1,848
பொருளாதார மந்தநிலை காரணமாக செலவுகளை குறைப்பதாகக் கூறி கூகுள் நிறுவனம் சமீபத்தில் 12,000 ஊழியர்களை நீக்கியது. இது மொத்த ஊழியர்களில் 6% பேர் ஆகும். இந்நிலையில் கூகுள் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை கடந்த ஆண்டு ரூ.1,848 கோடி சம்பளம் பெற்றதாக தகவல் வெளியாக, எங்களை நீக்கிவிட்டு சுந்தர் பிச்சைக்கு மட்டும் இவ்வளவு சம்பளம் ஏன் என்று நீக்கப்பட்ட ஊழியர்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.
கர்நாடகத் தேர்தல்: சோனியா காந்தி நாளை பிரச்சாரம்
கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தல் களம் விறுவிறுப்படைந்துள்ளது. பாஜகவுக்கு ஆதரவாக பிர தமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்டோரும், காங்கிரஸ் சார்பில் மல்லிகார்ஜூன கார்கே, ராகுல் காந்தி, பிரியங்காகாந்தி உள்ளிட்டோரும் பிரச்சாரம் செய்து வருகின்றனர். காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி மே 6-ஆம் தேதி கர்நாடகத்தில் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார். இதற்காக, அன்று பகல் 12.30 மணியளவில் ஹுப்பள்ளிக்கு வரும் சோனியா காந்தி, அண்மையில் பாஜக-விலிருந்து விலகி காங்கிரசில் சேர்ந்த முன்னாள் முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டரை ஆதரித்துப் பேசுகிறார்.
‘திறப்பு விழாவுக்கு என்னை அழைக்கவே இல்லை’
“மற்ற நாடுகளின் தலைவர்களைக் கூட எளிதாகச் சந்திக்க முடிகிறது; ஆனால், இந்த மாநி லத்தின் முதல்வரைச் சந்திக்க முடியவில்லை. நாடுகள் கூட ஒன்றிணையக் கூடும். ஆனால், துரதிருஷ்டவசமாக ராஜ் பவனும் (ஆளுநர் மாளிகை), பிரகதி பவனும் (முதல்வரின் இல்லம்) ஒருபோதும் நெருங்காது. மாபெரும் தலைமைச் செயலகத்தின் திறப்பு விழா நடை பெற்றது. ஆனால், மாநிலத்தின் முதல் குடிமகளுக்கு அழைப்பில்லை. ஆளுநர், முதல்வர் அல்லது அமைச்சர்கள் என யாரும் தங்களுக்காகப் பணியாற்றுவதில்லை; மக்களுக்காகவும், நாட்டுக்காக வும் பணியாற்றுகிறோம் என்பதை நினைவில்கொள்ள வேண்டும்” என்று தெலுங்கானா ஆளு நர் தமிழிசை ‘வேதனை’ தெரிவித்துள்ளார்.
3.5 ஆண்டுகளில் ரூ.1.5 லட்சம் கோடியை கொள்ளையடித்த பாஜக!
கர்நாடக மாநிலத்தில், கடந்த மூன்றரை ஆண்டுகளில் ரூ. 1 லட்சத்து 50 ஆயிரம் கோடியை பாஜக கொள்ளையடித்துள்ளது. இந்த பணத்தில் 100 எய்ம்ஸ் மருத்துவமனைகள், 2,250 கி.மீ. நீள ஆறுவழி விரைவுச் சாலை, 187 இஎஸ்ஐ மருத்துவமனைகள் மற்றும் 30 ஆயிரம் ஸ்மார்ட் வகுப்பறைகளை கட்டியிருக்க முடியும் என்று காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி பட்டியலிட்டுள்ளார். மேலும், “இந்த கொள்ளை காரணமாக ஆட்சி மற்றும் வேலைவாய்ப்புகளை உருவாக்க பாஜக மறந்து விட்டது, மாநிலத்தில் 2.5 லட்சம் பணியிடங்கள் காலியாக உள்ளன” என்றும் குறிப்பிட்டுள்ளார்.
‘தொடர்ந்து சரத்பவாரின் வழிகாட்டுதலைப் பெறுவோம்’
“சரத் பவார் அரசியலில் இருந்து ஓய்வு பெறவில்லை. எனக்கு அவரை தெரியும். அவர் கட்சிக்காகவும், மகாராஷ்டிரா மற்றும் நாட்டிற்காகவும் தொடர்ந்து பணியாற்றுவார். தேசிய வாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியை தான் சரத் பவார் ராஜினாமா செய்துள்ளார், கட்சியை அல்ல. தேவைப்படும் போதெல்லாம் சரத் பவாரின் வழிகாட்டுதலை பெறுவோம்” என்று சிவ சேனா (உத்தவ் அணி) எம்.பி. சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார். மேலும், “சரத் பவார் அவரது சுய சரிதையில், உத்தவ் தாக்கரே பற்றி என்ன எழுதியிருந்தாலும் அது அவருடைய தனிப்பட்ட கருத்தாக இருக்கும். மிக விரைவில் உத்தவ் தாக்கரே சாம்னாவில் ஒரு நேர்காணலை வழங்குவார், அப்போது இதுதொடர்பான அனைத்து கேள்விகளுக்கும் பதிலளிப்பார்” என்றும் ராவத் குறிப்பிட்டுள்ளார்.
ம.பி. காங்கிரஸ் அலுவலகத்தை சூறையாடிய பஜ்ரங்தள் கும்பல்
சாதி, மத உணர்வுகளைத் தூண்டி, மக்களிடையே பகைமையை உருவாக்கும் தனி நபர்கள் அல்லது பஜ்ரங் தள், பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா போன்ற அமைப்பு களைத் தடை செய்ய நடவடிக்கை எடுப்போம் என்று கர்நாடக மாநில தேர்தல் அறிக்கையில் காங்கி ரஸ் கூறியிருந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, மத்தியப் பிரதேசத்திலுள்ள பஜ்ரங் தள் கூட்டத்தினர், ஜபல்பூரிலுள்ள காங்கிரஸ் அலுவலகத்தின் கதவுகளை உடைத்து உள்ளே நுழைந்து, அலுவலகத்தின் மேற்கூரை மற்றும் கட்டுமான பொருள்களை அடித்து நொறுக்கி சூறையாடி வன்முறை வெறியாட்டம் போட்டுள்ளனர்.
ஒன்றிய அரசுதான் தடை செய்ய முடியும்: வீரப்ப மொய்லி சமாதானம்
கர்நாடகத்தில் ஆட்சிக்கு வந்தால், பஜ்ரங் தள் அமைப்பைத் தடை செய்வோம் என்று காங்கி ரஸ் தேர்தல் அறிக்கை வெளியிட்டிருந்தது. இதற்கு சங்-பரிவார் மத்தியில் எதிர்ப்பு எழுந்துள்ளது. இந்நிலையில், ‘விஸ்வ ஹிந்து பரிஷத்தின் இளைஞர் பிரிவான பஜ்ரங் தளத்தை தடை செய்யும் திட்டம் எதுவும் இல்லை. எங்கள் தேர்தல் அறிக்கையில் பி.எப்.ஐ., பஜ்ரங் தளம் இரண்டையும் குறிப்பிட்டுள்ளோம். இதில் அனைத்து தீவிர அமைப்புகளும் அடங்கும். ஒரு அமைப்பை ஒரு மாநில அரசால் தடை செய்ய முடியாது. ஒன்றிய அரசால்தான் தடை செய்ய முடியும்” என்று காங்கிரஸ் மூத்த தலைவர் வீரப்ப மொய்லி விளக்கம் அளித்துள்ளார்.
பல் பிடுங்கிய விவகாரம் வி.கே.புரம் காவல் துணை ஆய்வாளர், தனிப்பிரிவு காவலர்களும் வழக்கில் சேர்ப்பு
திருநெல்வேலி ,மே 4- நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் சரக பகுதியில் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டவர்களின் பற்களை பிடுங்கியது தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் கல்லிடைக்குறிச்சி காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் பாதிக்கப்பட்ட சுபாஷ் என்பவர் அளித்த புகாரின் பேரில் சிபிசிஐடி ஆய்வாளர் உலகராணி விசாரணை நடத்தி, உதவி போலீஸ் சூப்பிரண்டு (ஏஎஸ்பி) பல்வீர்சிங் மற்றும் சிலர் மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தார். இந்நிலையில் அம்பை காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் அருண்குமார் என்பவர் அளித்த புகாரின் பேரில் ஒருங்கிணைந்த குற்றப்பிரிவு கூடுதல் காவல் எஸ்.பி. சங்கர் விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டு புதன் கிழமை பாதிக்கப்பட்ட தரப்பை சேர்ந்த 7 பேருக்கு சம்மன் அனுப்பினார்.தொடர்ந்து ஏ.எஸ்.பி பல்வீர்சிங் மீது வன் கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்தார். அதில் ஏ.எஸ்.பி. பெயரை குறிப்பிட்டு மற்றும் சிலர் என குறிப்பிடப்பட்டு இருந்தது. இதுவரை நடந்த அனைத்து வித அதிகாரிகளின் விசாரணைகளிலும் பல் வீர்சிங் மற்றும் சிலர் என்று மட்டுமே முதல் தகவல் அறிக்கை யில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. ஆனால் தற்போது புதிய திருப்பமாக மேலும் 2 பேரின் பெயர்கள் குறிப்பிடப் பட்டுள்ளது. அதன்படி ஏ.எஸ்.பி பல்வீர்சிங், வி.கே.புரம் காவல் நிலையத்தில் பணியாற்றிய தனிப்பிரிவு காவலர் போகன், துணை ஆய்வாளர் முருகேசன் ஆகியோர் மீது வன் கொடுமை தடுப்புச் சட்டம், சிறார்களை துன்புறுத்தல் உள்ளிட்ட 7 பிரிவுகளில் அம்பை காவல் நிலையத்தில் வழக்கு ப்பதிவு செய்துள்ளனர். இதுதொடர்பாக அருண்குமார் தரப்பை சேர்ந்த 7 பேர் வெள்ளியன்று சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் ஆஜராக உள்ள நிலையில் அவரது எதிர் தரப்பான செல்லப்பா உள்பட 8 பேருக்கும் வெள்ளிக்கிழமை ஆஜராகுமாறு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
எதிர்க்கட்சிகளுக்கு நிதி தராதீர்! அமெரிக்காவுக்கு மெக்சிகோ கண்டிப்பு
மெக்சிகன் சிட்டி, மே 4- மெக்சிகோவில் உள்ள எதிர்க்கட்சிகள் மற்றும் அரசுக்கு எதிரான தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் ஆகியவற்றிற்கு நிதி தர வேண்டாம் என்று அமெரிக்காவை மெக்சிகோ வலியுறுத்தியுள்ளது. இது குறித்து அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனுக்கு, மெக்சிகோவின் ஜனாதிபதி ஆண்ட்ரூஸ் மானுவல் லோபஸ் ஓப்ரடார் கடிதம் ஒன்றை எழுதியிருக்கிறார். இதில், “எதிர்க்கட்சிகள் மற்றும் அரசுக்கு எதிரான தொண்டு நிறுவனங்களுக்கு நிதி தருவதை நான் கண்டிக்கிறேன். சட்டப்படி மற்றும் நேர்மையான முறையில் தேர்வு செய்யப்பட்ட அரசுக்கு நான் தலைமை தாங்குகிறேன். எங்களுக்கு எதிராக சர்வதேச வளர்ச்சிக்கான அமெரிக்க முகமை பணத்தைக் கொட்டுகிறது”என்று சுட்டிக்காட்டியுள்ளார். மேலும் அக்கடிதத்தில், “இந்த அணுகுமுறை எங்கள் இறையாண்மைக்கு எதிரானதாகும். எங்கள் விவகாரத்தில் தலையீடு செய்வதாகும். சுதந்திரமான மற்றும் இறையாண்மை கொண்ட நாடுகள் என்ற தன்மை சர்வதேசச் சட்டப்படி நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். ஆனால் எங்களுக்குக் கிடைத்துள்ள தகவல் என்னவென்றால், எதிர்க்கட்சிகளுக்கும், தொண்டு நிறு வனங்களுக்கும் தரப்படும் நிதியை அதி கரிக்கப் போகிறார்கள்” என எழுதி யிருக்கிறார். இந்தக் கடிதத்தை வெளிப்படை யாகவே இணையதளத்தில் அம்லோ வெளியிட்டிருக்கிறார். மேலும் தனது கடிதத்தில் மெக்சிகோ எவால்யுவா, ஆரட்டிகிள் 19 மற்றும் மெக்சிகோ யுனை டெட் உள்ளிட்ட அமைப்புகளை அவர் பட்டியலிட்டார். அதோடு, இந்தக் கடிதத்தை அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எலிசபெத் ஷெர்வூட் ராண்டலி செண்ட் வசம் நேரில் ஒப்படைத்திருக் கிறார்கள். அவர் தற்போது மெக்சிகோ பயணம் மேற்கொண்டு வருகிறார்.
உலகச் செய்திகள்
இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தலாம் என்று ஆளும்தரப்பு ஏற்றுக் கொண்டதையடுத்து கென்யாவின் எதிர்க்கட்சிக் கூட்டணி தனது போராட்டத்தை திரும்பப் பெற்றுக்கொண்டுள்ளது. அதோடு, பேச்சுவார்த்தைக்கான குழுவில் ஆளும் தரப்பில் இருந்து போடப்பட்டவர்களில் ஒருவரை நீக்க வேண்டும் என்ற கோரிக்கையும் ஏற்றுக் கொள்ளப்பட்டது. விரைவில் பேச்சுவார்த்தை தொடங்கும் என்று இருதரப்பைச் சேர்ந்தவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
ஐரோப்பிய யூனியனில் இருந்து கிடைக்கும் நிதியைப் பெறுவதற்காக ஹங்கேரி நீதித்துறை சீர்திருத்தங்களைக் கொண்டு வந்துள்ளது. இதற்கான மசோதாவை அந்நாட்டின் நாடாளுமன்றம் ஏற்றுக் கொண்டது. 151 உறுப்பினர்கள் மசோதா வுக்கு ஆதரவாகவும், 23 பேர் வாக்களிக்காமலும் இருந்தனர். நீதித்துறையில் இருந்த ஊழல் மற்றும் சுதந்திரத்தில் தலையீடு ஆகியவற்றால் கோடிக்கணக்கான ஐரோப்பிய யூனியனின் நிதி நிறுத்தி வைக்கப்பட்டது. இந்த மசோதா நிறைவேற்றப்பட்டதால், அந்த நிதி வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இணைய தளங்கள் வாயிலாக பிற நாடுகளைக் கடுமையாக உளவு பார்க்கும் நிறுவனமாக அமெரிக்காவின் சி.ஐ.ஏ. உருவாகி யுள்ளது. இணையதளங்களைக் கையகப்படுத்தக்கூடிய வல்லுநர் களைக் கொண்ட பேரரசையே அமெரிக்கா நடத்தி வருகிறது. பல்வேறு “அமைதிப் புரட்சிகள்” மற்றும் “நிறப் புரட்சிகளை” நடத்தி நாடுகளை சீர்குலைக்க உதவியுள்ளது என்று சீனாவின் தேசிய கணினி வைரஸ் அவசரநிலை எதிர்கொள்ளல் மையம் மேற்கொண்டுள்ள ஆய்வில் தெரிய வந்திருக்கிறது.இணைய தளங்கள் வாயிலாக பிற நாடுகளைக் கடுமையாக உளவு பார்க்கும் நிறுவனமாக அமெரிக்காவின் சி.ஐ.ஏ. உருவாகி யுள்ளது. இணையதளங்களைக் கையகப்படுத்தக்கூடிய வல்லுநர் களைக் கொண்ட பேரரசையே அமெரிக்கா நடத்தி வருகிறது. பல்வேறு “அமைதிப் புரட்சிகள்” மற்றும் “நிறப் புரட்சிகளை” நடத்தி நாடுகளை சீர்குலைக்க உதவியுள்ளது என்று சீனாவின் தேசிய கணினி வைரஸ் அவசரநிலை எதிர்கொள்ளல் மையம் மேற்கொண்டுள்ள ஆய்வில் தெரிய வந்திருக்கிறது.
தொழிற்சாலை சட்டத்திருத்த மசோதா அதிகாரப்பூர்வமாக திரும்பப்பெறப்பட்டது
சென்னை, மே 4- 12 மணி நேர வேலை மசோதா அதிகாரப்பூர்வமாக திரும்பப் பெறப்பட்டதாக பேரவைச் செயலாளர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். மே தின நிகழ்ச்சியில் பேசிய முதல் வர் மு.க.ஸ்டாலின், தமிழக தொழி லாளர் நலத்துறை சார்பில் கொண்டு வரப்பட்ட சட்டத் திருத்த மசோதா திரும்பப் பெறப்பட்டுள்ளது. இதுகுறித்த செய்தி பேரவை உறுப்பி னர்கள் அனைவருக்கும் செய்திக் குறிப்பு மூலமாக விரைவில் தெரி விக்கப்படும் என்றார். இதன்படி, வேலைக்கான சட்டத் திருத்த மசோதா திரும்ப பெறப்பட்டு விட்டதாக பேரவைச் செயலாளர் சீனி வாசன், அனைத்து சட்டமன்ற உறுப்பி னர்களுக்கும் கடிதம் மூலம் தெரிவித் துள்ளார்.
காலை சிற்றுண்டி திட்டம் விரிவாக்கம்: அரசு ஆலோசனை
சென்னை, மே 4- தமிழ்நாட்டில் காலை சிற்றுண்டி திட்டம் விரிவுபடுத்தப்படும் என சட்டப் பேரவையில் தெரிவிக்கப் பட்டிருந்தது. வரும் கல்வியாண்டு முதல் தமிழ்நாட்டிலுள்ள 30 ஆயிரத்து 122 அரசு தொடக்கப் பள்ளிகளில் இந்த திட்டம் விரிவு படுத்தப்பட உள்ளது. ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை பயிலும் 18 லட்சம் மாண வர்கள் பயனடையும் வகையில், இந்த திட்டம் விரிவுபடுத்தப்பட வுள்ளது. இதையடுத்து தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இது தொடர்பாக விரிவாக ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தலைமைச் செயலாளர் வெ.இறை யன்பு மற்றும் கல்வித் துறை உள்ளிட்ட பல்வேறு துறை உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.காலை சிற்றுண்டி திட்டத்தை செயல் படுத்தும் முறை, அனைத்து மாணவர்க ளுக்கு தரமான உணவு வழங்குவது உள்ளிட்ட பல்வேறு முக்கிய விஷ யங்கள் குறித்து இதில் விரிவாக ஆலோ சிக்கப்பட்டது.
95 கிராமங்களை மேம்படுத்த ஒப்பந்தம்
சென்னை, மே 4- எச்.சி.எல் நிறுவனம் சமூகப் பொறுப்பு திட்டத்தின் கீழ் தமிழ்நாட் டின் 95 கிராம ஊராட்சிகளை மேம்படுத்த வகை செய்யும் ஒப்பந்தம் சென்னையில் வியாழனன்று (மே4) கையெழுத்தானது. அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் முன்னிலையில், தமிழ்நாடு அரசின் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அரசு முதன்மை செயலாளர் அமுதா, எச்.சி.எல். அறக்கட்டளை யின் திட்ட இயக்குநர் அலோக் வர்மா ஆகியோர் இதில் கையெழுத்திட்ட னர். எச்.சி.எல். சாமுடே தமிழ்நாட்டில் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள புதூர் மற்றும் விளாத்திக்குளம் ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள 95 கிராம ஊராட்சிகளில் 1,40,000 பயனா ளிகளுக்கு பயனளிக்கும் வகையில் நீர்வள மேலாண்மை, விவசாயம், சுகாதாரம், கல்வி, ஊட்டச்சத்து மேலாண்மை போன்ற துறைகளில் கவனம் செலுத்தி, பின்தங்கிய குடும் பங்களுக்கு சிறந்த வருமானத்திற்கு வழிவகுக்கும் என்று மாநில அரசின் செய்தி குறிப்பு தெரிவிக்கிறது.
மணமகள் தேவை
40வயது மணமகனுக்கு (திருமணம் ஆகாதவர்) மணமகள் தேவை. சாதி, மதம் தடையில்லை. விதவை மற்றும் விவாகரத்து பெற்றோர் தொடர்பு கொள்ளலாம். தொடர்பு கொள்ள வேண்டிய எண்: 9994906401
வங்கக்கடலில் மே 7ல் காற்றழுத்த தாழ்வு உருவாக வாய்ப்பு
சென்னை, மே 4- தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில், வரும் 7 ஆம் தேதி காற்ற ழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப் புள்ளது என சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. இது குறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தென் இந்திய பகுதிகளின் மேல் வளி மண்டலத்தின் கீழடுக்குகளில் கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுகி றது. தமிழ்நாட்டின் கடலோரப் பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தென் கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் வரும் மே 7 ஆம் தேதி காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும். 8 ஆம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டல மாக வலுப்பெற்று வடக்கு திசையில் நகர்ந்து மத்திய வங்கக்கடல் பகுதிக ளில் புயலாக வலுபெறக்கூடும். தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில், வெள்ளிக்கிழமை (மே 5) முதல் வரும் 8 ஆம் தேதி வரை இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும். குமரிக்கடல் பகுதிகள், கேரள கடலோரப்பகுதிகள், லட்சத்தீவு பகுதி கள் மற்றும் இலங்கையை ஒட்டிய தென் மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடை யிடையே 55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள் ளது.
ஆளுநர் பதவி விலக சிபிஐ வலியுறுத்தல்
சென்னை, மே 4- அரசியல் அமைப்புக் கடமையி லிருந்து தவறிய ஆளுநர் பதவி விலக வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் வெளியிட் டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதா வது: தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒரு ஆங்கில நாளிதழுக்கு அளித்தப் பேட்டியின் மூலம், தன்னை மீண்டும் ஒரு ஆர்எஸ்எஸ் - பாஜகவைச் சேர்ந்த வர் என்பதை நிரூபித்துள்ளார். பல்வேறு மசோதாக்களை நிலுவை யில் வைத்துக் கொண்டு அப்படி யில்லை என்று பொய் சொல்கிறார். தமிழ்நாடு நிதியமைச்சர் முன்வைத்த குற்றச்சாட்டுக்களை மறுக்க முடியாமல் ஆர்எஸ்எஸ்-ஐச் சார்ந்த என்.ஜி.ஓ. அமைப்பை நியாயப் படுத்துகிறார். தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு கெட்டு விட்டது என்று தமிழ்நாடு அரசு மீது களங்கம் கற்பிக்கும் வகை யில் தொடர்ந்து ஒரு பொய்யான தோற்றத்தை உருவாக்குவதற்கு முனைந்துள்ளார். ஆர்எஸ்எஸ் - பாஜக முன்வைக்கும் ஒரே நாடு ஒரே பாரதம் என்ற முழக் கத்தை ஆதரிப்பதன் மூலமும், மதச்சார்பின்மை பற்றி அரசியல் நிர்ணய சபையில் பேசவில்லை என்று கூறுவதன் மூலமும், திராவிட மாடலை கொச்சைப்படுத்துவதன் மூலமும் ஆளுநர் ஆர்.என்.ரவி தான் ஒரு ஆர்எஸ்எஸ் - பாஜக உறுப்பினர் என்பதை வெளிபடுத்தியுள்ளார். இப்படி ஒரு பேட்டியை அளித்த தன் மூலம் ஒரு ஆளுநர் என்ற முறை யில் தன் அரசியல் அமைப்புக் கடமை யிலிருந்து தவறிவிட்டார். எனவே, தமிழ் நாடு ஆளுநரை வன்மையாக கண்டிப்ப தோடு உடனடியாக அவர் பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்துகிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
நீட் தேர்வு ஹால்டிக்கெட் வெளியீடு
சென்னை, மே 4- இளநிலை மருத்துவ படிப்புகளில் சேருவதற்கு நீட் தேர்வு தகுதியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நீட் தேர்வு இந்தியாவில் 546 நகரங்களில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதுதவிர வெளிநாடுகளிலும் இத்தேர்வு நடைபெறுகிறது. நீட் தேர்வு வருகிற 7 ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) பிற்பகல் 2 மணி முதல் மாலை 5.20 மணிவரை நடைபெறுகிறது. இத்தேர்வை 20 லட்சத்து 87 ஆயி ரம் மாணவ-மாணவிகள் எழுத விண்ணப்பித்துள்ளனர். நாடுமுழுவதும் நீட் தேர்வை முறையாக நடத்தி முடிக்க தேசிய தேர்வு முகமை அனைத்து ஏற்பாடு களையும் செய்து வருகிறது. இந் நிலையில் நீட் தேர்வுக்கான நுழைவு சீட்டு (ஹால்டிக்கெட்) இணைய தளத்தில் நேற்று வெளியிடப்பட்டது. ஏற்கனவே மாணவர்கள் தேர்வு எழுதக் கூடிய நகரங்கள் தெரிவிக் கப்பட்ட நிலையில் தற்போது ஹால் டிக்கெட் வெளியாகியுள்ளது. மாணவர்கள் இணைய தளத்தில் விண்ணப்ப எண், பிறந்த தேதி ஆகிய வற்றை பதிவு செய்து ஹால் டிக் கெட்டை பதிவிறக்கம் செய்யலாம். பதிவிறக்கம் செய்யப் பட்ட நுழைவு சீட்டுடன் ஆதார் அட்டை, பாஸ்வேர்டு, ஓட்டுநர் உரிமம் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றின் நகலை தேர்வு மையத்திற்கு கொண்டு செல்ல வேண்டும். மாண வர்கள் நுழைவுச் சீட்டை பதிவிறக்கம் செய்வதில் ஏதேனும் சிரமம் இருந் தால் எண் 011-40759000 எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்று தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது. நீட் தேர்வு தமிழ், ஆங்கிலம், இந்தி உள்பட 11 மொழி களில் நடத்தப்படுகி றது. தமிழகத்தில் 1.20 லட்சம் மாணவர்கள் நீட் தேர்வு எழுத விண்ணப்பித்துள்ளனர். தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, கோவை, மதுரை, கடலூர், கரூர், திருச்சி, கன்னியா குமரி, தஞ்சாவூர், வேலூர், விழுப் புரம், ஊட்டி உள்ளிட்ட 31 நகரங்க ளில் நீட் தேர்வு நடைபெறுகிறது.