states

ஈரோட்டில் கே.பாலகிருஷ்ணன் பிரச்சாரம்

 ஈரோடு, பிப்.14- ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி வேட்பாளர் ஈவி கேஎஸ்.இளங்கோவனை ஆத ரித்து 22 ஆம்தேதி சிபிஎம்  மாநில செயலாளர் கே.பால கிருஷ்ணன் பிரச்சாரத்தில் ஈடு பட உள்ளார்.  ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில், திமுக தலைமையிலான மதச்  சார்பற்ற முற்போக்கு கூட்டணி யின் சார்பில், காங்கிரஸ் வேட்  பாளர் ஈவிகேஎஸ்.இளங்கோ வன் போட்டியிடுகிறார். பிப்ர வரி 27 ஆம்தேதி வாக்கு பதிவு  நடைபெறுகிறது. ஈவிகேஎஸ் இளங்கோவன் வெற்றியை உறுதிப்படுத்த மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் அங்  கம் வகிக்கும், திமுக, சிபிஎம்,  சிபிஐ, மதிமுக, விசிக, கொம தேக உள்ளிட்ட கட்சி தலைவர் களும், மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவர்களும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், தமிழ் நாடு அமைச்சர்கள் பலரும்,  தீவிர வாக்கு சேகரிப்பு பய ணத்தை மேற்கொண்டு வரு கின்றனர். இதன்ஒருபகுதி யாக மார்க்சிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வருகிற 22 ஆம்தேதி ஈவிகேஎஸ்.இளங்கோவனை ஆதரித்து பிரச்சாரத்தில் ஈடுபடுகிறார். கே.பாலகிருஷ்ணன், ஈரோடு மாநகரில், 22 ஆம்தேதி மரப் பாலம், கே.என்.கே.ரோடு, சம்  பத் நகர் உள்ளிட்ட இடங்க ளில் பிரச்சாரம் மேற்கொண்டு  வாக்கு சேகரிப்பில் ஈடுபடு கிறார். இவருடன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும்  கூட்டணி கட்சியினர் பங்கேற்க உள்ளனர். 

சு.வெங்கடேசன் எம்.பி., பிரச்சாரம்

ஈவிகேஎஸ்.இளங்கோ வனை ஆதரித்து மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட்ட கட்சியின் மதுரை  நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் (இன்று)  புதனன்று பிரச்சாரத்தில் ஈடு படுகிறார். இவர், மாலை 5.30  மணிக்கு விவிசிஆர் நகரிலும்,  6.30 மணிக்கு அக்ரஹாரத்தி லும், இரவு 7.30 மணிக்கு பெரிய வலசு பகுதியிலும் பிரச்சாரம் செய்ய உள்ளார்.