சென்னை, ஜன.9- ஆளுநர் நடவடிக்கைக்கு திராவிடர் கழக தலைவர் கி.வீர மணி கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் விடுத் துள்ள அறிக்கையில், ஆளுநர் உரை என்பது மாநில அரசு எழு திக் கொடுத்ததை அட்சரம் பிச காமல், பிறழாமல் படிப்பதுதான் - அதுதான் மரபும், சட்டமும் ஆகும். ஆனால், தமிழ்நாட்டின் ஆளுநராக இருக்கக் கூடிய .ஆர்.என்.இரவி ஆளுநராகப் பொறுப்பேற்றது முதல், சட்ட விரோதமாகவும், தமிழ்நாடு அர சுக்கு எதிராகவும், மதச் சார்பின் மைக்கு மாறாகவும் பேசி வரு கிறார் - நடந்து வருகிறார். அதில், உச்சக்கட்டமாக பேர வையில் தமிழ்நாடு அரசு தயா ரித்துக் கொடுத்த அறிக்கையில் இல்லாததைப் படிப்பதும், அறிக்கையில் இடம் பெற்றிருந்த தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர், பெருந்தலைவர் காமராசர், அறிஞர் அண்ணா, முத்தமிழ் அறிஞர் கலைஞர் பெயர்களைப் படிக்காமல், உதா சீனம் செய்ததும் கண்டிக்கத்தக்க தாகும். தமிழ்நாடு சட்டப்பேரவை யில் இதுவரை நடந்திராத அநா கரிக செயலாகும் இது. இதனைத் திராவிடர் கழகம் வன்மையாகக் கண்டிக்கிறது. ஆளுநரின் இந்த சட்ட மீறலை, மரபு மீறலை முதல மைச்சர் சுட்டிக்காட்டி, ஏற்கெ னவே ஆளுநர் ஒப்புக்கொண்டு, அச்சிடப்பட்டுள்ள உரை மட் டுமே அவைக் குறிப்பில் இடம் பெறும் என்று அறிவித்தது வர வேற்கத்தக்கது. இவ்வாறு வீரமணி கூறியுள் ளார்.