603 நாட்கள் கொண்டாட்டம் - விரிவான திட்டம் அறிவிப்பு
வைக்கம், ஏப்.2- கேரளத்தில் வைக்கம் சத்தியாகிரக நூற் றாண்டு விழா 603 நாட்கள் விரிவான நிகழ்ச்சி களுடன் கொண்டாடப்படுகிறது. 2023 ஏப்ரல் 1 சனியன்று தொடங்கிய நிகழ்ச்சிகள் 2024 நவம்பர் மாதம் நிறைவடையும் என்று கேரள அரசின் தலைமைச் செயலாளர் வி.பி.ஜாய் தெரிவித்தார். சத்தியாகிரக தலைவர்களை நினைவு கூறும் வகையில் கேரள வரலாற்று ஆராய்ச்சி கவுன்சில், நூலக கவுன்சில் மற்றும் பல்க லைக்கழகங்களுடன் இணைந்து கருத்த ரங்கம் நடத்தப்படும். மீடியா அகாடமியுடன் இணைந்து சத்தியாகிரகம் மற்றும் செய் தித்தாள்கள் குறித்த கருத்தரங்கு வைக்கத் தில் நடத்தப்படும். சிற்றேடத்தில், தியாகி சங்குப்பிள்ளை, பெரியார் ஈ.வெ.ராமசாமி ஆகியோரின் நினைவேந்தல் நிகழ்ச்சிகள் நடத்தப்படும். சீக்கியர்களால் இலவச உணவு கூடம் நிறுவப்பட்டதை நினைவுகூரும் வகையில் சர்வமத மாநாடு நடத்தப்படும். மன்னத்து பத்மநாபன் தலைமையில் நடந்த சவர்ண ஜாதி சீர்திருத்த நடைபயணத்தை நினைவு கூர்ந்து வைக்கத்தில் தொடங்கி திருவனந்த புரம் வரை நடைபயணம் செல்லும். காந்திஜி யின் தலையீட்டை நினைவுகூரும் வகையில் தேசிய தலைவர்கள் பங்கேற்கும் மாநாடும் நடைபெறவுள்ளது என்றார் தலைமை செய லாளர்.
வைக்கத்தில் ஜானகி ராமச்சந்திரனின் குடும்ப இல்லத்திற்கு மு.க.ஸ்டாலின் வருகை
வைக்கம், ஏப்.2- தமிழக முன்னாள் முதல்வரும், மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் மனைவி யுமான ஜானகி ராமச்சந்திரனின் வைக்கம் வலியக்காவலில் உள்ள குடும்ப இல்லத் திற்கு சனிக்கிழமை (ஏப். 1) மு.க.ஸ்டாலின் வருகை தந்தார். நவம்பர் 23 இல் ஜானகியின் 100ஆவது பிறந்தநாளைக் கொண்டாட குடும்பத்தினர் தயாராகி வரும் நிலையில், முதல்வர் ஸ்டா லின் வருகை அவரது குடும்பத்தினருக்கு மகிழ்ச்சி அளித்தது. எம்ஜிஆர், ஜானகி சிலைக்கு மலர் தூவி ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். ஜானகியின் குடும்ப உறுப்பி னர்கள் ஸ்டாலினுடன் புகைப்படம் எடுத்த னர். வைக்கம் பெரியார் சிலைக்கு எதிரில் ‘மணி மந்திரம்’ என்கிற ஜானகியின் மூத்த சகோதரர் வீடு உள்ளது. இங்கு ஸ்டாலின் வந்தபோது ஜானகியின் சகோதரர் மணி மற்றும் அவரது குடும்பத்தினர் வரவேற்ற னர். மணியின் பிள்ளைகள் சென்னையில் நிரந்தரமாக குடியேறினாலும், அவ்வப் போது வைக்கத்தில் உள்ள வீட்டிற்கு வந்து செல்கிறார்கள்.
கன்னியாகுமரியில் 3 நாட்களில் 50 பேருக்கு கொரோனா பரவல்
கன்னியாகுமரியில் 3 நாட்களில் 50 பேருக்கு கொரோனா பரவல் நாகர்கோவில், ஏப்.2- தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப் படுத்த அரசு மருத்துவமனைகளில் தமிழக அரசு முககவசத்தை கட்டாயமாக்கியுள்ளது. குமரி மாவட்டத்திலும் அரசு மருத்து வமனைகளில் முக கவசம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஆசாரிப்பள் ளம் அரசு மருத்துவமனையில் உள்ள மருத்து வர்கள் முக கவசம் அணிந்து பணியாற்றி வரு கிறார்கள். நோயாளிகளுக்கும் முக கவசம் வழங் கப்பட்டுள்ளது. புற நோயாளிகள் பிரிவிற்கு வரும் நோயாளிகளும் முக கவசம் அணிந்து வந்தனர். இதேபோல அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் மருத்துவர்கள், செவி லியர்கள், பணியாளர்கள் முக கவசம் அணிந்து பணிபுரிந்தனர். கொரோனாவை கட்டுப்படுத்த சுகாதாரத்துறை மூலம் பரிசோதனை தீவிரப் படுத்தப்பட்டுள்ளது. கடந்த 2 வாரங்களாக தினமும் சுமார் 300க்கும் மேற்பட்டோருக்கு பரிசோதனை மேற்கொள்ளப் பட்டு வருகிறது. சனிக்கிழமை மாவட்டம் முழு வதும் 277 பேருக்கு நடத்தப்பட்ட சோதனையில் 19 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 15 பேர் பெண்கள், 4 பேர் ஆண்கள் ஆவார்கள். கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் வீட்டு தனிமை யில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். கடந்த மூன்று நாட்களில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட வர்களின் எண்ணிக்கை 50 ஆக உயர்ந்துள்ளது. கடந்த ஒரு மாதத்தில் கொரோனாவால் பாதிக்கப் பட்டவர்கள் எண்ணிக்கை 100-ஐ நெருங்கு கிறது.
எரிவாயு மானியத்திற்கு காசு இல்லையாம்: நிதியமைச்சர் கைவிரிப்பு
காஞ்சிபுரம், ஏப்,2- காஞ்சிபுரம் மாவட்டம் பழைய சீவரம் கிராமத்திற்கு ஞாயிறன்று ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாரா மன் வருகை தந்தார். பாஜக நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின்னர் பொதுமக்களை சந்தி த்துப்பேசினார். அப்போது, சிலிண்டர் விலை உயர்வு குறித்து கிராம மக்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளித்த நிர்மலா சீதாராமன், சிலிண்டர் எரிவாயுவை இறக்குமதி செய்வதால், அதற்கேற்ப விலை நிர்ணயம் செய்ய வேண்டி இருப்பதாகவும், கூடுதலாக மானியம் வழங்க போதிய நிதி இல்லை என்றும் கூறினார். மற்ற வளர்ச்சி திட்டங்களுக்கு செல விட வேண்டி உள்ளதால் சிலிண்டர் விலையேற்றத்தை தவிர்க்க முடிய வில்லை என்றும் அவர் விளக்கம் அளித்தார்.
இடி மின்னலுடன் இன்று மழை பெய்யும்
சென்னை,ஏப்.2 தென் இந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டலத்தின் கீழடுக்கு களில் கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும், சந்திக்கும் பகுதி நிலவு கிறது. இதன் காரணமாக தமிழ் நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் திங்களன்று (ஏப்,3) ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக் கூடும். சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப் படும். நகரின் ஒருசில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 34-35 டிகரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக் கூடும் என்று வானிலை மையத்தின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
கோவில்பட்டி புதிய மாவட்டம்: மதிமுக வரவேற்பு
சென்னை. ஏப்,2- தூத்துக்குடி மாவட்டத்தின் அங்க மாக விளங்கும் கோவில்பட்டியை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் அமைத்திட நடவடிக்கை எடு க்கப்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளதை மதிமுக வரவேற்று ள்ளது. இது குறித்து அக்கட்சியின் தலைமை நிலைய செயலாளர் துரை வைகோ விடுத்துள்ள அறிக்கையில், வளர்ந்து வரும் தொழில் நகரான கோவில்பட்டி, மாவட்ட தலைமையிடத் திற்குத் தேவையான அனைத்து கட்ட மைப்பு வசதிகளையும் கொண்டுள் ளது. கோவில்பட்டியை தலைமை யிடமாக கொண்டு புதிய மாவட்டம் ஏற்படுத்தப்படவேண்டும் என பொது மக்களும், பல அரசியல் கட்சிகளும், மதிமுகவும் தொடர்ந்து வலியுறுத்தி வரும் கோரிக்கையாகும். கோவில்பட்டிக்கு மிக அரு காமையில் அமையப் பெற்றுள்ள குருவிகுளம் ஊராட்சி ஒன்றியப் பகுதி முழுவதையும் (இளையரசனேந்தல் குறுவட்டப் பகுதி உட்பட) பொது மக்கள் விருப்பத்திற்கு இணங்க, புதி தாக உருவாக உள்ள கோவில்பட்டி மாவட்டத்தில் இணைத்திட வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.
தகுதித்தேர்வு அடிப்படையில் ஆசிரியர் நியமனம்: பா.ம.க வலியுறுத்தல்
சென்னை, ஏப்,2- இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரி யர்களை தகுதித் தேர்வின் அடிப்படை யில் மட்டும் தேர்ந்தெடுக்க தமிழ்நாடு அரசுமுன்வர வேண்டும் என்று பாமக கேட்டுக்கொண்டுள்ளது. இதுகுறித்து அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் விடுத்துள்ள அறி க்கையில், தமிழ்நாட்டில் அரசு பள்ளி களும், கல்லூரிகளும் மேம்பட வேண்டும் கல்வித்தரம் உயர வேண்டும் என்றால் அனைத்து வகுப்புகளுக்கும், அனைத்து பாடங்களுக்கும் ஆசிரியர் கள் அமர்த்தப்பட வேண்டும். அதை உறுதி செய்யும் வகையில், அரசு பள்ளிகளுக்கு இடைநிலை ஆசிரியர் கள், பட்டதாரி ஆசிரியர்கள், கல்லூரி களுக்கு உதவிப் பேராசிரியர்களை தேர்வு செய்வதற்கான அறிக்கையை தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் உடனடியாக வெளியிட வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார். தமிழ்நாட்டில் ஆசிரியர் தகுதி த்தேர்வுகள் எவ்வளவு கடினமானவை என்பதற்கு அண்மையில் வெளியான இரண்டாம் தாள் முடிவுகள் தான் சான்றாகும். எனவே ஆசிரியர்களை தகுதித் தேர்வின் அடிப்படையில் மட்டும் தேர்ந்தெடுக்க தமிழ்நாடு அரசு முன்வர வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
ஜெகன் கவுரவக்கொலை மாமனாரை காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி
கிருஷ்ணகிரி ஏப். 2- கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஜெகன் கவுரவக்கொலை செய்யப்பட்டது தொடர்பாக முக்கிய குற்றவாளியான அவரது மாமனாரை காவலில்எடுத்து விசாரிக்க காவல் துறைக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. கிட்டம்பட்டியை சேர்ந்த ஜெகன், முழுக்கான் கொட்டாயை சேர்ந்த 21 வயது சரண்யாவை காதலித்து கடந்த ஜனவரி மாதம் திருமணம் செய்து கொண்டார். இவர்களின் காதல் திருமணத் திற்கு பெண் வீட்டார் எதிர்ப்பு தெரி வித்து வந்த நிலையில் கடந்த 21 ஆம் தேதி கிருஷ்ணகிரி அணை சாலை யில் இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்த ஜெகனை தடுத்து, மாமனார் சங்கர் உள்ளிட்ட 6 பேர் அரிவாளால் வெட்டி படுகொலை செய்தனர். சங்கர், கிருஷ்ணகிரி நீதிமன்றத் தில் அன்றே சரண் அடைந்தார் முத்தம்பட்டி நாகராஜ்,முரளி ஆகி யோர் சேலம் நீதி மன்றத்தில் சரண் அடைந்தனர். காவல்துறையினர் இந்த கொடூர கவுரவக் கொலை குறித்தும் தலைமறைவாய் உள்ள குற்றவாளிகள் பற்றி தெரிந்து கொள்ள ஜெகன் மாமனார் சங்கரை காவலில் எடுத்து விசாரிக்க கிருஷ்ணகிரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதி 3 நாட்கள் அவரி டம் விசாரணை நடத்த அனுமதி வழங்கினர்.
லாரி மோதி ஒருவர் பலி
அரியலூர், ஏப்.2 - அரியலூர் மாவட்டம் ஜெயங் கொண்டம் அடுத்து உடையார் பாளையம் அருகே உள்ள ஏந்தல் கிராமத்தை சேர்ந்தவர் பிரகாஷ் (23). இவர் சனிக்கிழமை ஏந்தல் கிராமத்திலிருந்து செதிலவாடி கோவிலுக்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். செல்வதற்காக உடையார்பாளையம் எல்லைகல் தெரு அருகே சென்றுகொண்டி ருந்த போது அரியலூரில் இருந்து ஜெயங்கொண்டம் நோக்கி சிமெண்ட் ஏற்றிக் கொண்டு சென்ற லாரி பிரகாஷ் மீது மோதியது. மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட பிரகாஷை பரிசோதித்த மருத்துவர்கள் உயிரி ழந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.
காவலர் தூக்கிட்டு மரணம் தற்கொலை என வழக்குப்பதிவு
அரியலூர், ஏப்.3- அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தை அடுத்துள்ள உட்கோட்டை அருகே உள்ள தொட்டிக்குளம் கிராமத்தைச் சேர்ந்த சின்னதுரை மகன் பாலாஜி (37) இவர் அரியலூரில் கலால் பிரிவில் காவலராகப் பணியாற்றி வருகிறார். இவர் உடல்நலக்குறைவு காரணமாக பணிக்குச் செல்லாமல் வீட்டில் இருந்துள்ளார். இந்த நிலையில் சனிக்கிழமைதனது தாத்தா வீட்டிற்கு சென்ற பாலாஜி வீட்டில் யாரும் இல்லாத போது தூக்கிட்டு உயிரை மாய்த்து கொண்டார். இது குறித்து ஜெயங் கொண்டம் காவல்நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் காவல் துறையினர் பாலாஜி தற்கொலை செய்து கொண்டதாக வழக்குப் பதிவு செய்துள்ளனர். உயிரிழந்த பாலாஜிக்கு சுதா என்ற மனைவி யும் ஏழு வயதில் அனன்யா என்ற மகளும், மூன்று வயதில் இளவேனி என இரண்டு மகள்கள் உள்ளனர்.