திருவனந்தபுரம் (மல்லு சுவராஜ்யம் நகர்), ஜன.10- பாலின சமத்துவத்துக்கு எதிரானது ஆர்எஸ்எஸ் சித்தாந்தம். ஆணாதிக்க சமூகத்தை மேலும் வலுப்படுத்த ஆர்எஸ்எஸ் தலைமையிலான பாஜக அரசு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. சமத்துவத்துக்காக ஒற்றுமையாகப் போராடுவோம் என்கிற மாதர் சங்க மாநாட்டின் முழக்கத்திற்கு எதிராக மக்களைப் பிளவுபடுத்த பாஜக முயற்சிக்கிறது. பெண்களின் பாது காப்பையும் பாலின சமத்துவத்தையும் ஒன்றிய அரசு சீர்குலைத்து வருகிறது, என கேரள முதல்வர் பினராயி விஜயன் குற்றம்சாட்டினார். திருவனந்தபுரம் மல்லு சுவராஜ்யம் நகரில் (புத்தரிக்கண்டம் மைதானம்) ஜனவரி 9 திங்களன்று நடந்த அகில இந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் அகில இந்திய மாநாட்டின் நிறைவு பொதுக்கூட்டம் அகில இந்திய தலை வர் பி.கே.ஸ்ரீமதி தலைமையில் நடந்தது.
பொதுக்கூட்டத்தை துவக்கி வைத்து முதல்வர் பினராயி விஜயன் பேசுகை யில், பெண்களுக்கு எதிரான வன்முறை கள் நடந்தாலும், பாதிக்கப்பட்ட வர்களை அவமானப்படுத்தும் கலாச்சாரம் முன்னெடுக்கப்படுகிறது. பெண்களின் பாதுகாப்பையும் பாலின சமத்துவத்தையும் ஒன்றிய அரசு சிறு மைப்படுத்துகிறது. அனைத்து மட்டத் திலும் பெண்களை குற்றவாளிகளாக சித்தரிக்கும் போக்கையும், அதை பொது புத்தியாக மாற்றும் முயற்சியை யும் தடுக்க வேண்டும். இவை ஆணாதிக்க சமூகத்தை வலுப்படுத்தும் திட்டமிட்ட முயற்சியாகும். நாட்டில் பாதிக்கப்பட்டவர்களை அவமானப்படுத்துவது அதிகரித்து வருகிறது. பில்கிஸ் பானு வழக்கு இதற்கு உதாரணம். கத்துவாவில், குற்றம் சாட்டப்பட்டவர்களுக்காக ஆர்.எஸ்.எஸ் கள மிறங்கியது. சிறுபான்மையினரை எதிரி களாகப் பார்க்கும் ஆர்எஸ்எஸ் நிலைப்பாடு நாடு எங்கும் உள்ளது. எந்த வேத புராணத் தின் அடிப்படையிலும் இந்த நிலைப்பாட்டை ஆர்எஸ்எஸ் எடுக்கவில்லை. இது ஹிட்ல ரின் நாசிசத்தை அடிப்படையாகக் கொண் டது. கும்பல் படுகொலை ஹிட்லரின் மாதிரி. அதை செயல்படுத்தலாம் என்று ஆர்எஸ்எஸ் நினைக்கிறது.
கலவர திட்டத்தில் காசி, மதுரா
பாபர் மசூதியை தகர்த்தவர்கள், இதோடு நின்றுவிடாது காசியும் மதுராவும் அடுத்த இலக்கு என பிரகடனம் செய்தனர். இப்போது காசியில் ஞானவாபி மசூதியையும், மதுரா சாகிப் ஜாஸ் மசூதியையும் விவாதத்துக்கு உட்படுத்தி உள்ளனர். அது குறித்த வழக்கு கள் நீதிமன்றங்களில் நடந்து வருகின்றன. இதன் பின்னணியில் பெரும் கலவரம் நடத் தும் திட்டத்துடன் செயல்படுகிறார்கள். இந்த பின்னணியில்தான் மதுரா மசூதியை ஆய்வு செய்ய தயார் என மத்திய தொல்லியல் துறை மாவட்ட நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. இது முற்றிலும் சட்டவிரோதமான நடவ டிக்கையாகும். இது உச்சநீதிமன்ற நிலைப் பாடுக்கு மாறானது. நாடு முழுவதும் கிறிஸ்தவ தேவாலயங் கள் கடுமையாக தாக்கப்படுகின்றன. கர் நாடகாவில் சிக்பெல்லாபூரில் 150 ஆண்டு களுக்கு முன்பு கட்டப்பட்ட சென்ட் ஜோசப் ஆலயம் 2021 கிறிஸ்துமஸ் தினத்தன்று தாக் கப்பட்டது. கடந்த கிறிஸ்துமஸ் தினத்தன்று சத்தீஸ்கரில் கிறிஸ்தவர்களை விரட்டி யடித்த சம்பவமும் நடந்தது. பாஜக மக்களை பிரிக்க முயற்சிக்கிறது. நாட்டின் ஜனநாய கம், மதச்சார்பின்மை, கூட்டாட்சி இவற்றுக்கு சவால் விடுக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. விடு தலைப்போராட்டத்தின் அருகில்கூட செல்லா தவர்கள் நாட்டின் ஆட்சி அதிகாரத்துக்கு வந்துள்ளனர்.
எதிர்க்கட்சி போல் செயல்படும் ஆளுநர்கள்
இந்தியை திணிக்க முற்படுகிறார்கள். ஒரு நாடு-ஒரு மொழி, ஒருநாடு- ஒரு மதம், ஒரு நாடு- ஒரு போலீஸ், ஒருநாடு- ஒரே சட்டம் என்று முழக்கமிடுகிறார்கள். மதச் சார்பின்மை என்பது எந்த மதமும் மேலா னதோ கீழானதோ அல்ல மதம் சாராத வர்களும்கூட சமமாக நடத்தப்பட வேண்டும் என்பதாகும். ஆனால், அதற்கு மாறாக குடி யுரிமைச் சட்டம் கொண்டுவரப்பட்டது. அதை உடனடியாக அமல்படுத்தப்போவதாக கூறி ஒரு பகுதி மக்கள் அச்சுறுத்தப்பட்டார்கள். பல மாநிலங்களிலும் எதிர்கட்சி போல செயல்படும் ஆளுநர்கள் மூலம் பெருமள விலான அத்துமீறல்களை ஒன்றிய அரசு நடத்துகிறது. நாட்டின் வேலையின்மை கடந்த ஆண்டு இறுதியில் 8.8 சதவிகிதமாக இருந்தது. ஏற்றத்தாழ்வு அதிகமுள்ள நாடாக இந்தியா மதிப்பீடு செய்யப்படுகிறது. உல கின் பட்டினி நாடுகளின் பட்டியலில் உள்ள 121 நாடுகளில் 107 ஆவது இடத்தில் நமது நாடு உள்ளது. இந்த பின்னணியில் கேரளத்தின் நலத்திட்டங்கள் கூடுதல் முக்கியத்துவம் பெறுகின்றன. வேலையில்லா திண்டாட்டத்தை மட்டுப்படுத்த கேரளா மாற்று வழிகளை பின்பற்றி வருகிறது. பெண்களின் உரிமை களை பாதுகாப்பதில் கேரள அரசு உறுதி யாக உள்ளது. பாலின சமத்துவ பட்ஜெட்டை அமல்படுத்தும் மாநிலம் கேரளம். புதிய கேர ளம் அதை மேலும் தீவிரமாக முன்னெடுக்கும் என்றும் பினராயி விஜயன் கூறினார். பொதுக்கூட்டத்தில் சங்கத்தின் அகில இந்திய பொதுச் செயலாளர் மரியம் தாவ்லே, சிபிஎம் அரசியல் தலைமைக்குழு உறுப்பி னர் பிருந்தா காரத் உள்ளிட்ட தலைவர்கள் பேசினர்.