சென்னை, அக்.25- தீபாவளிக்காக சொந்த ஊர்க ளுக்கு லட்சக்கணக்கான மக்கள் சென்னையிலிருந்து பயணம் செய்துள்ளனர். கடந்த வாரம் 20 ஆம் தேதி முதல் வெளியூர் பயணத்தை தொடங்கினார்கள். சிறப்பு பேருந்துகள் மூலம் 6 லட்சம் பேர் பயணம் செய்துள்ளனர். ஆம்னி பேருந்துகளில் 1 லட்சம் பேரும் சொந்த ஊர் சென்றனர். இதுதவிர ரயில்கள் மூலம் 12 லட்சம் பேர் சென்றுள்ளனர். இதுமட்டுமின்றி கார், வேன், விமானம் மூலம் 1 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் பயணமாகியுள்ள னர். கடந்த 2 வருடமாக முடங்கி கிடந்த மக்கள் இந்த ஆண்டு சொந்த ஊர்களுக்கு அதிக அளவில் சென்றனர். தீபாவளி முடிந்து பணிக்கு சென்னை திரும்புவோரின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ள தால் வழக்கமாக இயக்கப் படும் 2,100 பேருந்துகளுடன் 1,678 சிறப்பு பேருந்துகள் என மொத்தம் 3,778 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. அக்.26 அன்று 2,954 பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. தமிழகத்தின் பல்வேறு பகுதி களில் இருந்து சிறப்பு பேருந்து கள் சென்னைக்கு விடப்பட் டுள்ளது. இதனால் கூலி வேலை, தனியார் கம்பெனிகளில் வேலை செய்யக்கூடியவர்கள் தென் மாவட்டங்களில் இருந்து லட்சக்கணக்கானோர் சென்னை திரும்புவார்கள் என்ற அடிப்படை யில் போக்குவரத்து நெரிசல் இல்லாமல் வாகனங்கள் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தாம்பரம், பெருங்களத்தூர், கோயம்பேடு பகுதிகளில் வாகன நெரிசல் ஏற்படாத வகையில் போக்குவரத்து கழக அதிகாரி களுடன் காவல்துறையினர இணைந்து செயல்படுகின்றனர். ஆம்னி பேருந்துகளிலும் இடங்கள் நிரம்பி உள்ளன. சென்னை தவிர பிற நகரங்களும் அரசு போக்கு வரத்து கழகங்கள் சார்பில் 3,790 சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.