states

குலசேகரப்பட்டினம் விண்வெளி பூங்கா ரூ.80 ஆயிரம் கோடி முதலீடு

தூத்துக்குடி, டிச.18- துாத்துக்குடி மாவட்டம் குல சேகரப்பட்டினத்தில் அமைய உள்ள  விண்வெளி தொழில் பூங்கா வாயி லாக, 80 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் அதிகமான முதலீடு கிடைக்கும் என  தமிழக ராணுவ தொழில் பெருவழித்  தட திட்ட இயக்குனர் பி.கிருஷ்ண மூர்த்தி தெரிவித்தார். இந்திய தொழில் கூட்டமைப்பு (சிஐஐ) சார்பில், ‘வான்வெளி மற்றும்  ராணுவ தளவாட உற்பத்தி துறையில் தொழில்நுட்பம்’என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடந்தது. அதில், ராணுவ தொழில் பெருவழித்தட திட்ட  இயக்குனர் பி.கிருஷ்ணமூர்த்தி பேசி யதாவது: ராணுவத் துறையின் மிக முக்கி யமான 11தளவாடங்கள், இறக்குமதி செய்யப்பட்டு வந்த நிலையில், தற் போது இவை உள்நாட்டிலேயே தயா ரிக்கப்பட உள்ளன. 1.25 லட்சம் கோடி  ரூபாயில், அடுத்து மூன்று ஆண்டு களில், முக்கிய தளவாடங்கள் தயா ரிக்கப்பட உள்ளன. ராணுவ தளவாடங்கள் ஏற்றுமதி யில், 30 ஆயிரம் கோடி ரூபாய் இலக்கு  நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இதில், ஏற்கனவே 13 ஆயிரம் கோடி ரூபாய்  இலக்கை அடைந்துள்ளோம். தமிழ கத்தில் ராணுவ தொழில் பெருவழித் தடம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தை செயல்படுத்தும்  ஒருங்கிணைப்பு நிறுவனமாக, ‘டிட்கோ’ எனும் தமிழக தொழில் வளர்ச்சி நிறு வனம் உள்ளது. இந்த திட்டத்தின் கீழ் இதுவரை,  13 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு  செய்வதற்கான ஒப்பந்தம் பெறப்பட் டுள்ளது. இதில், 3,500 கோடி ரூபாய் வரை முதலீடு கிடைத்துள்ளது.தொழில் துறைக்காக ‘சிப்காட்’ நிறு வனம் நில வங்கியை ஏற்படுத்தித் தரு கிறது.

இதுவரை, 30 ஆயிரம் ஏக்கர்  நிலம் கையப்படுத்தப்பட்டு உள்ளது.  மேலும், 10 ஆயிரம் ஏக்கர் நிலம்,  ஐந்து ஆண்டுகளில் கையகப்படுத் தப்பட உள்ளது.  காஞ்சிபுரம் மாவட்டம் வல்லம் வடகல் மற்றும் காரணையில் ‘டிரோன்’ பூங்கா அமைக்கப்பட உள்ளன. கோவையில், மூன்று ராணுவ தொழில்  பூங்காக்கள் அமைக்க திட்டமிடப்பட் டுள்ளன. இதேபோல, துாத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினத்தில், விண்வெளிப் பூங்கா, பொது வசதி மையங்களுடன் அமைக்கப்பட உள்ளது. மேலும், ராக்கெட் தயாரிப்பு மற்றும் சேவை தொடர்பான பூங்கா  அமைக்கப்பட உள்ளது. இங்கு ராக்கெட் தளம் அமைக்கப்பட உள்ள தால், அதை விண்வெளிக்கு அனுப்பு வதற்கான செலவில், 50 சதவீதம் குறை யும். இந்த பூங்கா வாயிலாக, 80 ஆயி ரம் கோடி ரூபாய் வரை முதலீடு கிடைக்கும். இதே போல, வான் வெளி மற்றும் ராணுவம் உற்பத்தி தொடர்பாக, பல்வேறு பூங்காக்கள் அமைக்கப்பட உள்ளன.  இவ்வாறு அவர் பேசினார். மத்திய அரசின் தொழில்நுட்ப மேம்  பாட்டு வாரிய இயக்குனர் நவ்நீத் கவு சிக், கருத்தரங்க தலைவர் ராஜிந்தர் பாட்டியா மற்றும் சி.ஐ.ஐ.,யின் சிறு,  குறு, நடுத்தர நிறுவனங்களின் துணை குழு தலைவர் எம்.பொன்னுசாமி உட்  பட பலர் பங்கேற்றனர்.