states

விஷச் சாராய வழக்கு: செங்கல்பட்டில் விசாரணை

செங்கல்பட்டு, மே 25- செங்கல்பட்டு மாவட்டத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு விஷச்சாராயம் குடித்ததில் பெருங்கரணை கிராமத்தை  சேர்ந்த சின்னத்தம்பி, அவரது மாமி யார் வசந்தா உள்பட 8 பேர் பலியா னார்கள். மேலும் சின்னதம்பியின் மனைவி அஞ்சலை உள்ளிட்ட பலர் செங்கல்பட்டு அரசு மருத்துவ மனையில் சிகிச்சை பெற்றனர். இந்த விஷச்சாராய வழக்கு  விசாரணை சிபிசிஐடி காவல் துறைக்கு மாற்றப்பட்டது. மேலும், இது கொலை வழக்காகவும் மாற்றப் பட்டது. இந்த நிலையில்,விஷச்சாரா யம்தொடர்பாக விசாரணையை சிபிசிஐடி காவல்துறையினர் தொடங்கியுள்ளனர். முதல் கட்டமாக விஷச்சாராயம் குடித்து செங்கல் பட்டு அரசு மருத்து வமனையில் சிகிச்சை பெற்று வரும் அஞ்சலையிடம் வியாழனன்று (மே 25) காவல்துறை அதிகாரி மகேஸ்வரி விசாரித்தார். இதைத்தொடர்ந்து பெருங்கரணை கிராமத்தில் விசாரிக்க அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.