சிறுநீரக தொற்று அல்லது சிறுநீரக பிரச்சனை தொடர்பான நோய்களை கண்டறிய இனி சிறுநீரை பரிசோதிக்க வேண்டாம் என்றும், ஏஎம்ஆர்எக்ஸ் சாப்ட்வேர் மூலம் விரைவாக நோய் களை கண்டறிய முடியும் என தகவல் வெளி யாகியுள்ளது.
திகார் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் தில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் எடை 8.5 கிலோ குறைந்துவிட்டதாக ஆம் ஆத்மி குற்றம் சாட்டி இருந்த நிலையில், 2 கிலோ மட்டுமே குறைந்துள்ளதாக திகார் சிறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
“துரோகத்தால் பாதிக்கப்பட்டவர் உத்தவ் தாக்கரே. அதனால் அனைவரும் வேதனை யடைந்தனர். அவர் மீண்டும் முதல்வராகும் வரை அந்த வேதனை நீங்காது” என பாஜக ஆதரவு ஜோதிர்மட சங்கராச்சாரியார் தெரிவித்துள்ளார்.
கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமா ருக்கு எதிராக சிபிஐ பதிவு செய்த ஊழல் வழக்கை தள்ளுபடி செய்யக் கோரி தொடரப்பட்ட மனுவை உச்சநீதிமன்றம் நிராகரித்துள்ளது.
நேபாள பிரதமராக நியமிக்கப்பட்டுள்ள கே.பி. சர்மா ஒலிக்கு, பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
கர்நாடகாவில் கனமழை பெய்து வருவதா லும், இன்னும் சில நாட்களில் அம்மாநில அணைகள் அனைத்தும் நிரம்பும் என்பதாலும் மேட்டூர் அணைக்கான நீர்வரத்து அதிகரிக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
டீசல் விலை அதிகரிப்பால் ரூ.295 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும், பேருந்துகளின் டிக்கெட் கட்டணத்தை 15% முதல் 20% வரை உயர்த்தப்பட உள்ளதாகவும் கர்நாடக அரசு அறிவித்துள்ளது.
“பெண் காவலர்களை அவதூறாக பேசிய யூடியூபர் சங்கரின் செயலை மன்னிக்க முடியாது” என உச்சநீதிமன்ற நீதிபதிகள் கண்ட னம் தெரிவித்தனர்.
கடந்த மே மாதம் நடைபெற்ற கியூட் - யுஜி தேர்வில் சிக்கல்களை எதிர்கொண்ட மாண வர்களுக்கு ஜூலை 19 அன்று மறுதேர்வு நடத்தப் படும் என தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.