states

img

தீக்கதிர் முக்கிய செய்திகள்

  1. கத்தோலிக்க கிறிஸ்த வர்களின் தலைமை மத குருவாக இருந்த போப் 16-ஆம் பெனடிக்ட் உடல்நலக்குறைவால் தனது 95-வயதில் வாடி கன் இல்லத்தில் காலமா னார். ஜெர்மனியைச் சேர்ந்த பெனடிக்ட் கடந்த 2005-ஆம் ஆண்டு ஏப்ரல் 19-ஆம் தேதி  போப் ஆக பொறுப் பேற்று, வயது முதிர்வு கார ணமாக 2013-ஆம் ஆண்டு பிப்ரவரி 28-ஆம்  தேதி தனது பதவியை ராஜினாமா செய்தார். 
  2. 2022-ஆம் ஆண்டு 73  வழக்குகள் பதிவு செய் யப்பட்டுள்ளது. வழக்கு தொடர்பாக 456 பேரை கைது செய்தது, 59 குற்  றப்பத்திரிகைகளை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது என என்ஐஏ தகவல் தெரி வித்துள்ளது.
  3. சேலம் காந்தி மைதா னத்தில் நடைப்பயிற்சி மேற்கொண்ட பொழுது அரசு பொறியியல் கல் லூரி 3-ஆம் ஆண்டு மாணவர் வினித்குமார் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தார்.
  4. ஹிஜாப் உடை சர்ச்சைக்கு இடையே ஈரான் நாட்டு செஸ் வீராங்கனை சாரா, கஜ கஸ்தானில் நடைபெற்ற சர்வதேச செஸ் போட்டி யில் ஹிஜாப் அணியா மல் கலந்து கொண்டார். 
  5. நீலகிரி தீட்டுக்கல் பகுதி யில் 234 ஏக்கரில் உள்ள ஒன்றிய மண்வள ஆராய்ச்சி மையத்தில் அனுமதியின்றி ரூ.48 லட்சம் மதிப்புள்ள 370 மரங்களை வெட்டியதாக உதகை தெற்கு வனச்சர கர் நவீன்குமார் உட்பட  5 பேர் கைது செய்யப் பட்டனர்.
  6. அமெரிக்காவில் அதிகள வில் பாதிப்பை ஏற்படுத் திய எக்ஸ்.எக்ஸ்.பி 1.5 (XBB.1.5) என்ற புதிய வகை கொரோனா தொற்று குஜராத்தில் கண்டறியப்பட்டுள்ளது.
  7. ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக காங்கிரஸ் முன்னிறுத்துவதில் எங்களுக்கு எந்த பிரச்ச னையும் இல்லை என பீகார் முதல்வரும், ஐக்  கிய ஜனதாதள தலைவரு மான நிதிஷ் குமார் பேசி னார்.
  8. மகாராஷ்டிராவில் ஏக்  நாத் ஷிண்டே அணி யில் இருக்கும் 35 எம்எல்ஏக்களுக்கு “ஒய் பிளஸ்” தேவையா? “ஒய் பிளஸ்” பாதுகாப்பால் அரசுக்கு மாதம் ரூ.20  லட்சம் (தலா ஒரு எம்எல்ஏ வுக்கு) செலவாகிறது. ஆளும் கட்சியைச் சேர்ந்த வராக இருந்தாலும் சரி, எதிர்க்கட்சியை சேர்ந்தவ ராக இருந்தாலும் சரி, யாருக்கு பாதுகாப்பு வழங்கப்பட வேண்டுமோ அவர்களுக்கு பாதுகாப்பு கொடுங்கள் என தேசிய வாத காங்கிரஸ் தலைவர் அஜித் பவார் கூறியுள் ளார்.
  9. 2022 ஆம் ஆண்டில் வியட்நாமின் விவசாயத்துறை நல்ல வளர்ச்சியைக் கண்டிருக்கிறது. அதிகாரப்பூர்வமாக அந் நாட்டின் விவசாய மற்றும் ஊரக மேம்பாட்டுத்துறை வெளி யிட்டுள்ள புள்ளிவிபரத்தில், ‘‘அனைத்துத் துறைகளுக்கும் வைக்கப்பட்ட இலக்குகள் எட்டப்பட்டிருக்கின்றன. 3.36 விழுக் காடு என்ற வளர்ச்சி இலக்கும் இதில் அடங்கும். கடந்த பல ஆண்டு களில் இது போன்றதொரு சாதனை நிகழ்த்தப்பட்டதில்லை’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
  10. மியான்மரில் ஜனநாயகத்திற்கான போராட்டத்தைத் தொடர்ந்து  நடத்தி வரும் ஆங் சான் சூ கிக்கு மேலும் ஏழு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, அதில் சில வழக்குகளில் ஏற்கனவே தீர்ப்பு வந்து தற்போது அவர் சிறையில் இருக்கிறார். மேலும் ஒரு வழக்கில் விதிக்கப்பட்டுள்ள இந்த ஏழு ஆண்டு தண்டனையோடு அவருக்கான சிறைத்தண்டனை 33 ஆண்டுகளாக அதிகரித்துள் ளது. அவர் மீது மொத்தம் 19 வழக்குகள் பதிவு செய்யப்பட்டி ருக்கின்றன.
  11. அமெரிக்க அரசின் மிரட்டல்களால் பதிவு செய்யப்படும் செய்தி களை வெட்டி எறியும் வேலையை சமூக ஊடக வலைத் தளங்கள் செய்கின்றன. இப்படி அனைத்து நிறுவனங்களையும் அமெரிக்க அரசு மிரட்டுகிறது என்று டுவிட்டரின் தலைமைச் செயல் அதிகாரி எலான் மஸ்க் குற்றம் சாட்டியிருக்கிறார். சமூக ஊடகங்களின் பதிவுகள் தங்களுக்கு சாதகமாக அல்லது தங்க ளின் கருத்தாக இல்லையென்றால், அதை நசுக்க அனைத்து வழிகளி லும் அமெரிக்க அரசு செயல்படுகிறது என்ற குற்றச்சாட்டு முன் வைக்கப்பட்டுள்ளது.