கண்ணூர், செப்.30- கண்ணூர் பல்கலைக்கழக கல்லூரி மாணவர் சங்க தேர்தலில் எஸ்எப்ஐ அபார வெற்றி பெற்றது. அமைப்பு அடிப்படையில் தேர்தல் நடந்த 73 கல்லூரிகளில் 55இல் எஸ்எப்ஐ வெற்றிக் கொடி நாட்டியுள்ளது. கண்ணூர் மாவட்டத்தில் 48 கல்லூரிகளில் 39 லும், காசர்கோட் டில் 20இல் 13 கல்லூரிகளும், வயநாட்டில் 5இல் 3 கல்லூரிகளும் எஸ்எப்ஐ தலைமை வகிக்கும். கேஎஸ்யு, எம்எஸ்எப், ஏபிவிபி, சகோதரத்துவ இயக்கம் போன்ற அமைப்புகள் மற்றும் வலதுசாரி ஊடகங்களின் கூட்டு முயற்சிகள் இருந்தபோதிலும், இந்திய மாணவர் சங்கத்தின் வெற்றியை தடுத்து நிறுத்த முடியவில்லை. அரசியலற்ற அமைப்பு என்னும் வாதத்திற்கு எதிரான ஆக்கப்பூர்வ மான அரசியல் மற்றும் வகுப்பு வாதத்திற்கு எதிராக மதச்சார்பற்ற கல்லூரிகள் என்ற முழக்கங்களுடன் எஸ்எப்ஐ இந்த தேர்தலை எதிர் கொண்டது. எஸ்.எப்.ஐ.யின் வர லாற்றுச் சிறப்புமிக்க வெற்றிக்காக இரவு பகலாக உழைத்த மாணவர்க ளுக்கு மாநிலச் செயலாளர் பி.எம். அர்ஷா, செயலாளர் கே.அனுஸ்ரீ ஆகி யோர் வாழ்த்துத் தெரிவித்தனர்.