சென்னை, மார்ச் 30- அரசுக்கும் அரசு ஊழியர், ஆசிரியர்க ளுக்குமான நல்லுறவை சிதைக்கும் நிதி அமைச்சர் பேச்சுக்கு தலைமைச் செயலக ஊழியர் சங்கம் கண்டனம் தெரிவித் த்துள்ளது. இதுகுறித்து தலைவர் கு.வெங்க டேசன், செயலாளர் சு.அரிசங்கர் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது: மார்ச் 27ஆம் தேதி சட்டமன்றப் பேரவைக் கூட்டத்தொடரில், எதிர்கட்சித் தலைவர் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணை யம் வெளியிடப்பட்ட தொகுதி 4 தேர்வு முடிவுகளில் ஏற்பட்டுள்ள குளறுபடிகள் குறித்த கவன ஈர்ப்புத் தீர்மானத்திற்கு பதில் அளித்த நிதியமைச்சர் வெளிமுகமை மூல மாக பணியாளர்களை பணியமர்த்துவது குறித்து சில கருத்துக்களை தெரிவித்துள் ளார். முழு நேரப் பணியாளர்கள் பல லட்சம் ரூபாய் வாங்குகிறார்கள் எனக் குறிப்பிட்டு, அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மீதான தனது வெறுப்பை வெளிக்காட்டியுள்ளார். முழு நேரப் பணியாளர்களாக, அதாவது தமிழக அரசுப் பணியில் இருக்கும்
அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், யாரும் எந்த தனி நபரின் சிபாரிசின் மூலமாகவோ வேறு ஏதாவது குறுக்கு வழியிலோ அரசுப் பணிக்கு வந்தவர்கள் அல்ல; சில ஆயிரம் பணியி டங்களுக்கு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தினால் நடத்தப்பட்ட போட்டித் தேர்வுகளில் பல லட்சம் பேர் கலந்து கொண்டு அதில் தேர்வாகி அரசுப் பணிக்கு வந்தவர்கள். நிதி அமைச்சர் கூறு வதைப் போல பல லட்சம் ரூபாய் பணியில் சேரும் போது யாரும் வாங்குவதில்லை. 25 ஆண்டுகள் கடந்த பின்னர்தான், அதிலும் பதவி உயர்வு கிடைக்கும் போதுதான், 12 லட்சம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களில் சில ஆயிரம் பணியாளர்கள்தான் லட்சம் என்ற மாதாந்திர சம்பளத்தினை அடைந்துள் ளனர் போட்டித் தேர்வுகளில் தேர்வான முழு நேரப் பணியாளர்களை தற்காலிகப் பணியா ளர்களோடு ஒப்பிடுவது எந்த விதத்தில் நியாயம்? திமுக தேர்தல் அறிக்கையில், அரசுப் பணியில் 3.5 லட்சம் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும் என்ற வாக்குறுதிக்கு மாறாக, அவற்றை தனியார் முகமை மூலம் நிரப்பு வதுதான் நிதி அமைச்சரின் நோக்கமா? அதற்காகத்தான் தமிழக முதல மைச்சர் ரத்து செய்யப்பட்ட அரசாணை எண் 115இன் ஆய்வு வரம்புகளை மீண்டும் கொண்டுவர அமைச்சர் எத்தனிக்கிறாரோ? தமிழக முதலமைச்சர் உடனடியாக இந்த விஷயத்தில் தலையிட்டு, 69 விழுக் காடு இட ஒதுக்கீட்டின் அடிப்படையில், பணி யாளர்களை நியமனம் செய்து, சமூக நீதியை காத்திடுவதோடு, அரசுக்கும் அரசு ஊழியர் கள், ஆசிரியர்களுக்கான நல்லுறவைப் பாதுகாத்திட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.