states

img

கும்பமேளா கருத்தரங்கா? ஓட்டம் பிடித்த அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதி சேகர்

லக்னோ பாஜக ஆளும் உத்தரப்பிரதேச மாநிலத் தின் அலகாபாத் உயர்நீதிமன்ற நீதி பதியாக இருப்பவர் சேகர். இவர் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற்ற ஆர்எஸ்எஸ் அமைப்பின் துணை பிரிவான விஸ்வ இந்து பரிஷத் மாநாட்டில் கலந்து கொண்டார். அதில்,”இஸ்லாமியர்கள் தங்களது குழந்தைகளை சகிப்புத்தன்மை இல்லாமல் வளர்க்கிறார்கள். இஸ்லாமியர்கள் நாட்டின் வளர்ச்சிக்கு தடையாக இருக்கிறார்கள். பெரும் பான்மையினரின் (இந்துக்களின்) விருப்பப் படியே இந்த நாடு செயல்படும். பொது சிவில் சட்டத்தை ஆர்எஸ்எஸ், விஎச்பி மட்டுமல்லாது உச்சநீதிமன்றமும் ஏற்றுக்கொண்டிருக்கிறது” என வகுப்புவாதத்திற்கு ஆதரவாக வெறுப்புப் பேச்சை கக்கினார். இதற்கு நாடு முழுவதும் பல்வேறு தரப்பில் இருந்து கண்டனம் எழுந்த தைத் தொடர்ந்து உச்சநீதிமன்ற கொலீஜியம், நீதிபதி சேகரை அழைத்து எச்சரிக்கை செய்து அனுப்பியது.  இந்நிலையில், அலகாபாத்தில் நடைபெறும் கும்பமேளாவின் ஒரு பகுதியாக ஜனவரி 22ஆம் தேதி நடைபெறும் கருத்தரங்கில் பங்கேற்க சர்ச்சைக்குரிய நீதிபதி சேகருக்கு இந்துத்துவா அமைப்புகள் அழைப்பு விடுத்துள்ளன. அதாவது அயோத்தியில் ராமர் கோவில் திறக் கப்பட்டு ஓராண்டு நிறைவு பெற்றதை கொண்டா டும் விதமாக கும்பமேளா விழாவில் “அயோத்தி ராமர்” கருத்தரங்கு ஏற்பாடு செய்யப்பட்டுள் ளது. கருத்தரங்கு நிகழ்வில் நீதிபதி சேகரின் பெயர் உள்ளது. இத்தகைய சூழலில்  “அயோத்தி ராமர்” கருத்தரங்கில் இருந்து நீதிபதி சேகர் விலகுவதாக அறிவித்துள்ளார்.  ஜனவரி 22ஆம் தேதி நீதிமன்ற வேலை நாள் என்பதால், தான் விழாவில் கலந்துகொள்ள முடியாது என்று கூறி நீதிபதி சேகர் கருத்த ரங்கில் பங்கேற்காமல் தவிர்த்துள்ளார்.