ஜெட் ஏர்வேஸ் நிறுவனர் நரேஷ் கோயல் வங்கி யில் ரூ. 538 கோடி மோசடி செய்த புகாரில், ஜெட் ஏர்வேஸ் விமான நிறு வனத்துக்கு சொந்தமான 7 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.
கேரள முன்னாள் முதல் வரும், மூத்த காங்கிரஸ் தலைவருமான உம்மன் சாண்டி நிமோனியா வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டு மீண்டும் மருத்துவமனையில் அனு மதிக்கப்பட்டுள்ளார். உம்மன் சாண்டி ஏற்கென வே தொண்டை புற்று நோய் சிகிச்சைக்கு கடந்த பிப்ரவரி மாதம் பெங் களூரு மருத்துவமனை யில் அனுமதிக்கப்பட்டு டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
பஞ்சாப் சட்டப்பேரவை யின் முன்னாள் சபாநா யகரும், சிரோமணி அகா லிதளத்தின் (எஸ்ஏடி) மூத்த தலைவருமான சரண்ஜித் சிங் அத்வால் பாஜகவில் இணைந்தார்.
சவூதி அரேபியாவின் ரியாத் பகுதி குடி யிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் 6 இந்தியர்கள் உயிரிழந்தனர். பலியான வர்களில் 4 பேர் கேரள மாநிலத்தைச் சேர்ந்த வர்கள். மற்ற இருவர் தமிழ்நாடு மற்றும் குஜ ராத்தை சேர்ந்தவர்கள் ஆவர்.
உலகச் செய்திகள்
சூடான் போரைத் தடுப்பதில் நாங்கள் தோல்வி அடைந்து விட்டோம் என்று ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் ஒப்புக் கொண்டி ருக்கிறார். ராணுவம் மற்றும் துணை ராணுவப் படைகளின் தளபதிகள் அமைதிக்கான முயற்சிகளைத் தடுத்து விட்டார்கள் என்று கூறியுள்ள அவர், இந்த சண்டையைத் தாங்கள் எதிர்பார்க்கவில்லை என்றும், அரசியல் மட்டத்திலான பேச்சுவார்த்தையில் தீர்வு ஏற்பட்டு விடும் என்று நம்பியதாகவும் தெரிவித்தார்.
சிரியாவில் நடந்த உள்நாட்டுப் போரால் ஏராளமானோர் லெபனானில் தஞ்சம் புகுந்திருந்தனர். பல்வேறு முகாம்களில் அவர்கள் தங்க வைக்கப்பட்டிருந்தார்கள். தற்போது உள்நாட்டுப்போர் நிறைவு பெற்றுள்ளதால் அவர்களை மீண்டும் சிரியாவுக்கு அனுப்ப முடிவு செய்திருக்கிறார்கள். அவ்வாறு தங்கள் பகுதிகளுக்குத் திரும்ப விருப்பம் தெரிவிப்பவர்கள் பதிவு செய்து கொள்ள வேண்டும் என்று லெபனான் அரசு அறிவித்திருக்கிறது.
அரபு லீக்கில் மீண்டும் சிரியா இணைவதற்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ளன. மே 7 ஆம் தேதியன்று வாக்கெடுப்பு நடக்கவுள்ளது. சிரியாவில் உள்நாட்டுப் போர் மூண்டபோது முடக்கி வைக்கப்பட்ட சிரியாவின் உறுப்பினர் அந்தஸ்தை மீண்டும் வழங்குவதற்கு தேவையான ஆதரவு அரபு லீக்கில் உள்ளது. மேலும் பல நல்ல நிகழ்வுகள் தொடரப் போகின்றன என்று ஜோர்டானின் வெளியுறவுத்துறை அமைச்சர் அய்மான் சபாதி கூறியுள்ளார்.