states

என்டிபிசி-க்கு எதிராக ஜோஷிமத் நகர மக்கள் போராட்டம்!

டேராடூன், ஜன.11- ஜோஷிமத் நகரம் புதையும் அபா யத்தில் தள்ளப்பட்டதற்கு, என்டிபிசி-யின் தபோவன் விஷ்ணுகாட் நீர்மின் திட்டமே கார ணம் என தகவல்கள் வெளியானதால், தபோ வன் நீர்மின் திட்டப் பணிகளை நிறுத்தக் கோரி ஜோஷிமத் மக்கள் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். தேசிய அனல் மின் நிறுவனம் எனப்படும் என்டிபிசி (National Thermal Power  Corporation Private Ltd- NTPC) சார்பில்  தபோவன் அணையில் விஷ்ணுகாட் நீர்  மின் நிலைய திட்டப் பணிகள் மேற்கொள் ளப்பட்ட. இதன் ஒரு பகுதியாக ரிஷிகேஷ் - பத்ரிநாத் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்  துள்ள ஜோஷிமத் நகருக்கு அடியில் 16 கி.மீ. தொலைவுக்கு சுரங்கம் அமைக்கப்பட்டது. இந்த சுரங்கத்தில் உயரழுத்தம் கொண்ட வாயு உருவாகி மேற்பகுதி நிலப்பரப்பில் வெடிப்புகள் ஏற்படுவதாக செய்திகள் வெளி யாகின. அதன் தொடர்ச்சியாகவே தற்போது ஜோஷிமத் மக்களின் வீடுகள், கட்டடங்கள் விரிசல் காணத் துவங்கியுள்ளதாகவும் தக வல்கள் பரவின. எனவே, என்டிபிசி-யை வெளியேற்றக் கோரி, ஜோஷிமத் மக்கள் புதனன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆனால், இந்தக் குற்றச்சாட்டை மறுத்து  என்டிபிசி ஏற்கெனவே அறிக்கை வெளி யிட்டுள்ளது. “தபோவன் விஷ்ணுகாட் நீர்மின் திட்டத்தின் எந்த சுரங்கப் பாதையும் ஜோஷி மத் நகர் வழியாக செல்லவில்லை. என்டிபிசி யின் சுரங்கப் பாதைகளுக்கும் ஜோஷிமத்  நிலச்சரிவிற்கு எந்தத் தொடர்பும் இல்லை  என்று என்டிபிசி தெளிவுபடுத்த விரும்புகிறது.  இந்தக் கடினமான சூழ்நிலையில் ஜோஷி மத் நகர மக்களுக்கு தனது வருத்தத்தை தெரி வித்துக் கொள்கிறது” என்று என்டிபிசி தெரி வித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

ஜோஷிமத்தை அடுத்து கர்ணபிரயாக் நகரிலும் வீடுகளில் விரிசல்

உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள ஜோஷி மத் நகரில் கடந்த சில நாட்களாக வீடுகளி லும் சாலைகளிலும் பெரிய அளவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. மேலும் அந்த நகரம் கொஞ்  சம் கொஞ்சமாக பூமிக்குள் புதைந்து வரு வது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந் நிலையில் உத்தரகண்டின் கர்ணபிரயாக் நக ரில் உள்ள பகுகுணா நகரிலும் சுமார் 50 வீடு களில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால், பகு குணா நகரிலும் பல குடும்பங்கள் தங்களின் வீடுகளை விட்டு வெளியேறி வருகின்றனர்.

ஆண்டுக்கு 2.5 அங்குலம் அளவிற்கு புதையும்  ஜோஷிமத் பகுதிகள்!

ஜோஷிமத் மற்றும் அதனைச் சுற்றி யுள்ள பகுதிகள் ஒவ்வொரு ஆண்டும் 2.5 அங்குலம் அளவிற்கு பூமிக்குள் புதையுண்டு வருவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.   2020 ஜூலை முதல் 2022 மார்ச் மாதம் வரை யிலான காலகட்டத்தில் எடுக்கப்பட்ட செயற்  கைக்கோள் புகைப்படங்களைக் கொண்டு  மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், ஆண்டு தோறும் 6.5 செ.மீ. அல்லது 2.5 அங்குலம் புதைந்து வருவது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.