states

மின்கட்டண சலுகையை ரத்து செய்த மோடி அரசு

ஜம்மு, ஜூன் 20- கடந்த 33 ஆண்டுகளாக இருந்த மின் கட்டண சலுகையை ஒன்றிய பாஜக அரசு ரத்து செய்த நிலையில், காஷ்மீர் பண்டிட் கள் ஜம்மு-ஸ்ரீநகர் தேசிய நெடுஞ் சாலையில் போராட்டம் நடத்தியுள்ளனர்.  ஜம்மு-காஷ்மீரின் “ஜக்தி” என்ற பகுதி யில் புலம்பெயர்ந்த காஷ்மீர் பண்டிட் களுக்கு குடியிருப்பு வசதி உள்ளது. இவர்களுக்கு சலுகை என்ற அடிப்படை யில் 33 ஆண்டுகளாக மின்கட்டணம் வசூ லிக்கப்படுவதில்லை. ஆனால் வரும் காலங்களில் கண்டிப்பாக அதாவது அடுத்த மாதம் மின்கட்டணம் செலுத்த  வேண்டும் என ஒன்றிய பாஜக அரசின் நேரடி கட்டுப்பாட்டில் ஆட்சி அதி காரத்தை கவனித்து வரும் துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா, ஜம்மு  பவர் டெவலப்மென்ட் கார்ப்பரேஷன் லிமி டெட் (JPDCL) மூலம் புதிய அறிவிப்பை  வெளியிட்டுள்ளார். துணை நிலை ஆளு நரின் இந்த அறிவிப்பு புலம்பெயர்ந்த காஷ்மீர் பண்டிட்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்திய நிலையில், ஜம்மு-ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் இடைவிடா போராட்டம் நடத்தி வரு கின்றனர்.

நிவாரண தொகையில் எப்படி மின்கட்டணம் செலுத்துவது?

“நான்கு பேர் கொண்ட குடும்பத்திற்கு 13,000 ரூபாய் நிவாரணம் மற்றும் இலவச  ரேஷன் மூலம் வாழ்பவர்கள் காஷ்மீர் பண்டிட்கள். ஆனால் அவர்களது வாழ்வில் மின்கட்டண வசூல் என்பது  வரையறுக்கப்பட்ட நிவாரண வருமா னத்தில் பெரும் சுமையாக இருக்கும். இது காஷ்மீர் பண்டிட்களின் அன்றாட வாழ்க்கையை பாதிக்கும்” என அப்னி கட்சியின் பொதுச் செயலாளர் விஜய் பகயா கூறியுள்ளார்.