கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ளது சபரிமலை ஐயப்பன் கோவில். மண்டல காலப் பூஜைகளுக்காக சபரிமலை கோவில் வெள்ளியன்று மாலை திறக்கப்பட்டது. இந்நிலையில், சபரிமலை செல்லும் பக்தர்களுக்கு உதவும் வகையில் பூஜை நேரம், போக்குவரத்து வசதி உள்ளிட்டவைகளை தெரிந்து கொள்ள “சுவாமி சாட்போட்(Swami Chatbot)” எனும் செயலியை கேரள முதல்வர் பினராயி விஜயன் அறிமுகம் செய்து வைத்தார். ஏஐ (AI) தொழில்நுட்ப உதவியுடன் மலையாளம், தமிழ், கன்னடம், தெலுங்கு, இந்தி, ஆங்கிலம் ஆகிய 6 மொழிகளில் பக்தர்களின் சந்தேகங்களுக்கு பதிலளிக்கும் வகையில் இந்த செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது.