சென்னை, நவ. 6- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 60ஆம் ஆண்டு தொடக்கவிழா மற்றும் மார்க்சிஸ்ட் தத்துவார்த்த மாத இதழ் சந்தா அளிப்பு விழா கருத்தரங்கங் கள் நவம்பர் 5 ஞாயிறன்று ஐந்து மை யங்களில் நடைபெற்றன. இந்நிகழ்வுகளில் மார்க்சிஸ்ட் இதழுக்கு மொத்தம் 10,716 சந்தாக்கள் அளிக்கப்பட்டன. கட்சியின் மாநில செயற்குழு அழைப்பிற்கு ஏற்ப 60ஆம் ஆண்டு துவக்க விழா மற்றும் மார்க்சிஸ்ட் தத்து வார்த்த இதழ் சந்தா அளிப்பு விழா கருத்தரங்குகள் தர்மபுரி, விருதுநகர், பெரம்பலூர், திருவள்ளூர் ஆகிய இடங்களில் ஞாயிறன்று நடை பெற்றது. முன்னதாக சனிக்கிழமை கள்ளக்குறிச்சியில் நடைபெற்றது. தர்மபுரி தர்மபுரியில் கட்சியின் மாவட்டச் செயலாளர் ஏ.குமார் தலைமையில் நடைபெற்ற விழாவில் கோவை - 514, சேலம் - 515, தர்மபுரி - 429, கிரு ஷ்ணகிரி - 152, நீலகிரி - 110 என மொத்தம் 1720 மார்க்சிஸ்ட் சந்தாக்கள் மற்றும் 52 செம்மலர் சந்தாக்களுக் கான தொகை, கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி. ராமகிருஷ்ணனிடம் அளிக்கப் பட்டது.
விருதுநகர்
விருதுநகரில் மாவட்டச் செய லாளர் கே.அர்ச்சுணன் தலைமையில் நடைபெற்ற விழாவில் விருதுநகர் - 300, மதுரை மாநகர் - 610, மதுரை புறநகர் - 310, திண்டுக்கல் - 603, தேனி - 310, இராமநாதபுரம் - 200, கன்னியா குமரி - 202, தூத்துக்குடி - 100, திரு நெல்வேலி - 375, தென்காசி - 250 என மொத்தம் 3,260 மார்க்சிஸ்ட் இதழ் சந்தாக்களுக்கான தொகை ரூ.5லட்சத்து 26ஆயிரத்து 400, கட்சி யின் மத்தியக்குழு உறுப்பினர் உ. வாசுகி, மாநில செயற்குழு உறுப்பி னர் க.கனகராஜ் ஆகியோரிடம் வழங்கப்பட்டது.
கள்ளக்குறிச்சி
கள்ளக்குறிச்சியில் மாவட்டச் செய லாளர் ஜெய்சங்கர் தலைமையில் நடைபெற்ற விழாவில் கடலூர்-600, கள்ளக்குறிச்சி-420, விழுப்புரம்-300, திருவண்ணாமலை-240, மயிலாடு துறை-200 என மொத்தம் 1760 சந்தாக்கள், கட்சியின் மாநில செயலா ளர் கே.பாலகிருஷ்ணனிடம் அளிக்கப் பட்டது.
பெரம்பலூர்
பெரம்பலூரில் மாவட்டச் செய லாளர் ஏ.ரமேஷ் தலைமையில் நடை பெற்ற கருத்தரங்கில் - திருவாரூர் -420, நாகப்பட்டினம் - 160, தஞ்சாவூர் -300, கரூர் -205, அரியலூர் - 156, பெரம்பலூர் - 200, திருச்சி மாநகர் - 98, திருச்சி புறநகர் -170 என மொத்தம் 1709 மார்க்சிஸ்ட் சந்தாக்கள் கட்சி யின் மத்தியக்குழு உறுப்பினர் பெ. சண்முகம், மாநிலக்குழு உறுப்பினர் இரா.சிந்தன் ஆகியோரிடம் வழங்கப் பட்டது.
திருவள்ளூர்
திருவள்ளூரில் மாவட்டச் செய லாளர் எஸ்.கோபால் தலைமையில் நடைபெற்ற கருத்தரங்கில் வட சென்னை-582, மத்திய சென்னை-300, தென்சென்னை - 500, திருவள்ளூர்-200, செங்கல்பட்டு-250, காஞ்சிபுரம்-150, வேலூர்-200, ராணிப்பேட்டை -80, மாநிலக்குழு கிளை -5 என மொத்தம் 2,267 மார்க்சிஸ்ட் சந்தாக்கள், கட்சி யின் மத்தியக்குழு உறுப்பினர் பி.சம்பத் திடம் வழங்கப்பட்டது.இந்த விழா க்களில் கட்சியின் மாவட்ட செயலா ளர்கள், மாநிலக்குழு உறுப்பினர் கள், மார்க்சிஸ்ட் ஏட்டின் பொறுப்பா ளர்கள் உட்பட நூற்றுக்கணக் கானோர் பங்கேற்றனர்.