பீகாரின் பக்சரில் சௌசாமின் நிலை யத்திற்கு நிலம் கையகப்படுத்துவதற்கான இழப்பீடு கோரி விவசாயிகள் குழு நடத்திய போராட்டத்தில் நிகழந்த வன்முறை தொடர்பாக 1,200 பேர் மீது 5 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக மாநில காவல்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.
ஈரோடு, திருவள்ளூரில் நிபந்தனைகளுடன் சேவல் சண்டைக்கு அனுமதி அளித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட் டுள்ளது.
லிதுவேனியா நாட்டிலிருந்து லாத்வியா செல்லும் எரிவாயுக் குழாய் வெடித்து 50 மீ தூரத்திற்கு தீ கொழுந்து விட்டு எரிந்ததால், எரிவாயு விநியோகம் முற்றிலும் நிறுத்தப்பட்டது. வெடித்த எரிவாயுக் குழாய் ஆல்பர்ட் கிரிட் நிறுவனத்திற்கு சொந்தமானது ஆகும்.
கூகுள் நிறுவனம் தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியதாக இந்திய போட்டி ஒழுங்குமுறை ஆணையம் ரூ.1,338 கோடி அபராதம் விதித்தது. இதனை எதிர்த்து கூகுள் நிறுவனம் தொடர்ந்த வழக்கு 16-ஆம் தேதி உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.
உலகச் செய்திகள்
தென் அமெரிக்க நாடான பெருவில் நடைபெற்று வரும் போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன. போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் கைது நடவடிக்கைகளும் அதிகரித்துள்ளன. இதுவரையில் 300க்கும் மேற்பட்ட போராட்டக்காரர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக அரசு வழக்கறிஞர் அலுவலகம் தெரிவித்துள்ளது. ஆனால், உண்மை யான எண்ணிக்கை இதைவிட அதிகமாக இருக்கும் என்று போராடி வரும் அமைப்புகள் குற்றம் சாட்டியிருக்கின்றன.
கடந்த ஆண்டில் கம்போடியாவின் பொருளாதாரம் 5.1 விழுக் ்காடு அளவில் உயர்ந்துள்ளன. சரியான வகையில் கொரோனா பெருந்தொற்றைக் கையாண்டதுதான் இதற்குக் காரணம் என்று அரசுத்தரப்பில் கூறப்பட்டுள்ளது. உள்நாட்டுப் பொருளாதார செயல் பாடுகளைத் தக்க நேரத்தில் மீண்டும் தொடங்கியதால், உக்ரைன் நெருக்கடியின் பாதிப்புகள் கம்போடியாவில் ஏற்படாமல் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். கம்போடியாவின் பொருளாதார ஆய்வ றிக்கையை அந்நாட்டின் தேசிய வங்கி வெளியிட்டிருக்கிறது.
ஆப்பிரிக்க நாடான எத்தியோப்பியாவில் அரசு மற்றும் எதிர்த் தரப்பிற்கு இடையில் போர் நிறுத்த உடன்பாடு ஏற்பட்டுள் ளது. கடந்த இரண்டு ஆண்டுகளாக இரு தரப்பும் எத்தியோப்பியா வின் வடக்குப் பகுதியில் கடுமையான மோதலில் ஈடுபட்டிருந்தன. இந்த மோதலை நிறுத்த ஆப்பிரிக்க ஒன்றியம் அமைத்த ஒரு குழு பேச்சுவார்த்தை நடத்தி வந்தது. பேச்சுவார்த்தையின் விளைவாக இரு தரப்பும் ஒப்புக் கொண்டதால் தென் ஆப்பிரிக்காவின் பிரிட்டோ ரியா நகரில் உடன்பாடு கையெழுத்தானது.