states

img

ஏப்.5- தொழிலாளர்-விவசாயி மாபெரும் பேரணி -சிஐடியு மாநாடு அறைகூவல்

நாட்டைக் காக்க, மக்களைக் காக்க இதுவரை அணிதிரட்டாத மக்களையும் அணி திரட்டிடுவோம்!

பெங்களூரு, ஜன.21- தொழிலாளர் விரோத, விவசாயி கள் விரோத, தேச விரோத நவீன தாராள மயப் பொருளாதாரக் கொள்கைகளைக் கடைப்பிடித்துவரும் மோடி தலைமை யிலான அரசாங்கத்தை அப்புறப்படுத்திட, வரும் 2023 ஏப்ரல் 5 அன்று சிஐடியு, அகில இந்திய விவசாயிகள் சங்கம், அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் சார்பில் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு மாபெரும் தொழிலா ளர்-விவசாயிகள்-விவசாயத் தொழிலா ளர்களின் பேரணியை நடத்திடுவோம் என்றும், இதுவரை அணிதிரட்டப்படாத மக் களிடமும் சென்று அனைத்துத்தரப்பு மக்க ளையும் அணிதிரட்டிடுவோம் என்றும்  சிஐடியு-வின் அகில இந்திய மாநாடு அறைகூவல் விடுத்துள்ளது. 2022 செப்டம்பர் 5 அன்று நடைபெற்ற தொழிலாளர்-விவசாயிகள் அதிகார் மகா திவேஷன் அமைப்பின் தீர்மானத்தின்படி வரும் ஏப்ரல் 5 அன்று தலைநகர் தில்லியில் தொழிலாளர்கள்-விவசாயிகள் மாபெரும் பேரணி நடைபெறவுள்ளது. அந்தப் பேரணி யானது நாட்டின் வளத்தை உருவாக்கும் சக்திகளாக விளங்கும்  தொழிலாளர் கள்-விவசாயிகள்-விவசாயத்தொழிலா ளர்கள்,  தற்போது அந்நிய மற்றும் உள் நாட்டுப் பெரும் கார்ப்பரேட்டுகளுக்கு சேவகம் செய்து வரும் ஆட்சியாளர்களின் கொள்கைகளை தங்களுக்கு உதவிடும் விதத்தில் அவற்றை மாற்றியமைப்ப தற்காக, மிகப் பெருந்திரளான விதத்தில் மக்களை அணிதிரட்டி, பேரணியை நடத்திட முடிவு செய்துள்ளது.

காலனிய  அடிமைத்தனம் கூடாது

கார்ப்பரேட்டுகள்-இந்துத்துவா மத வெறியர்களின் கள்ளப் பிணைப்பை முறி யடித்திட உழைக்கும் மக்களின் ஒற்று மையை மேலும் வலுவாக உயர்த்திப் பிடித்திட வேண்டும்.   நாட்டின் தொழிலாளர்களை மீண்டும் காலனிய அடிமைத்தனத்திற்குத் தள்ளுவ தற்கு அனுமதித்திடக் கூடாது. நாட்டின் சொத்துக்களை பேராசை பிடித்த கார்ப்பரேட்டுகள் கபளீகரம் செய் திட உழைக்கும் மக்கள் அனுமதிக்க மாட் டார்கள் என்று நாட்டின் ஆளும் வர்க்கங்க ளுக்கு உழைக்கும் மக்கள் எச்சரிக்கை விடுக்கிறார்கள்.   இந்த நாட்டின் மக்கள் உணவுக்காகப் போராடிக் கொண்டிருந்த போதிலும், இந்த நாட்டின் வளங்களை தங்களின் ரத்தத் தாலும் வியர்வையாலும் உருவாக்கியவர் கள் இந்த நாட்டின் தொழிலாளர்-விவசாய  வர்க்கமே என்பதையும், மாறாக லாபவெறி கொண்ட பணக்கார முதலைகள் அல்ல என்று உலகுக்கு அறிவிக்கிறோம் என்று மாநாடு பிரகடனம் செய்தது. நடைபெறவுள்ள மாபெரும் பேரணியா னது, நாளும் அதிகரிக்கும் விலைவாசி, வேலை இழப்புகள், வேலையின்மை, மிகவும் மோசமாகிக் கொண்டிருக்கும் வேலை நிலைமைகள் மற்றும் வாழ்வா தார நிலைமைகள், நாட்டின் சொத்துக்கள் தனியாருக்குத் தாரை வார்க்கப்பட்டு வரு தல், கல்வி, சுகாதாரம் மற்றும் பலவிதமான சேவைப் பணிகள் வணிகமயமாகி வருதல், நாட்டின் தொழிலாளர்களையும் விவசாயிகளையும் ஏகபோக பன்னாட்டு நிறுவனங்களின் தயவில் வாழக்கூடிய நிலைக்குத் தூக்கி எறிந்திருத்தல், வேலை யிடங்களில் ஜனநாயக மற்றும் உரிமை கள் மீது தொடுக்கப்பட்டுள்ள தாக்குதல் கள், அரசமைப்புச்சட்ட மற்றும் நாடாளு மன்ற நடைமுறை விதிகள் மீறப்பட்டி ருத்தல், சிறுபான்மையினர், தலித்துகள், பழங்குடியினர் மற்றும் பெண்கள் மீது கொடூரமானமுறையில் தாக்குதல்கள் தொடுக்கப்பட்டிருத்தல் போன்ற உழைக்கும் மக்களின் எரிகிற பிரச்சனை களை எதிரொலித்திடும்.

பாஜக அரசின் ‘அரக்கத்தனம்’

இப்பிரச்சனைகள் ஒவ்வொன்றும், நவீன தாராளமயக் கொள்கைகளுடன் பின்னிப்பிணைந்தவைகளாகும். பாஜக அரசாங்கம், தங்களுடைய கார்ப்பரேட் எஜ மானர்களின் லாப வெறியையும், செல்வத் தையும் அதிகரிக்கக்கூடிய விதத்தில்  இவற்றை அமல்படுத்திட அடாவடித்தன மாகவும், அரக்கத்தனமாகவும் செயல் பட்டுக் கொண்டிருக்கிறது. சிஐடியு-வின் அனைத்துக் குழுக்க ளும், உறுப்பினர்களும், தாங்கள் பழகும் வட்டப்பரப்பை மேலும் விரிவுபடுத்தி, நம் உறுப்பினர்கள் மத்தியிலும், நம் குடும்பத் தினர் மத்தியிலும், நம் வட்டத்திற்குள் வராது வெளியே இருக்கும் தொழிலாளர் கள் மத்தியிலும், மிகவும் தீவிரப் பிரச்சா ரத்தை விரிவான முறையில் கொண்டு சென்று, ஒன்றிய அரசாங்கம் எப்படியெல் லாம் கார்ப்பரேட்டுகளுடன் கள்ளப் பிணைப்பு கொண்டு அவர்களுக்குச் சேவ கம் செய்து வருகிறது என்பதை விளக்கிட வேண்டும் என்று மாநாடு அறைகூவல் விடுக்கிறது. நம்முடைய மிகவும் நியாய மான கோரிக்கைகளை வென்றெடுத்திட வேண்டுமானால், அதற்கு இந்துத்துவா ஆட்சியாளர்கள் கார்ப்பரேட்டுகளுடன் கள்ளப்பிணைப்பு கொண்டு அவர்களுக் குச் சாதமாக ஆட்சி செய்து வருவதை முறியடித்திட வேண்டியது அவசியமாகும்.

மூலை முடுக்கெல்லாம்

இதற்குத் தேவையான விதத்தில் பிரச்சாரத்தை உடனடியாக மேற்கொள்ள அனைத்து மாநிலக் குழுக்களும், சம்மே ளனங்களும் உடனடியாகத் திட்டமிட வேண்டும் என்று மாநாடு பணிக்கிறது. இந்த செய்தியை, நாட்டின் மூலை முடுக் கெல்லாம் எடுத்துச் சென்றிட, சிஐடியு-வின் உறுப்பினர்கள், ஆதரவாளர்கள், அனுதாபிகள் ஒவ்வொருவரும் முன்வர வேண்டும் என்றும் சிஐடியு கேட்டுக் கொள்கிறது.   2023 ஏப்ரல் 5 அன்று நடைபெற விருக்கும் தொழிலாளர்கள்-விவசாயிகள் மாபெரும் பேரணி மற்றும்  அது தொடர் பான பிரச்சாரத்திற்கு நாட்டிலுள்ள அனை த்து முற்போக்கு மற்றும் ஜனநாயக சக்திக ளும் முழு ஆதரவு அளித்திட வேண்டும் என்றும் சிஐடியு-வின் 17ஆவது மாநாடு வலி யுறுத்துகிறது.

கோரிக்கைகள்:

  1.  தொழிலாளர்கள் அனைவருக்கும் குறைந்தபட்ச ஊதியம் மாதத்திற்கு  26  ஆயிரம் ரூபாய் நிர்ணயம் செய்திட வேண்டும்,  ஓய்வூதியம் 10 ஆயிரம் ரூபாய் நிர்ணயம் செய்திட வேண்டும். ஒப்பந்த முறை ரத்து செய்யப்பட வேண்டும். ராணுவத்தில் அக்னிபாதைத் திட்டம் ரத்து செய்யப்பட வேண்டும்.
  2.  வேளாண் விஞ்ஞானி சுவாமிநாதன் ஆணையம் பரிந்துரைத்துள்ளபடி அனைத்து வேளாண் பொருள்க ளுக்கும்  உற்பத்திச் செலவினம் மற்றும் 50 விழுக்காடு உயர்வுடன் குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயம் செய்திட வேண்டும்.
  3.  ஏழைகள், நடுத்தர விவசாயிகள் அனை வருக்கும் ஒரு தடவை கடன் தள்ளுபடி செய்திட வேண்டும். 60 வயது நிறைந்த விவ சாயத் தொழிலாளர்கள் அனைவருக்கும் ஓய்வூதியம் அளித்திட வேண்டும்.
  4.  தொழிலாளர் சட்டத் தொகுப்புகள் (Labour Codes) எனப்படும் தொழிலா ளர்களுக்குக் கேடு பயக்கும் சட்டங்க ளை ரத்து செய்திட வேண்டும். மின்சாரத் திருத்தச் சட்டத்தை ரத்து செய்திட வேண்டும்.
  5.  அனைவருக்கும் பணிப் பாதுகாப்பு அளித்திட வேண்டும், உத்தரவாதம் அளித்திட வேண்டும். D மகாத்மாகாந்தி தேசிய கிராமப்புற வேலைவாய்ப்புத் திட்டத்தின்கீழ் ஆண்டுக்குக் குறைந்தபட்சம் 200 நாட்க ளுக்கு வேலை அளித்திட வேண்டும், குறைந்தபட்ச ஊதியம் நாளொன்றுக்கு 600 ரூபாய் அளித்திட வேண்டும். நிலு வைத்தொகைகளை உடனடியாக அளித்திட வேண்டும்.   நகர்ப்புற வேலை வாய்ப்புத் திட்டம் உருவாக்கி அமல் படுத்திட வேண்டும்.
  6.  பொதுத்துறை நிறுவனங்களைத் தனி யாருக்குத் தாரை வார்ப்பதை நிறுத்திட வேண்டும். பொதுத்துறை நிறுவனங்க ளை விற்று பணமாக்கும் (National Monetisation Pipeline)முறையை கிழித்தெறிந்திட வேண்டும்.


உணவுப் பொருள்கள் மீதான ஜிஎஸ்டி-யை கைவிடுக

  1.  விலைவாசியைக் கட்டுப்படுத்திட வேண்டும். ‘உணவுப் பொருள்கள் மீதான ஜிஎஸ்டி-வசூலைத் திரும்பப் பெற வேண்டும். பெட்ரோல்/டீசல்/மண் ணெண்ணெய்/சமையல்எரிவாயு முத லானவற்றின்மீதான கலால் வரிகளைக் குறைத்திட வேண்டும்.
  2.  பொது விநியோக முறையை நாடு முழுவதற்கும் விரிவுபடுத்திட வேண் டும். இதன்கீழ் 14 அத்தியாவசிய உண வுப் பொருள்களை வழங்கிடவேண்டும்.
  3.  வருமானவரி செலுத்தாத குடும்பத்தி னருக்கு உணவு மற்றும் வருமா னத்திற்கு உத்தரவாதம் அளித்திட வேண்டும்.
  4.  வன உரிமைகள் சட்டத்தைக் கறாராக அமல்படுத்த வேண்டும். வனவாசி களை வெளியேற்றக்கூடிய விதத்தில் கொண்டுவரப்பட்டுள்ள வன(பாது காப்பு) சட்டம் மற்றும் விதிகளில் கொண்டுவந்துள்ள திருத்தங்களை விலக்கிக்கொள்ள வேண்டும். விளிம்பு நிலை மக்களை ஒடுக்குவதை நிறுத்த வேண்டும், சமூக நீதியை உத்தரவா தப்படுத்திட வேண்டும். D அனைவருக்கும் சுகாதார வசதிகள், கல்வி வசதிகளை உத்தரவாதப்படுத்த வேண்டும்.
  5.  புதிய கல்விக் கொள்கையை கைவிட வேண்டும். D அனைவருக்கும் வீட்டு வசதி அளித்திட வேண்டும்.
  6.  பெரும் பணக்காரர்களுக்கு வரி விதித் திட வேண்டும். கார்ப்பரேட் வரியை உயர்த்திட வேண்டும்.
  7.  செல்வ வரியை அறிமுகப்படுத்திட வேண்டும். இவ்வாறு மாநாட்டில் தீர்மானம் நிறை வேற்றப்பட்டுள்ளது. (ந.நி.)