பெங்களூரு, ஏப்.12- கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் வியாழனன்று (ஏப்.13) துவங்குகிறது. 224 தொகுதிகளை கொண்ட கர்நாடக சட்டப்பேரவைக்கு மே 10-ஆம் தேதி ஒரேகட்ட மாக தேர்தல் நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் கடந்த மார்ச் 29 அன்று அறிவிப்பு வெளியிட்டது. அதன்படி வேட்பு மனு தாக்கல் வியாழக்கிழமையன்று காலை 11 மணிக்குத் துவங்குகிறது. ஏப்ரல் 20 வரை வேட்புமனுக்கலுக்கு அவகாசம் வழங்கப் பட்டுள்ளது. ஏப்ரல் 13 முதல் 20 வரை- ஞாயிற்றுக் கிழமை மற்றும் அரசு பொதுவிடுமுறை நாட்க ளைத் தவிர்த்து- ஏனைய நாட்களில் காலை 11 மணி முதல் பிற்பகல் 3 மணிவரை வேட்பு மனுக்களை தாக்கல் செய்யலாம் என்றும், வேட்பாளர் மனு தாக்கல் செய்ய வரும் போது, உடன் 4 பேர் மட்டுமே வர அனுமதி அளிக்கப்படுவார்கள் என்றும் கூறப் பட்டுள்ளது. ஏப்ரல் 21 அன்று வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நடைபெறும். மனுக்களைத் திரும்பப் பெறுவதற்கு ஏப்ரல் 24 கடைசி நாளாகும். அதைத்தொடர்ந்து மே 10 அன்று வாக்குப் பதிவு நடத்தப்பட்டு, மே 13 அன்று முடிவுகள் வெளியிடப்பட உள்ளன. தேர்தலையொட்டி, ஆளும் பாஜக முதற்கட்டமாக 189 தொகுதிகளுக்கும், பிர தான எதிர்க்கட்சியான காங்கிரஸ் 166 தொகுதி களுக்கும், மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சி 93 தொகுதிகளுக்கு ஏற்கெனவே வேட்பா ளர்களை அறிவித்திருந்தன. வேட்புமனுத் தாக்கல் துவங்குவதால், எஞ்சிய வேட்பா ளர்களையும் விரைவிலேயே அறிவிப்பார் கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.