states

தீக்கதிர் விரைவு செய்திகள்

தினமும்  நூற்றுக்கணக்கான சைபர் தாக்குதலை சந்திக்கும் இஸ்ரோ

திருவனந்தபுரம், அக்.8- கேரள மாநிலம் கொச்சி யில் 16-ஆவது சர்வதேச சை பர் பாதுகாப்பு மாநாடு நடை பெற்றது. இதில் இஸ்ரோ தலைவர் சோம்நாத், கேரள வருவாய்த்துறை அமைச்சர் ராஜீவ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அப்போது பேசிய இஸ் ரோ தலைவர் சோம்நாத்,  “அதி நவீன மென்பொ ருள் மற்றும் சிப்பைப் பயன் படுத்தும் ராக்கெட் தொழில் நுட்பத்தில் சைபர் தாக்குதல் களின் சாத்தியம் அதிகம். இதை எதிர்கொள்ள வலு வான சைபர் பாதுகாப்பு நெட் வொர்க்கை இஸ்ரோ கை யாண்டு வருகிறது. மென்பொருளைத் தவிர,  ராக்கெட்டுகளுக்குள் இருக்கும் ஹார்டுவேர் சிப் களின் பாதுகாப்பை மைய மாகக் கொண்டு பல்வேறு சோதனைகளையும் இஸ் ரோ மேற்கொண்டு வருகிறது. முன்பு ஒரு செயற்கைக் கோளைக் கண்காணிக்கும் முறை தான் இருந்தது. தற்போது ஒரே நேரத்தில் பல செயற்கைக்கோள்களை மென்பொருள் கண்காணிக் கும் முறைக்கு மாறியுள் ளது. இது இந்தத் துறையின் வளர்ச்சியைக் குறிக்கிறது” என்றார். மேலும், இஸ்ரோ தின மும் நூற்றுக்கணக்கான சை பர் தாக்குதல்களை எதி ர்த்துப் போராடி வருவ தாக தெரிவித்த அவர், ராக் கெட்டுகளில் பொருத்தப் பட்டுள்ள ஹார்டுவேர் சிப்பை பாதுகாக்க பல் வேறு சோதனைகளை மேற் கொண்டு வருகிறோம் என்றார். இந்த மாநாட்டை கேரள காவல்துறை மற்றும் தகவல் பாதுகாப்பு ஆரா ய்ச்சி நிறுவனம் ஏற்பாடு செய்திருந்தது. 

பாலஸ்தீனம் மீது இஸ்ரேலின் மிருகத்தன தாக்குதல் : இரண்டாம் நாளாக தொடர்ந்தது

டெல் அவிவ்/ காசா, அக்.8- பாலஸ்தீனத்தை ஆக்கிரமித் துள்ள இஸ்ரேல், ஹமாஸ் குழு வினரின் ஏவுகணை தாக்குதலுக்கு பதிலடி என்ற பெயரில் பாலஸ்தீனம்  மீது அதிகாரபூர்வ போர் தொடுத்துள்ளது.  முதல் நாள் போரில் இரு பகுதிகளி லும் 100 க்கும் மேற்பட்டவர்கள் உயி ரிழந்திருந்தனர். இரண்டாம் நாளாக ஞாயிறன்று தொடர்ந்த மோதலில் இஸ்ரேல் ராணுவத்தினரின் இறப்பு 400-ஐயும், படுகாயம் அடைந்தவர் களின் எண்ணிக்கை 2000-ஐயும்  கடந்து ள்ளது. ஹமாஸ் குழுவில் 313 நபர்கள் இஸ்ரேல் ராணுவத்தால் கொல்லப் பட்டுள்ளனர் என்றும் 2000க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து ள்ளனர் என்றும் பாலஸ்தீன சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.   இஸ்ரேலின் போர்விமானங்கள் காசா பகுதியில் அப்பாவி மக்களின் குடியிருப்புகள் மீதும் அவர்களின் வழி பாட்டு மசூதிகள் மீதும்  குண்டுகள் வீசி அழித்தன. பாலஸ்தீனர்களின் முக்கிய வழிபாட்டுத் தளங்களில் ஒன்றான அல்-அமீன் முஹம்மது மசூதி தரைமட்டமாகிவிட்டது. இந்த தாக்குதலில் 300க்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் பலியாகியுள்ளனர். மேலும் 1990 பாலஸ்தீனர்கள் படுகாய மடைந்துள்ளனர். காயமடைந்த வர்களுக்கு மருத்துவ உதவி செய்வதற்கு கூட பாலஸ்தீனத்தில் முறையான மருத்துவமனைகள் இல்லாத வகை யில் அனைத்தையும் சிதைத்துள்ளது இஸ்ரேல் ராணுவம். ஊடகங்கள் மீது குண்டு வீச்சு  காசாவில் பாலஸ்தீன சார்பு ஊடகங்கள் மற்றும் அல் ஜசீரா, அசோ சியேட்டட் பிரஸ் உள்ளிட்ட பல சர்வதேச ஊடகங்கள் செயல்படும் அல்-வதன் என்ற அடுக்குமாடி கட்டி டத்தின்  மீது  இஸ்ரேல்  ராணுவம் தாக்குதல் நடத்தியது.

அந்தமான் அருகே ஆழ்கடலில் நடுக்கம்

கடந்த பிப்ரவரி 6 அன்று துருக்கி - சிரியாவில் ஏற்பட்ட நில நடுக்கத்தை தொடர்ந்து உலகின் ஒவ்வொரு பகுதிகளிலும் கடந்த சில  மாதங்களாக நிலநடுக்கம் ஏற்பட்டு வருகிறது. கடந்த வாரம் நேபாளத்தில்  ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தால் தில்லி, உத்தரகண்ட், இமாச்சலப்பிர தேசம், அசாம் ஆகிய மாநிலங்களில் மிதமான அளவில் நிலநடுக்கம் ஏற்  பட்டது. சனியன்று ஆப்கானிஸ்தான் நாட்டில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் உயி ரிழந்தோர் எண்ணிக்கை 2 ஆயிரத்தை தாண்டிய நிலையில், ஞாயி றன்று காலை அந்தமான் நிகோபர் தீவுகள் அருகே அந்தமான் கடல் பகுதி யில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 4.3 ஆக  பதிவான இந்த நிலநடுக்கம் காரணமாக கடலோரப் பகுதிகளில் உள்ள கட்டி டங்களில் அதிர்வு ஏற்பட்டது. ஆழ்கடலில் நிலநடுக்கம் ஏற்பட்டாலும் சுனாமி  எச்சரிக்கை விடுக்கப்படவில்லை. நிலநடுக்கத்தால் உயிர்சேதமோ, பொருட் சேதமோ ஏற்படவில்லை என்று அந்தமான் அதிகாரிகள் தெரிவித்தனர்.

புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கைவிரித்தது மோடி அரசு

புதுச்சேரி யூனியன் பிர தேசமாகவே தொடரும் என ஒன்றிய அரசு தெரி வித்துள்ளது. புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்கவேண்டு மென புதுச்சேரி சட்டமன்றத் தில் தீர்மானம் நிறைவேற்றி ஒன்றிய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த நிலை யில் புதுச்சேரி  யூனியன் பிர தேசமாக தொடரும் என  ஒன்றிய அரசு கடிதம் அனுப்பியுள்ளது.  இந்நிலையில் புதுச்சேரி மாநில அந்தஸ்துக்காக அனைத்துக் கட்சி சட்டமன்ற உறுப்பினர்களுடன் தில்லி சென்று பிரதமர், உள்துறை அமைச்சரை சந்தித்து வலி யுறுத்த உள்ளதாக முதல்வர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்.  இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறு கையில், “எனக்காக மட்டும் மாநில அந்தஸ்து கேட்க வில்லை. மாநில வளர்ச்சிக் காகவும், விரைவாக மக்க ளுக்கு பணியாற்றவும், மக்க ளால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சிக்கு அதிகாரம் வேண்டும் என்றுதான் மாநில அந்தஸ்தை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன். எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை” என்றார்.   மேலும் புதுச்சேரி, காரைக் கால், மாஹே, ஏனாம் ஆகிய பகுதிளை சேர்த்துத்தான் புதுச்சேரி மாநில அந்தஸ்து கேட்போம். மீண்டும் ஒன்றிய அரசை நேரடியாக சந்தித்து வலியுறுத்துவேன் என்றும் கூறினார்.