states

img

ஜாக்டோ - ஜியோ அமைப்பினர் மனிதச் சங்கிலி

சென்னை, மார்ச் 24 - பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் செயல்படுத்த வேண்டும், அகவிலைப்படி உயர்வை காலம் தாழ்த்தாமல் வழங்க வேண்டும், காலிப் பணியிடங்கள் நிரப்ப வேண்டும், சரண் விடுப்பை மீண்டும் வழங்க வேண்டும், 21 மாத ஊதிய நிலு வையை வழங்க வேண்டும், சாலைப் பணியாளர்களின் 41மாதகால பணி நீக்க காலத்தை பணிக்காலமாக மாற்ற வேண் டும், சத்துணவு அங்கன்வாடி உள்ளிட்ட தொ குப்பூதிய ஊழியர்களுக்கு வரையறுக் கப்பட்ட ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். தமிழக அரசின் பட்ஜெட்டில் இது  குறித்து அறிவிப்பு ஏதும் வெளியிடப் படாத நிலையில், தமிழகம் முழுவதும் 20ஆயிரம் கிலோ மீட்டர் நீளத்திற்கு மனித சங்கிலி நடத்தப்படும் என்று ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் அறிவித்திருந்தனர். இதனையொட்டி தமிழகம் முழுவதும் வெள்ளியன்று (மார்ச் 24) மனித சங்கிலி நடைபெற்றது. இதன் ஒருபகுதியாக சென்னையில் பல்வேறு இடங்களில் மனித சங்கிலிகள் நடைபெற்றன. பெருநகர சென்னை மாநக ராட்சி தலைமை அலுவலகமான ரிப்பன் மாளிகை முன்பு நடைபெற்ற மனித சங்கி லிக்கு ஜாக்டோ-ஜியோ மாநில ஒருங்கி ணைப்பாளர்கள் மு.அன்பரசு, அ.மாய வன், சென்னை மாவட்ட ஒருங்கிணைப்பா ளர் ம.அந்தோணிசாமி ஆகியோர் தலைமை தாங்கினர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய  அ.மாயவன், தமிழகம் முழுவதும் 20ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்திற்கு நியாய மான கோரிக்கைகளை வலியுறுத்தி மனித சங்கிலி நடைபெற்றது. இந்த போராட்டத் தை உதாசீனப்படுத்தினால், சட்டமன்ற கூட்டத்தொடர் முடிவதற்குள் தீவிரமான போராட்டத்தை நடத்துவோம். ஜாக்டோ ஜியோ மாநில ஒருங்கிணைப் பாளர்கள் மற்றும் உயர்மட்டக்குழு கூட்டம் ஏப்.2 அன்று திருச்சியில் கூடு கிறது. இதில் அடுத்தகட்டமாக மறியல், வேலை நிறுத்தம் உள்ளிட்ட அதி தீவிர போராட்டங் களை நடத்த முடிவெடுப்போம் என்றார்.