சென்னை, ஜூன் 6- டெல்டா மாவட்டங்களில் தூர்வாரும் பணிகளை ஜூன் 9 ஆம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்கிறார். அதனைத் தொடர்ந்து 11, 12 ஆகிய தேதிகளில் சுற்றுப் பய ணமாக சேலம் மாவட்டத் துக்கு செல்லும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டா லின், கலைஞர் நூற்றாண்டு விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பங்கேற்கிறார். கலைஞரின் சிலையை திறந்து வைக்கும் முதல மைச்சர், ஈரோடுக்கு பேருந்து நிலையம் உள்ளிட்ட பல்வேறு முடி வுற்ற பணிகளை திறந்து, சுமார் 50 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார். சேலம் மாவட்டத்தில் சீர்மிகு நகர திட்டத்தின் கீழ் முடிவுற்ற பணிகள் மற்றும் புதிதாக தொடங்கப்பட உள்ள பணிகள் என சுமார் ரூ. 2 ஆயிரம் கோடி மதிப்பி லான பணிகளை முதல்வர் தொடங்கி வைக்க உள்ளார். அதனைத் தொடர்ந்து, 12-ஆம் தேதி டெல்டா பாசனத்துக்காக மேட்டூர் அணையில் இருந்து தண் ணீரை திறந்து விடுகிறார். டெல்டா மாவட்டங்களில் ஜூன் 5 ஆம் தேதி ஆய்வு மேற்கொள்ளவிருந்த முதலமைச்சரின் பய ணம் தற்போது ஜூன் 9 ஆம் தேதிக்கு மாற்றப்பட் டுள்ளது. தஞ்சை, திரு வாரூர், நாகை உள்ளிட்ட மாவட்டங்களில் குறுவை சாகுபடி தொடங்கியுள்ள நிலையில் முதல்வர் ஆய்வு செய்கிறார்.