100 நாள் வேலை திட்டத்திற்கு நிதிவெட்டு: கி.வீரமணி கண்டனம்
சென்னை. பிப்.18- மகாத்மா காந்தி 100 நாள் வேலைத் திட்டத்திற்கு ஒன்றிய அரசு ஒவ்வொரு ஆண்டும் நிதியைக் குறைத்து வருகிறது இது கிராமப்புற ஏழை மக்களின் வயிற்றில் அடிக்கும் கொடுமை என்று திராவிடர் கழகத் தலை வர் ஆசிரியர் கி.வீரமணி கண்டனம் தெரிவித்துள்ளார், இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில் 2023-2024 நிதியாண்டின் ஒன்றிய அரசால், மகாத்மா காந்தி 100 நாள் வேலை திட்டத்துக்கு ரூ. 60 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளது. கடந்த ஆண்டு, ரூ.73,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலை யில், தற்போது 21.6% குறைவாக ஒதுக்கப்பட்டுள்ளது. 100 நாள் வேலைத் திட்டத்தின்கீழ், பட்டியல் இனத்தவர்கள், பழங்குடி யின வகுப்பினர், அனைத்துப் பிரிவுக ளையும் சார்ந்த பெண்களே அதிகளவு பயனடைந்து வருகின்றனர். எடுத்துக் காட்டாக, தமிழ்நாட்டில் 100 நாள் வேலைத் திட்ட பயனாளிகளில், கிட்டத் தட்ட 85-90% பேர் பெண்களாக உள்ளனர். இந்த நிதி குறைப்புக்கு பல்வேறு மாநிலங்கள் எதிர்ப்பு தெரி வித்துள்ளன. கேரள நிதியமைச்சர் கே.என்.பாலகோபால் கூறுகையில், “நாடு மிக மோசமான வேலை வாய்ப்புத் திண்டாட்டத்தை சந்திக்கும் இவ்வேளையில் தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தை ஒன்றிய அரசு கடந்த ஆண்டைப்போலவே வஞ்சித்துள்ளது. இந்தப் பற்றாக் குறை நிதியை வைத்துக் கொண்டு ஏற்கெனவே தொடங்கிய பணிகளைக் கூட முடிக்க இயலாது” என்று கூறி யுள்ளார். தொடர்ந்து மக்களுக்கு எதிராக ஒன்றிய அரசு செயல்பட்டால் மக்களின் கண்ணீர், ஆட்சியாளனின் செல்வத்தை அழிக்கும் என்று திருக் குறளை சுட்டிக்காட்டி வீரமணி எச்சரித்துள்ளார்.
உழைக்கும் மக்களின் நலன் காப்போம்: முதலமைச்சர்
சென்னை, பிப். 18- ‘சிந்தனைச் சிற்பி’ சிங்காரவேலர் அவர்களின் பிறந்தநாளையொட்டி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டா லின் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளி யிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், “தொழிலாளர்களின் தோழராகப் பொதுவுடைமைக் கருத்தியலைத் தூக்கிப் பிடித்த ‘சிந்தனைச் சிற்பி’ சிங்காரவேலர் அவர்களின் பிறந்தநாள் இன்று. ‘புரட்சிப் புலி’யென வாழ்ந்திட்ட அவர் வாழ்வைப் போற்றுவோம், உழைக்கும் மக்களின் நலன் காக்க உறுதியேற்று உழைப்போம்” என்று தெரிவித்துள்ளார்.
போலீஸ் விசாரணையை மனித உரிமை மீறலாக கருதமுடியாதாம்
சென்னை, பிப். 18- சாதாரணமான காவல் துறை விசார ணைகளை மனித உரிமை மீறல்களாக கருதமுடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. கட்ட பஞ்சாயத்து செய்ததாக வெள்ளி வியாபாரி ரமேஷ் என்பவர் அளித்த புகாரில் உதவி ஆணையர் லட்சுமணனுக்கு மனித உரிமை ஆணையம் ரூ.25,000 அபராதம் விதித்தது. இந்த ஆணைய உத்தரவை எதிர்த்து உதவி ஆணையர் தொடர்ந்த வழக்கில், உதவி ஆணையருக்கு எதிரான உத்தரவு ரத்து செய்யப் பட்டது. ஆரம்ப நிலையிலேயே காவல் துறையினர் மீது மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகளை தெரிவிப்பது, ஒட்டுமொத்த காவல் துறையின் ஊக் கத்தை குறைத்து விடுமென்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
மின்வாகனங்கள் உற்பத்தி: தமிழ்நாடு அரசுடன் ஓலா புரிந்துணர்வு ஒப்பந்தம்
சென்னை, பிப். 18- தமிழ்நாடு அரசிற்கும், ஓலா எலெக்ட்ரிக் நிறுவனத்திற்கும் இடையே ரூ.7,614 கோடி முதலீட்டில் 3,111 நபர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் வகையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டு ள்ளது. காணொலி வாயிலாக வேலூர் மாவட்டத்தில் 4.98 ஏக்கர் நிலப் பரப்பளவில் ரூ.30 கோடியில் மினி டைடல் பூங்கா அமைப்பதற்கு காணொலி வாயிலாக முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். ஓசூர் சிப்காட் தொழிற்பூங்காவில் ரூ.150 கோடி முதலீட்டில் நிறுவப் பட்டுள்ள ஐநாக்ஸ் ஏர் ப்ராடக்ட்ஸ் நிறுவனத்தின் அதிஉயர் தூய்மை யான திரவ மருத்துவ ஆக்சிஜன் உற்பத்தி ஆலையை காணொலி வாயிலாக முதலமைச்சர் திறந்து வைத்தார். சென்னையில் ரூ.110 கோடி முதலீட்டில் நிறுவப்பட்டுள்ள ஜிஎக்ஸ் குழுமத்தின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். தொடர்ந்து, முதலமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில் தமிழ் நாடு, அரசிற்கும் ஓலா எலெக்ட்ரிக் மொபிலிட்டி பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திற்கும் இடையே புரிந் துணர்வு ஒப்பந்தம் மேற்கொள் ளப்பட்டது. ரூ.7,614 கோடி முதலீட்டில் 3,111 நபர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைத்திடும் வகை யில் நான்கு சக்கர மின்சார வாகனங் கள் உற்பத்தி மற்றும் 20 கிகாவாட் மின்கலன்கள் உற்பத்தித் திறன் கொண்ட ஆலைகளை அமைப்பதற் கான புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது. தலைமைச் செயலகத்தில் நடை பெற்ற நிகழ்வில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் துரை முருகன், தங்கம் தென்னரசு, தலை மைச்செயலாளர் இறையன்பு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
எதிர்பாராத பதிலடி கிடைக்கும் வடகொரியா எச்சரிக்கை
பியோங்யாங், பிப்.18- அமெரிக்காவும், தென் கொரியாவும் இதுபோன்று பதற்றத்தை ஏற்படுத்தும் வகையில் போர் ஆயத்தங்களை செய்து வந்தால் எதிர்பாராத பதிலடி கிடைக்கும் என்று வட கொரியா எச்சரித்துள்ளது. கொரியப் பகுதியில் பதற்றத்தை ஏற் படுத்தும் வகையிலான நடவடிக்கைகளில் அமெரிக்கா தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. வடகொரியாவும், தென் கொரி யாவும் ஒற்றுமைப்பட்டு விடக்கூடாது என்பதில் அமெரிக்கா குறியாக உள்ளது. அவ்வப்போது போர் ஒத்திகைகளில் ஈடுபட்டு வந்த அமெரிக்காவும், தென் கொரி யாவும் குறிப்பிட்ட நாட்களில் ஒவ்வொரு ஆண்டும் நடத்துவது என்றும், அதைப் பெரிய அளவில் மேற்கொள்வது என்றும் உடன்பாட்டை எட்டின. பிப்ரவரி 22 ஆம் தேதியன்று இந்தப் பயிற்சியை இரு நாடுகளும் தொடங்கு கின்றன. இரு தரப்பும் பங்கேற்ற உயர்மட்ட ராணுவ அதிகாரிகள் கூட்டத்தில் இதற்காக தயாரிப்பு ஏற்பாடுகள் பற்றி விவாதிக்கப் பட்டன. தென் கொரியப் பாதுகாப்புத் துறை யின் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கை யில், “வட கொரியாவின் அணுஆயுத மிரட் டலை மனதில் கொண்டு, இரு தரப்பும் செய்திகள் பரிமாற்றம் மற்றும் ஆலோ சனை ஏற்பாடுகளைப் பலப்படுத்துவது என்று ஏற்றுக் கொண்டுள்ளன” என்று கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் இதுபோன்ற ஒத்திகை கள் நடைபெற்றால், ராணுவ நடவடிக்கை எடுப்பது குறித்தும் ஆலோசனை செய் வோம் என்று வடகொரியா கூறியுள்ளது. இது குறித்து வடகொரிய அரசின் ஊடக மான கே.சி.என்.ஏ.வில் வெளியான அறிக் கையில், “வரலாறு காணாத வலுவான பதி லடியைத் தருவோம்” என்று எச்சரித்திருக்கி றார்கள். வடகொரியா குறித்த தவறான தகவல்களையும் சர்வதேச ஊடகங்கள் மூலமாகத் தொடர்ந்து அமெரிக்கா வெளியிட்டு வருகிறது.