states

தீக்கதிர் முக்கிய செய்திகள்

வாடிக்கையாளரை அறிந்து கொள்ளும் (KYC) வழிகாட்டுதல் விதிகளுக்கு இணங்காத தற்காக அமேசான் நிறு வனத்தின் பணபரிமாற்ற பிரிவான அமேசான் பே (Amazon Pay) நிறுவனத் திற்கு இந்திய ரிசர்வ் வங்கி ரூ.3.6 கோடி அப ராதம் விதித்துள்ளது.

சென்னையில் கடந்த சில நாட்களாக பரவலாக காய்ச்சல், இருமல் என் பது பரவி வரும் நிலை யில், மருத்துவமனைகள் நிரம்பி வழிந்த வண்ணம் உள்ளன. இதுகுறித்த ஆய்வின் முடிவில், சென்னையில் பரவி வரும் காய்ச்சல் இன்புளூ யன்ஸா-ஏ வகை வைரஸ் தொற்று எனவும், நுரை யீரலில் தாக்கத்தை ஏற் படுத்தும் ஆஎஸ்வி வைரஸ் தொற்றும் பரவ லாக இருப்பதாகவும் தெரி விக்கப்பட்டுள்ளது.

ஆந்திரப் பிரதேச மாநி லம் போகாபுர சர்வதேச விமான நிலையத்தில் ஜிஎம்ஆர் குழுமம் ரூ. 5,000 கோடி முதலீடு செய்யும் எனவும், பயணி களின் சேவையை கவ னிக்கும் என ஆந்திரப் பிரதேச உலக முதலீட்டா ளர்கள் உச்சி மாநாட்டில் ஜிஎம்ஆர் தலைவர் ஜிஎம் ராவ் தெரிவித்துள்ளார். 

கர்நாடகாவில் 300 ஏக்கர் நிலப்பரப்பில் ஆப்பிள் ஐபோன் தொழிற்சாலை அமைக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.

வட மாநில தொழிலாளர்களுக்கு தமிழ்நாட்டில் எவ்வித அச்சுறுத்தலும் இல்லை. தமிழ்நாட்டில் வடமாநில தொழிலாளர்களை தாக்குவது போன்ற விஷத்தனமான செய்தி ஒருசிலரால் பரப்பப்பட்டு வருகிறது. வதந்தி பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தொழிலாளர் நலன் மற்றும் திறன்மேம்பாட்டு துறை அமைச்சர் சி.வி.கணேசன் எச்சரிக்கை விடுத்துள்ளார். 

பிரபல தொலைக்காட்சி நடிகரான திலீப் ஜோஷியின் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதையடுத்து அவரது வீட்டைச் சுற்றி ஆயுதம் போலீசார் நிறுத்தப்பட்டுள்ளனர். வெடிகுண்டு மிரட்டல் வந்த அழைப்பு எண்  சிம் கார்டு கம்பெனியில் வேலை பார்க்கும் ஊழியருடையது எனவும், மிரட்டல் விடுத்த உண்மையான நபரை போலீசார் தேடி வருகின்றனர். “தாரக் மேத்தா” என்ற தொலைக்காட்சி தொடர் மூலம் திலீப் ஜோசிக்கு நாடு முழுவதும் ரசிகர்கள் உள்ளனர்.

உலகச் செய்திகள்

ஆகஸ்டு 22 ஆம் தேதி முதல் 24 ஆம் தேதி வரையில் தென் ஆப்பிரிக்காவின் கவுடெங் மாகாணத்தில் பிரிக்ஸ் உச்சி மாநாடு நடைபெறவுள்ளது. இந்தத தகவலை தென் ஆப்பிரிக்க அமைச்சர் மாண்டிலி குன்குபுபெலி தெரிவித்தார். பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா மற்றும் தென் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகள் இந்த பிரிக்ஸ் அமைப்பில் இடம் பெற்றுள்ளன. ஜனவரி 1, 2023 அன்று, சீனாவிடம் இருந்து பிரிக்ஸ் அமைப்புக்கான தலைமைப் பொறுப்பை தென் ஆப்பிரிக்கா ஏற்றுக் கொண்டது. 

அமெரிக்க ராணுவக் கூட்டணியான நேட்டோவில் சேருவதற்கு பின்லாந்தின் நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது. நேட்டோவில் சேரலாம் என்ற தீர்மானம் அந்நாட்டின் நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்டபோது 184 உறுப்பினர்கள் ஆதரவாகவும், ஏழு பேர் எதிர்த்தும் வாக்களித்தனர். இந்தத் தீர்மானம்  அந்நாட்டு ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்படும். மூன்று மாதங்களுக்குள் அவர் அதில் கையெழுத்திட வேண்டும். 

2023 ஆம் ஆண்டில் சீனாவின் பொருளாதாரம் நல்ல துவக்கத்தைக் கண்டிருக்கிறது. தெருச்சந்தைகளில் வியாபாரம் களைகட்டி யுள்ளது. தொழிற்சாலைகளில் எந்திரங்கள் இயங்கும் சத்தம் ஒலித்துக் கொண்டேயிருக்கிறது. உலகின் இரண்டாவது பெரிய பொருளா தாரமான சீனா, எதிர்பார்த்ததை விட நன்றாக இருக்கும் என்பதற்கான அறிகுறிகள் தென்படுவதாக பொருளாதார வல்லுநர்கள் கூறியுள்ள னர். சீனாவின் வளர்ச்சி, ஒட்டுமொத்த உலகப் பொருளாதார வளர்ச்சிக்கு வழிவகுக்கும் என்றும் அவர்கள் கருதுகிறார்கள்.