states

தமிழகத்தில் ஐடி பூங்காவுக்கு கட்டமைப்பு வசதிகள் உள்ளன: அமைச்சர் தகவல்

தூத்துக்குடி,  டிச.4- ஐடி பூங்காவுக்கு தேவையான கட்ட மைப்பு வசதிகள் தமிழகத்தில் உள்ளன என  தமிழக தகவல் தொழில்நுட்ப மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் த. மனோ தங்கராஜ் தெரிவித்தார். கோவில்பட்டியில் அவர் செய்தியா ளர்களிடம் கூறியது: முதல்வர் அறிவித்த தேர்தல் வாக்குறுதி களின் படி, தமிழ்நாட்டை பொருத்தவரை எல்காட் மற்றும் டைட்டல் பூங்கா மூலம் எங்கெல்லாம் ஐடி பூங்கா தேவையோ அந்த  இடங்களை கண்டறிந்து அங்கு தேவை களின் அடிப்படையில் பணிகள் நடந்து வரு கின்றன. தமிழ்நாட்டை பொறுத்தவரை ஐடி பூங்காவுக்கு தேவையான கட்டமைப்பு வசதி கள் உள்ளன. திருநெல்வேலி எல்காட் வளா கத்தில் மென்பொருள் நிறுவனங்கள் ஏராள மாக உள்ளன. பல நிறுவனங்கள் வரு வதற்கு தேவையான இடங்கள் உள்ளன. அந்த நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள் இங்கு வந்தவுடன் வேலையை தொடங்கும் அள வுக்கு ரூ.10 கோடியில் அனைத்து ஏற்பாடு களும் செய்யப்பட்டு வருகின்றன.

விரை வில் அந்த வசதிகளுடன் கூடிய இடம் ஸ்டா ர்ட் அப் நிறுவனங்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் வழங்கப்படும். சைபர் குற்றங்கள் பெரிய சவாலாகத் தான் உள்ளது. சைபர் பொருளாதார குற்றம், சைபர் குற்றங்கள் உள்ளிட்டவை பல பரி ணாமங்களில் உள்ளன. ஏற்கனவே சைபர்  பாதுகாப்பு சம்பந்தமான பல்வேறு நட வடிக்கைகளை சைபர் பாதுகாப்புப் பிரி வில் பணியாற்றும் ஸ்டார்ட் அப் நிறு வனங்களின் மூலமாகவும், பெரிய ஐடி நிறு வனங்களின் மூலமாகவும் எடுத்து வரு கிறோம். தொழில்நுட்பம் நாளுக்கு நாள் மாறி வருகிறது. இதில் ஹேக்கர்ஸ் தெளிவாக இருந்து வேலை செய்கின்றனர். அதனால் சைபர் பாதுகாப்பு அம்சத்தில் நிறைய மாற்றங்கள் கொண்டு வந்துள்ளோம். சைபர் குற்றத்தை பொறுத்தவரை தமிழக முதல்வர் தீவிர நடவடிக்கை எடுப்போம் எனக் கூறி வேகப்படுத்தி வருகிறார். இவ்வாறு அவர் கூறினார். கோவில்பட்டி நகர்மன்றத் தலைவர் கா. கருணாநிதி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.