states

திருவாரூரில் விஷவாயு தாக்கி தொழிலாளர்கள் மரணம்! சட்டப்படியான நிவாரணமும் நீதியும் வழங்கப்பட வேண்டும்!

சென்னை, அக். 29 - திருவாரூரில் விஷவாயு தாக்கி பலி யான 2 தொழிலாளர்களுக்கு சட்டப்படி யான நிவாரணமும், நீதியும் வழங்கப்பட வேண்டும் என்று தமிழக அரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தி யுள்ளது. இதுதொடர்பாக கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் கூறியிருப்பதாவது: திருவாரூர் நகராட்சிக்கு உட்பட்ட கழிவுநீர் உந்து நிலையத்தில் கழிவுநீரை வெளியேற்றுகிற போது நகராட்சியால் ஒப்பந்தம் செய்யப்பட்ட தனியார் கழிவுநீர் வாகன ஓட்டுநர் மணிமாறன் (30) மற்றும் ஒப்பந்தத் தொழிலாளி அருணாச்ச லம் (27) ஆகிய இருவரும் விஷவாயு தாக்கி இறந்து விட்டனர். மனிதக் கழிவுகளை மனிதர்கள் எவ்விதப் பாதுகாப்பும் இல்லாமல் கையா ள்வது சட்டப்படி தடை செய்யப்பட்ட நிலை யில், ஒப்பந்த ஊழியரும், ஓட்டுநரும் ‘மேன் ஹோல்’ உள்ளே நுழைய வேண்டிய நெருக்கடி ஏற்பட்டதற்கு நகராட்சி நிர்வாகம் தான் பொறுப்பேற்க வேண்டும். கழிவகற்றுவதற்கு முன்னதாக, சட்டப்படி ஆய்வுகள் மேற்கொள்ளப்படுவதில்லை என்பதும் இது போன்ற துயரங்களுக்கு பிரதான காரணமாகிறது. இந்த மரணங்களுக்கு சம்பந்தப்பட்ட நகராட்சி நிர்வாகம் பொறுப்பேற்க வேண்டும். பாதிக்கப்பட்ட குடும்பங் களுக்கு இழப்பீட்டையும், அரசு வேலை களையும் வழங்கிட வேண்டும். குற்றத்திற்கு காரணமானவர்கள் மீது வழக்குப் பதிவு செய்திட வேண்டும்

என  இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) மாநில செயற்குழு சார்பில் வலியுறுத்து கிறோம். தொழிலாளர்களைப் பாதுகாப்பற்ற முறையில்  பணியில் ஈடுபடுத்தியவர்கள் மீது  ‘மனித கழிவுகள் அகற்றும் பணியில் ஈடு படுத்துவதற்கு தடை மற்றும் மறுவாழ்வுச் சட்டம் 2013’ன் படி நடவடிக்கைகள் மேற் கொள்ள வேண்டும். உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டல்படி இறந்தவர்கள் குடும்பத்திற்கு தலா ரூபாய் 30 லட்சம் வழங்கிட வேண்டும். மேலும் மனிதக் கழிவை மனிதர் களை வைத்து அகற்றும் நடைமுறையை முற்றாக ஒழிக்க வேண்டுமென இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தமிழ்நாடு மாநில செயற்குழு வலியுறுத்துகிறது. 2019-ஆம் ஆண்டிலிருந்து 2023 வரை கழிவு நீர் தொட்டி, பாதாள சாக்கடை மூலம் 377 பேர் மரணமடைந்துள்ளதாக நாடாளுமன்றத்தில் ஒன்றிய அரசே தெரிவித்துள்ளது. ஆனால், உண்மை எண்ணிக்கை அதிகமாக இருக்கும் என்ப தே சமூக செயற்பாட்டாளர்களின் கருத் தாக உள்ளது. கடந்த மே மாதம் முதல் 180 நாட்களில் 5 கழிவு நீர் தொட்டி - பாதா ளச் சாக்கடை மரணங்கள் நிகழ்ந்துள்ளன என்பது பெரும் அதிர்ச்சியை அளிக்கிறது எனவே, விஷவாயு மரணங்கள் தொடர்கதையாக மாறுவதை தடுத்திட அரசு அதிகாரிகளுக்கு முறையான பயிற்சி, இயந்திரமாக்கல் மற்றும் பிரச்சாரம் என அனைத்து முனைகளிலும் செயல்பட தமிழ்நாடு அரசை வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.