சென்னை, டிச. 8- வளர்ந்துவரும் செயற்கை நுண்ண றிவு, மின்சார வாகனங்கள் தயாரிப்பு உள்ளிட்ட துறைகளில் தமிழ்நாடு நாட் டின் தலைநகரமாக திகழ சென்னையில் வரும் மார்ச் மாதம் நடைபெறள்ள யூமேஜின் என்ற ஆசியாவின் மிகப் பெரிய தொழில்நுட்பம் மற்றும் புதுமை யான கண்டுபிடிப்பு உச்சி மாநாடு உதவும் என்று மாநில தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார். சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் அடுத்தாண்டு மார்ச் 23 ஆம்தேதி முதல் 25 ஆம்தேதி வரை நடைபெறவுள்ள இந்த மாநாடு குறித்த அறிவிப்பை சென்னை யில் வியாழனன்று (டிச.8) செய்தியா ளர்களிடம் வெளியிட்டு பேசிய அவர், தமிழகத்தில் வளமான மனித வளம் இருப்பதால் தகவல் தொழில்நுட்பம் உள்ளிட்ட துறைகள் முன்னிலையில் உள்ளதாக கூறினார். ஆர்டிபிஷியல் இன்டிலிஜென்ஸ் என்று அழைக்கப் படும் செயற்கை நுண்ணறிவு, மின் வாக னங்கள் உள்ளிட்ட துறைகளில் தமிழ்நாடு சிறந்து விளங்குவதற்கான உகந்த சூழல் மாநிலத்தில் உள்ளதாக வும் அவர் கூறினார். சர்வதேச முதலீட்டாளர்கள் இந்த துறைகளில் முதல் தலை முறை தொழில்முனைவோர் மற்றும் முதலீட்டாளர்களை இணைக்கும் வகையில் இந்த யூமேஜின் மாநாடு மற்றும் கண்காட்சி திகழும் என்றும் தமிழகத்தில் இந்த துறையில் சிறந்து விளங்கும் நிறுவனங்களில் முதலீடு செய்ய சர்வதேச முதலீட்டாளர்கள் மிகுந்த ஆர்வத்துடன் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
சர்வதேச முதலீட்டாளர்கள்
இந்த துறைகளில் முதல் தலை முறை தொழில்முனைவோர் மற்றும் முதலீட்டாளர்களை இணைக்கும் வகையில் இந்த யூமேஜின் மாநாடு மற்றும் கண்காட்சி திகழும் என்றும் தமிழகத்தில் இந்த துறையில் சிறந்து விளங்கும் நிறுவனங்களில் முதலீடு செய்ய சர்வதேச முதலீட்டாளர்கள் மிகுந்த ஆர்வத்துடன் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
10ஆயிரம் பிரதிநிதிகள்
பிரான்ஸ் நாட்டின் ஆதரவோடு இந்த மாநாடு நடைபெறவுள்ளதாகவும் வளர்ந்து வரும் துறைகளில் நிபுணர்க ளாக உள்ள 250க்கும் மேற்பட்டோர் இந்த மாநாட்டை யொட்டி நடைபெறும் கருத்தரங்குகள், பயிலரங்குகளில் பங்கேற்று உரையாற்ற உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். பத்தாயிரம் பிரதிநிதிகள் வருகை தருவார்கள் என்று எதிர்பார்ப்பதாக கூறிய அவர் 3 நாள் மாநிலம் முழுவதிலும் இருந்து வரும் மாணவர்கள் கண்காட்சியை பார்வையிட அனுமதிக்கப்படுவார்கள் என்றார்.
2ஆம் நிலை நகரங்களில் வளர்ச்சி
தமிழகத்தில் இருந்து கடந்தாண்டு ஒருலட்சத்து 90ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள தகவல்தொழில்நுட்பம் சார்ந்த ஏற்றுமதி நடைபெற்றதாகவும் மதுரை போன்ற 2 ஆம் நிலை நகரங் களில் கூட இந்ததுறையில் 30 விழுக்காடு வளர்ச்சி காணப்படு வதாகவும் கேள்வி ஒன்றுக்கு பதில் அளிக்கையில் அமைச்சர் தெரி வித்தார். தமிழ்நாடு மின்னணு கழக நிறு வனம் (எல்காட்) இந்திய தொழிற்கூட்ட மைப்பு (சிஐஐ) ஆதரவோடு நடை பெறும் இந்த மாநாட்டில் முதல் முறை யாக பூளு ஓஷன் விருதுகள் வழங்க ப்படவுள்ளதாக மாநில தகவல் தொழில்நுட்பத்துறை செயலர் நீரஜ் மித்தல் தெரிவித்தார். முன்னதாக சிஐஐ சென்னை மண்டல தலைவர் ஜெ.முருக வேல் வரவேற்றார். தமிழ்நாடு, புதுச்சேரிக்கான பிரான்ஸ் நாட்டின் தூதர் லிஸ் தால்போட் பாரே, இந்திய மென்பொருள் தொழில்நுட்ப பூங்கா இயக்குநர் சஞ்ஜெய் தியாகி உள்ளிட் டோர் இதில் பேசினர்.