மணிப்பூரில் அரசாங்கம் வேறுபாடு களை தூண்டாமல் இருந்திருந்தால் வன்முறையை தவிர்த்து இருக்கலாம்! வேற்றுமையில் ஒற்றுமை என்பது ஒரு சாதாரண கருத்தாக்கம் அல்ல. பல இன, தேசிய,மாகாண அமைப்பில் அரசியலமைப்புச்சட்டம் ஒற்றுமை நிறைந்த நிர்வாகத்தின் மூலம் தனித்துவ அடையா ளங்களுக்கு சமூக, கலாச்சார அங்கீகாரம் வழங்குவதும் வேறுபாடுகளுக்கு இடம் அளிப்பதும் அவர்கள் முன்னேற்றத்திற்கு மிக முக்கியமானவை. அவர்கள் புறக்கணிக்கப்பட்டதாக கருதப் படுவார்கள் என்றால் மோதல் ஏற்படும் சூழல் உருவாகும். அவர்களையும் உள்ளடக்கி கலந்தாலோசனை நடத்தும் வகையில் நல்லாட்சி நடந்தால் வன்முறைகள் மோச மடையாமல் தடுக்கும் சாத்தியக்கூறு களையும் அது ஏற்படுத்தும். மணிப்பூரில் ஏற்பட்டுள்ள வன்முறைகள், மக்கள் இடம் பெயர்வு, உயிரிழப்பு, வீடுகள், கோயில்கள்- தேவாலயங்கள் சேதம், 5 மாவட்டங்களில் தீவைப்பு சம்பவங்கள் ஆகிய வற்றுக்கு அங்கே உள்ள மலைப்பகுதி மற்றும் பள்ளத்தாக்குகளில் வாழும் மக்க ளுக்கு இடையே நீண்ட காலமாக நிலவும் வேறுபாடுகள் ஒரு காரணமாக இருக்கலாம். ஆனாலும் இது முற்றிலும் தவிர்த்து இருக்கக் கூடியதே. பெரும்பான்மையாக உள்ள மெய்த்தீஸ் (Meiteis) என்ற பிரிவினருக்கு (எஸ்டி) பட்டி யல் பழங்குடியினர் அந்தஸ்தை வழங்கும் உயர் நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து அதற்கு எதிர்ப்பு தெரிவித்து அனைத்து பழங்குடி யின மாணவர்கள் சங்கம் நடத்திய பேரணி
தற்போதைய மோதல்களைத் தூண்டி விட்டுள்ளது. பழங்குடியின மக்கள் குழுக்கள் இதை எதிர்க்கின்றன. மெய்த்திஸ் பிரிவு மக்க ளுக்குள்ளேயும் கூட இந்த உத்தரவு குறித்து மாறுபட்ட கருத்துக்கள் நிலவுகின்றன. மலைவாழ் பழங்குடியினர் சமூகங்க ளுக்கான இட ஒதுக்கீட்டு பலன்களை இந்த உத்தரவு நீர்த்துப் போகச் செய்துவிடும் என்ற கவலை ஏற்புடையது என்றாலும் மலை வாழ் மக்களுக்கு எதிரான உணர்வுகளை பழங்குடியின தலைவர்கள் சாட்டையடி போல பயன்படுத்துவதால் மலைப்பகுதியின் நிலங்கள் மீது அவர்கள் அனுபவித்து வரும் பாரம்பரிய உரிமை கேள்விக்குள்ளாகும் என்று பொங்கி எழும் கவலைக்கு அதுவும் காரணமாக அமைந்து விடுகிறது .வெறித்தன மான பள்ளத்தாக்கு எதிர்ப்பை ஏற்படுத்தும் மாநில (பாஜக) அரசின் ஒரு பக்கச் சார்பான செயல்பாடுகள், அதனால் மலைவாழ் மக்களிடம் தோன்றிய அதிருப்தியாலும் கூட இந்த மோதல் ஏற்பட்டுள்ளது. பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான மாநில அரசு ஒரு மேலாதிக்கப் பிரிவினர் சார்பு உடையது என்ற கருத்தை அகற்றி நேர்மை யுடன் செயல்பட்டு இருந்தால் இந்த நிலை வந்திருக்காது.
போதைக்கு எதிரான போர் என்ற போர்வையில் அளவுக்கு அதிகமான ஆர்வம் காட்டி குக்கி இன மக்களின் கிராமங்களில் அரசு எடுத்த நடவடிக்கையில் அந்த மக்கள் வெகுவாக பாதிக்கப்பட்டனர். பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த பழங்குடி எம்எல்ஏக்கள் சிலர் மாநில அரசின் இந்த பாரபட்சம் குறித்து சட்டமன்றத்திலும் பிரச்ச னையை எழுப்பினர்.வனங்கள் பாதுகாப்பிற் காகவும், வெளி ஆட்களை அகற்றுகிறோம் என்ற பெயரிலும் செய்யப்படும் வெளி யேற்றங்கள் வாழ்வாதாரத்திற்காக மலை யையே நம்பி இருக்கும் மக்களிடம் உணர்ச்சி களை தட்டி எழுப்பி விடுகின்றன. மீள்குடி யேற்றம் மற்றும் நஷ்ட ஈடு போன்றவற்றுக்கு உத்தரவாதம் செய்யாமல் விட்டது பாதிக்கப் பட்டவர்கள் மத்தியில் அநீதி இழைக்கப்பட்ட உணர்வையும் உண்டாக்கும். பாதுகாப்பு பொறுப்பை ஒன்றிய அரசு ஏற்றுக் கொள்வதால் வன்முறை இனி தனிய வேண்டும். இன வேறுபாடுகளைக் கடந்து அனைத்து மக்களிடமும் சென்ற டையக் கூடிய வகையில் ஒரு தீர்வைக் கொண்டு வரவேண்டும் என்றால் தடுமாறிக் கொண்டுள்ள மாநில அரசு அனைத்துக் கட்சிகளுடன் ஆலோசனை மேற்கொள்ள வேண்டும். தி இந்து (ஆங்கிலம்) தலையங்கம் 6.5.23, தமிழில்: கடலூர் சுகுமாரன்