states

ஜல்லிக்கட்டு சட்டம் செல்லும் உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு மார்க்சிஸ்ட் கட்சி வரவேற்பு

சென்னை, மே 18-   ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த தடை யில்லை என்ற உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்பு தெரி வித்துள்ளது. ஜல்லிக்கட்டிற்காக போராடிய மாணவர்கள், இளைஞர்கள், தமிழக மக்களுக்கு பாராட்டுக்களை தெரிவித்துள்ளது. இதுகுறித்து கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:  தமிழ்நாட்டின் பாரம்பரிய கலாச்சாரம் மற்றும் பண்பாட்டின் பிரதிபலிப்பான ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த தடையில்லை என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயற்குழு வரவேற்கிறது. விலங்குகள் வதை தடுப்புச் சட்டத்தில் காட்சிப்படுத்தக்கூடாத விலங்குகள் பட்டிய லில் காளையை சேர்த்ததன் காரணமாக உச்ச நீதிமன்றம் ஜல்லிக்கட்டிற்கு தடை விதித்தது. இந்த தடையை நீக்கவும், ஜல்லிக்கட்டு போட்டி தொடர்ந்து நடைபெறவும் தேவையான நட வடிக்கைகளை மேற்கொள்ள மோடி தலைமை யிலான ஒன்றிய பாஜக அரசு மறுத்தது. பாஜக அரசின் இந்த நடவடிக்கையை கண்டித்து தமிழகம் முழுவதும் மாணவர்கள் - இளை ஞர்கள் மாபெரும் பேரெழுச்சியான போராட்டத்தில் ஈடுபட்டதும்,

இதன் விளைவாக தமிழ்நாடு அரசு அவசரச் சட்டம் இயற்றியதும் குறிப்பிடத்தக்கது.   இந்த அவசரச் சட்டத்தை எதிர்த்து சிலர் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தப் பின்னணியில், உச்சநீதிமன்றம் மே 18 அன்று தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு போட்டி யை நடத்துவதற்கு தடையில்லை என்று  தீர்ப்பளித்துள்ளது வரவேற்கத்தக்கது. இத்தீர்ப்பு ஒட்டுமொத்த தமிழக மக்களின் உணர்வுகளை பிரதிபலிப்பதோடு, மாண வர்கள், இளைஞர்களின் போராட்டத்திற்கும், தமிழ்நாடு அரசின் சா9ர்பில் நடத்திய சட்டப் போராட்டங்களுக்கும் கிடைத்த மாபெரும் வெற்றியாகும் என்பதை மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாநிலச் செயற்குழு தெரி வித்துக் கொள்வதோடு தனது பாராட்டுக்களை யும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.