக்கை நடக்கப்பட்டு வரு கிறது. இதன் மூலம் விளையாட்டில் இந்தியாவின் தலைநகராகத் தமிழ் நாட்டை மாற்றுவதே தமிழ்நாடு அர சின் குறிக்கோள்” என தெரிவித்தார்.